வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

25.9.10

புதிய பிச்சை

சென்னை : மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக அரசுஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 10 சதவீதம் உயர்த்தி, முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இதேபோல, தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறுவோருக்கான சிறப்புப் படியும் உயர்த்தப்பட்டு உள்ளது. ஊழியர் சங்கங்கள் கோரிக்கை வைக்காமலேயே இந்த உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு, "லக்' அடித்துள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளித்து வந்துள்ள தமிழக அரசு, புதிய சம்பள விகிதத்தை அமல்படுத்தியதோடு, அந்த சம்பளத்தில் இருந்த முரண்பாடுகளையும் நீக்கி சமீபத்தில் உத்தரவிட்டது. இதே போல, இந்த ஆண்டு துவக்கத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டதும், எந்த சங்கமும் கோரிக்கை வைக்காமலேயே, தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 10 சதவீதம் உயர்த்த, சில நாட்களுக்கு முன் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இது தொடர்பாக, தமிழக அரசு ஊழியர் சங்கங்கள் ஏதும் அரசுக்கு கோரிக்கை வைக்கவில்லை. எனினும், முதல்வர் கருணாநிதியாக முன்வந்து, தமிழக அரசு ஊழியர்களுக்கும் 10 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ளார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப்படியை கடந்த ஜூலை 1ம் தேதியில் இருந்து உயர்த்தி அறிவித்துள்ளது. தமிழக அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் இந்த ஆண்டு ஜூலை 1ம் தேதியில் இருந்து 10 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க, முதல்வர் கருணாநிதி நேற்று உத்தரவிட்டுள்ளார். இதன்படி, தற்போது அடிப்படை சம்பளம் மற்றும் தர ஊதியத்தில் 35 சதவீதம் அகவிலைப்படியாக பெற்று வந்த ஊழியர்கள், இனி 45 சதவீதம் அகவிலைப்படியாக பெறுவர். இதனால், ஊழியர்களுக்கு அவர்களது சம்பளத்துக்கு ஏற்ப, 700 ரூபாயில் இருந்து 5,000 ரூபாய் வரை கூடுதலாகக் கிடைக்கும். உயர்த்தப்பட்டுள்ள இந்த அகவிலைப்படி, ஜூலை 1ம் தேதியில் இருந்து நிலுவையின்றி ரொக்கமாக வழங்கப்படும். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான நிலுவைத் தொகை, செப்டம்பர் மாத சம்பளம் வழங்கப்பட்ட பின்னரே வழங்கப்படும். இந்த உயர்வு, பகுதி நேர ஊழியர்களுக்கு பொருந்தாது. "அகவிலைப்படி உயர்வால், அரசுக்கு ஆண்டுக்கு 2,190 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்' என, அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மதிப்பூதியம், நிலையான ஊதியம், தொகுப்பூதியம் ஆகியவற்றை பெறுவோருக்கும் ஜூலை 1ம் தேதியில் இருந்து சிறப்புப் படியை உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, மாதம் 600 ரூபாய்க்குள் சம்பளம் பெறுவோருக்கு மாதம் 20 ரூபாயும், 600 ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறுவோருக்கு 40 ரூபாயும் கூடுதலாக வழங்கப்படும். இந்த சிறப்பு படி, உள்ளாட்சி பணியாளர்கள், ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குவோர் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கும் பொருந்தும். முதல்வர் அறிவித்துள்ள அகவிலைப்படி உயர்வை பாராட்டி, அனைத்து அரசு ஊழியர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்கள் அறிக்கை வெளியிட்டுள்ளன. தாங்கள் கேட்காமலேயே அறிவிப்பு செய்த முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளன.
Read More

23.9.10

இவர்களை என்ன செய்யலாம்?

"முதியோர் ஓய்வூதியம் கையாடல்"

முதியோர் 


















தமிழகத்தில் ஆதரவற்ற முதியோருக்கு 
வழங்கப்படும் ஓய்வூதியத்தை அஞ்சலக ஊழியர்கள் 
கையாடியிருக்கின்றனர் என்றெழுந்துள்ள 
புகாரை அடுத்து மத்திய புலனாய்வுத் துறையான
சிபிஐ போலீசார் சென்னையிலுள்ள சில அஞ்சலகங்களில் சோதனை நடத்தியுள்ளனர்.
சில ஊழியர்களிடம் தீவிர விசாரணையும்
நடத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆதரவற்ற முதியோருக்கு
மாதந்தோறும் 400 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
சென்னையில் மட்டும் 2.35 லட்சம் பேர்
இவ்வுதவித் தொகையினைப் பெறுகின்றனர்.
இவர்களில் பலருக்கு சரிவர அத்தொகை போய்ச் சேருவதில்லை,
தபால் ஊழியர்கள் தாங்களாகவே கையெழுத்திட்டு
அத்தொகையினை அபகரித்துக் கொள்கின்றனர்
என்று புகார்கள் எழுந்திருந்தன.
"ஓய்வூதியத் தொகையை அளிக்க
தபால்காரர்கள் லஞ்சம் பெறுகின்றனர்,
கொடுக்காவிட்டால் அலைக்கழிக்கின்றனர்,
சம்பந்தப்பட்ட நபரே இல்லை என்று
சொல்லி தொகையினைத் திருப்பி அனுப்பிவிடுகின்றனர்"
என்று இப்பிரச்சினையில் ஆர்வம் காட்டிவரும்
ஃபாக்ட் இன்டியா என்ற அமைப்பின்
ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன்
  தெரிவித்தார்.
"தொகை நேரத்திற்கு வருவதில்லை,
எப்போது வரும் என்று தெரியாத நிலை"
என்று பயனாளிகள் சிலரும் தெரிவிக்கின்றனர்.
தவறுசெய்வோர் மீது கடுமையான நடவடிக்கை
எடுப்பதன் மூலமே முதியோருக்கு இழைக்கப்படும்
அநீதியைத் தடுக்கமுடியும் என்று கோபாலகிருஷ்ணன் கூறுகிறார்.
இத்தகைய சி.பி,ஐ விசாரணை
குற்றம் புரிவோரை அடையாளம்
கண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க உதவும் என்று
அஞ்சல் துறைத் தலைவர் ராமானுஜம் தெரிவிக்கிறார்.

Read More

20.9.10

தமிழனுக்கு ரத்தம் கிடையாது

கருணாநிதியின் தமிழ் ரத்தம் எங்கே? பகீர் கேள்வி கேட்ட பஞ்சாபி

என் இளமை விடியும் முன்னரே முடியும் என்று யாருக்குத் தெரியும் வலி
மிகுந்த இந்தக் கவிதை வரிகளுக்குச் சொந்தக்காரர் பேரறிவாளன்!

ராஜீவ்காந்தி கொலையாளிகளுக்கு "பேட்டரி" வாங்கிக் கொடுத்ததாகக் குற்றம்
சாட்டப்பட்ட தூக்கு தண்டனைக் கைதி!

19-வது வயதில் "ஐந்து நிமிட விசாரணை" க்காகக் காவல் துறையால் அழைத்துச்
செல்லப்பட்டவர்.

இப்போது 39 வயதில் மரணத்தின் விளிம்பில் ஊசலாடிக்கொண்டு இருக்கிறார்.
அவர் சிறைக்கு சென்று 20 ஆண்டுகள் முடிந்துவிட்டதை நினைவுபடுத்தும்
நிகழ்ச்சி கடந்த வாரம் சென்னையில் நடந்தது.

தியாகு தலைமையில் நடந்த இந்த விழாவில் "மரண தண்டனைக்கு எதிரான சமூக
நீதிப் போராளிகள்" அனைவரும் ஆஜர். ஆனாலும் அனைவரின் கவனத்தையும்
கவர்ந்தவர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஜக்மோகன் சிங்!

பத்திரிகையாளரும், மனித உரிமை அக்கறையாளருமான ஜக்மோகன் சிங் தமிழர்
குறித்தும், தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் புள்ளி விவரங்களோடு பேசிய
ஆச்சர்யப் பேச்சுகள் இங்கே அப்படியே...

உலகமே ஊமையாகி நிற்க...ஈழத்தில் ஒட்டுமொத்தத் தமிழர்களையும் கொன்று
குவித்தார்கள்.   இன்னும் சில நாடுகள் நேரடியாகவே இலங்கைக்குப் போர் உதவி
செய்தன. கொடுமையிலும் கொடுமையாக,   அத்தனையையும் நாமும் வேடிக்கை
பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இனிமேலாவது, அடுத்தவனின்   வேதனைகளை
வேடிக்கை பார்ப்பதை விட்டுவிட்டு மனித உரிமைக்காக ஒன்றுசேர்ந்து குரல்
கொடுக்க வேண்டும்.  இன்று தமிழகத்தின் முதல்வராக கருணாநிதி இருக்கிறார்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டபோது,
2007 நவம்பர் 2-ம் நாள் கருணாநிதி தன் கவிதையில்,   இலங்கையிலே
கொல்லப்பட்டிருக்கிற அந்த வீரன் ஒரு தமிழன். அங்கே பாய்கிற ரத்தம் என்
தமிழர்களின் ரத்தம்" என்று எழுதியிருந்தார். இப்படி ஒரு கவிதை எழுதிய
அவரைப் பாராட்டி ஒரு கடிதம் எழுதினேன்.   ஆனால், இன்று என் கவலை எல்லாம்
"அந்த தமிழ் ரத்தம் இப்போது அவருக்கு எங்கே போனது?" என்பதுபற்றித்தான்!
இந்த விழாவைத் தலைமையேற்று நடத்தும் தோழர் தியாகு உட்பட மரணக்
கொட்டடியில் இருந்த 25 கைதிகளுக்கு 1974-ல் கருணாநிதிதான் தண்டனைக்
குறைப்பு வழங்கினார். தமிழக முதலமைச்சரை நான் கேட்டுகொள்கிறேன்..."இனி
தமிழ்நாட்டில் எவருக்கும் மரண தண்டனை

அறிவிக்கப்படாது" என்று இப்போதே அறிவிக்க வேண்டும். தமிழ்நாடு சட்டமன்றம்
மரண தண்டனைக்கு எதிரான ஒரு தீர்மானத்தை இயற்றி... மத்திய அரசுக்கும்,
குடியரசுத் தலைவருக்கும் அனுப்பிவைக்க வேண்டும்!

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை இன்று நாடே போற்றுகிறது. அவர்
ஜனாதிபதியாக இருந்தபோது "கருணை தொடர்பான கோப்புகள், பல அரசியல் கைதிகள்
தொடர்பான கோப்புகள்" உள்துறை அமைச்சகத்தில் இருந்து குடியரசுத் தலைவர்
மாளிகைக்கு நகர மறுத்துவிட்டன.

காரணம் தெரியுமா? குடியரசுத் தலைவர் அரசுக்கு எழுதிய ஒரு கடிதத்தில்,
"மரண தண்டனையை மறு திறனாய்வு செய்யுமாறு" கேட்டுக்கொண்டு இருந்தார்.
"நான் இந்த மரண தண்டனையை எதிர்க்கிறேன்" என்று அவர் திட்டவட்டமாகச்
சொல்லவில்லைதான். ஆனால் மனிதாபிமான
அடிப்படையிலேயே அவர் இதுபோல் கேட்டுகொண்டார்.

இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் நூற்றுக்கணக்கானவர்கள் தூக்கு மர
நிழலில் துன்புறுகிறார்கள். ஒரு மனிதனை, இன்னொரு மனிதன் கொலை செய்வது
எவ்வளவு கொடூரமானதோ...அதேபோல்தான் அரசு ஒரு தனி மனிதனைத் தூக்கில்
போடுவதும் தவறானது, அநீதியானது.

மரண தண்டனை என்பது என்ன?

கொலைக்குக் கொலை என்ற பழிக்குப் பழி வாங்கும்
காட்டுமிராண்டித்தனம்தானே!.

உலகில் 133 நாடுகள் முரண தண்டனையை ஒழித்துவிட்டன. இந்தியாவைக் காட்டிலும்
குற்றங்களின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கிற பிலிப்பைன்ஸ் நாட்டிலும்கூட
இந்தக் கொலை தண்டனையை அண்மையில் ஒழித்துவிட்டார்கள்.

ஆனால், "காந்தியம்" பேசும் நாம்தான் இன்னமும் மரண தண்டனையைப் பொத்திப்
பாதுகாத்து வருகிறோம்" என்றார் ஜக்மோகன் சிங் உணர்ச்சிப் பிழம்பாக!

த. கதிரவன்
சூனியர் விகடன்
=====

தமிழ்செல்வன் மரணத்திற்கு "கையறு நிலைப்பாடல்" எழுதிய கருணாநிதியை
பாராட்டி ஜக்மோகன் சிங் எழுதிய கடிதம்

Elegy to Tamilchelvan a great act of courage - Jagmohan Singh

http://worldsikhnews.com/7%20November%202007/Elegy%20to%20Tamilchelvan%20a%20great%20act%20of%20courage.htm

2009-ம் ஆண்டு போர் நிறைவிற்கு ஒரு மாதத்திற்கு முன்பு சார்லஸ்
ஆன்டனிக்கு ஜக்மோகன் சிங் எழுதிய கடிதம்

Whose Responsibility is it to protect?

http://worldsikhnews.com/22%20April%202009/Whose%20Responsibility%20is%20it%20to%20protect.ஹதம்
Read More

14.9.10

தமிழச்சிகளே கவனிக்கவும்

பேஷன் என்ற பெயரில் ருத்திராட்ச மாலையில் பிளாஸ்டிக் தாலியை கோர்த்து நடிகை குஷ்பு அணிந்திருக்கிறார். நடிகை குஷ்புவின் கணவரும், டைரக்டர் கம் நடிகருமான சுந்தர் சி நடித்திருக்கும் புதிய படம் நகரம். குஷ்புவின் அவ்னி சி‌னிமேக்ஸ் நிறுவன தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் ‌நடந்தது. இந்த‌ விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு இசையை வெளியிட்டார். நிகழ்ச்சியில் துணைமுதல்வர் ஸ்டாலின், கனி‌மொழி எம்.பி., அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பரிதி இளம்வழுதி, நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து, தயாரிப்பாளர் சங்க தலைவர் இராம.நாராயணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தாலும்... அனைவரையும் கவர்ந்திழுத்தது நடிகை குஷ்புவும் அவர் அணிந்திருந்த பிளாஸ்டிக் தாலியும்தான்.

ருத்திராட்ச மா‌லையில் பிளாஸ்டிக் தாலியை ‌கோர்த்து அணிந்திருந்தார் குஷ்பு. பேஷன் என்ற பெயரில் அவர் ருத்திராட்ச மாலையுடன், பிளாஸ்டிக் தாலியை கோர்த்து அணிந்திருந்தது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிலரை முகம் சுழிக்க வைத்தது. இதற்கு முன்பு சினிமா விழா மேடையில் அமைக்கப்பட்டிருந்த அம்மன் சிலை முன்பு நடிகை குஷ்பு செருப்பு அணிந்தபடி கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த விவகாரத்தை இந்து அமைப்புகள் கடுமையாக கண்டித்தன. பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததால் மன்னிப்பு கேட்டு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் குஷ்பு.

இப்போது பேஷன் என்ற பெயரில் அவர் அணிந்திருந்த பிளாஸ்டிக் தாலியும், ருத்ராட்ச மாலையும் புதிய சர்ச்சையை கிளம்பியிருக்கிறது. தமிழ் பெண்கள் கற்பு குறித்து பேட்டியளித்து வில்லங்கத்தில் சிக்கிய குஷ்பு சுப்ரீம்கோர்ட் வரை சென்றதும் நினைவிருக்கலாம்.
Read More

8.9.10

வரி விளம்பரம்

Read More

1.9.10

நான் மாக்கான் அல்ல

வேலூர்: ""வரும் சட்டசபை தேர்தலில் பா.ம.க., தலைமையில் புதிய கூட்டணி உருவாகும்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

ஆல்பம்

திருப்பத்தூரில்  அவர் நிருபர்களிடம்  கூறியதாவது:தமிழக அரசு சத்துணவு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அவர்களை போராட்டத்தில் கைது செய்து மண்டபங்களில் அடைத்து வைத்தும், பணி நீக்கம் செய்வதும் கண்டிக்கத்தக்கது. ஸ்ரீ பெரும்புதூர் அருகே 25 கிராமங்களை அப்புறப்படுத்தி விட்டு சென்னை, "கிரீன் பீல்டு' விமான நிலையம் அமைக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர்.  மக்களின் வாழ்வாதாரங்களை அழித்து விட்டு, விளை நிலங்களை பறித்துக் கொண்டு, விமான நிலையம் அமைக்க வேண்டாம் என போராட்டம் நடத்தியவன் நான்.விமான நிலையம் அமைக்க குறுக்கே சில சக்தி வருவதாக கூறுகின்றார். அவர் என்னை தான் சொல்கிறார். விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து டில்லி மற்றும் ஒரிஸாவில் எல்லாம்  ராகுல் பேசியுள்ளார். அப்படியானால் வளர்ச்சிக்கு எதிரானவர் என ராகுலை சொல்ல முன் வருவாரா முதல்வர்?

மேலும் விமான நிலையம் அமைக்க மக்கள் ஆதரவு தெரிவிக்கின்றார்களா என்ற விபரம் அறிய மக்களிடம் தமிழக அரசு வாக்கெடுப்பு நடத்த வேண்டும். ஏற்கனவே ஸ்ரீ பெரும்புதூர் பகுதியில் விமான நிலையம் அமைக்க 13 ஆண்டுகளுக்கு முன் முயன்றனர். தற்போது, அந்த இடங்கள் அரசியல்வாதிகளின் பினாமி பெயரிலும், வேறு மாநிலத்தவராலும் கையகப்படுத்தப்பட்டுள்ளதால், அந்த இடத்தில் விமான நிலையம் அமைக்க முடியாமல் போனது.தமிழகத்தில் ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்போது தான் 69 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும். பாலாறு பிரச்னையில் நீதி மன்றம் தற்போது கொடுத்துள்ள வாய்ப்பை பயன்படுத்தி தமிழக அரசு அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இலங்கையில் ஈழ நாடே அறிவிக்கப்பட்டு விட்டது. இனி தமிழகத்தில் நான் உட்பட யாருமே அதைப் பற்றி பேச அருகதை இல்லை. இலங்கைக்கு வெளியுறவுத்துறை செயலர் நிருபமா ராவ் சென்று ஒன்றும் ஆகப் போவதில்லை. தமிழ் மக்கள் அங்கு நான்காம் தர குடி மக்களாக உள்ளனர். அவர்களுக்கு உரிய அரசியல், அதிகாரம் மற்ற உதவிகள் கிடைக்க உலக நாடுகள் முன் வந்தால் ஒழிய ஒன்றும் செய்ய முடியாது.வேலூர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக அறிவிக்க கோரி என் தலைமையில் அக்டோபர் மாதம் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.தமிழகத்தில் வன் முறையைத் தூண்டும் அரசியல் கட்சிகள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கட்டும். தமிழகத்தில் பல்வேறு புரட்சிகள் ஏற்பட்டுள்ளது போல இப்போது போதை புரட்சி ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு 39 வகையான மது வகையை அறிமுகப்படுத்தி உள்ளது. நான்கு புதிய மதுபான ஆலைகள் துவங்கவும் அனுமதி வழங்கி உள்ளது. இதனால் மக்கள் குடிப்  பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். வரும் 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ம.க., தலைமையில் புதிய கூட்டணி உருவாகும். இந்த தேர்தலில் பா.ம.க., ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Read More

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena