வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

27.11.10

அறிந்தும் அறியாமலும்

அன்று :
          அப்போது நான் 10 ம் வகுப்பு படித்துகொண்டிருந்தேன் .அன்று வழக்கம் போல் ஸ்கூலுக்கு சென்று கொண்டிருந்தேன் .அது ஒரு மெட்ரிக்குலேசன் பள்ளி .பள்ளியின் உள்ளே செல்கிறேன் .
" டேய் மாப்ளே என்னடா வண்டில வந்துருக்க " நவீன்
"அண்ணே வண்டி டா ஊருக்கு போய்ட்டான் அதன் கொஞ்சம் கெத்தா  இருக்கட்டும்னு வண்டில வந்தேன் "
இன்னொரு நண்பன்  விஜய் வருகிறான்
"என்னடா டெய்லி லேட்டா வர்ற  அந்த மாநகராட்சி ஸ்கூல் பொண்ண விரட்டிக்கிட்டு போனியாக்கும் "
"டேய் இவன் வேஸ்ட்ரா  இவானவுது அந்த பிள்ளையை கரெக்ட் பண்றதாவுது " நவீன்
"டேய் மணி அனிதா போறடா "
"ஏய் அனிதா "
கூபிடுரோம்ல ஒம்பாட்டுக்கு போரவ சரி என்ன சாப்பிட வச்சிருக்கிரவ"
"அதெல்லாம் கொடுக்க முடியாது "அனிதா
"என்னது குடுக்க முடியாதா நேத்து ஓம் பேக்ல பாத்த மேட்டர ஸ்கூல் புல்லா பரப்பி விட்ருவேன் "
கோபமாக என்னிடம் டிபன் பாக்சை குடுத்தாள்
"இன்னிக்கும் அதே வறட்டு சப்பாத்தி தான சரி நி போ நாங்க சாப்பிட்டு கிளாஸ்ல டிபன் வந்து குடுக்கிறோம் "
"என்னடா அது பேக்ல பாத்த " நவீன்
"என்னடா விஜய் சொல்லிடுவோம "
"வேணாம்டா இவன் ஊரெல்லாம் பரப்பி விட்ருவான் "விஜய்
"சும்மா சொல்லுங்கடா "நவீன்
"டேய் அதாண்டா அந்த பொம்பளைங்க சமாச்சாரம்"விஜய்
"ஒ அதுவா "நவீன் 
"சரிஇன்னிக்கு முத பிரியட் யாரு "
"அந்த மூக்கு நோண்டி வாத்திடா  "விஜய்
"அந்தாளு பொண்டாட்டி ஓடிபோனதுக்கு நம்ம உயிரை வாங்ராண்டா "
"ஏன்டா அந்தாளு பொண்டாட்டி ஓடி போச்சு "விஜய்
"ம்ம் இந்த ஆளு  தெனமும் நைட் மூக்க மட்டுமே நோண்டிட்டு இருந்திருக்கான் அதான் ஓடிபோயடுச்சு "
கூட்டாக சிரித்தோம் .கிளாஸ் வந்தது உள்ளே சென்றோம்
 இங்கிலீஷ் மாஸ்டர் உள்ளே வந்தார்


boys  and girls 
next week  annual cum public   exam  ஸ்டார்ட் ஆகா போகுது நல்ல பிரிப்பர் பண்ணீட்டிருக்கீங்களா"


கோரசாக எல்லோரும் எஸ் சார் என்றோம்
"உங்க எல்லோருக்கும் இன்னொரு அனௌன்ஸ் மென்ட் வந்திருக்கு "
"பக்கத்தில இருக்கிற அருள் மலர் கான்வென்ட்தான்  உங்க எல்லாத்துக்கும் சென்ட்ரா போட்ருக்கு "
"என்னடா அங்க போட்ருக்காயிங்க"
"டேய் அங்கதாண்டா ஓம் முன்னால் டைவா படிக்குது "விஜய்
"யாருடா "நவீன்
"டேய் எய்த் ஸ்டான்டர்ட்ல படிச்சுச்சுள்ள அதாண்டா ரம்யா "விஜய்
"ஓ அவளா அவ அங்கையா படிக்கிறா அவ அப்பயே  ஆளு கும்முன்னு இருப்பா எப்படியாவது கரெக்ட் பண்ணிடனும் இந்த அனிதா படியமாட்டா "
"ஆமாட இந்த பப்ளிக் எக்சாம்ல பாஸ் பண்ணிடுவியா "நவீன்
"அதுனால என்ன நாம ப்ரின்சி கிட்ட காச குடுத்தபோதும்  பேப்பர  சேஸ் பண்ணி பாஸ் பண்ணி விட்ருவான் "
"நீ பண்ணுவ நாங்கலாம் படிச்சாதான் பாஸ் பண்ண முடியும் "நவீன்
"டேய் அழுகாத டா  நா இருக்கேன்ல நா பாத்துக்கிறேன் "


பப்ளிக் எக்ஸாம் தொடங்கியது அருள் மலர் கான்வென்ட்
"டேய் மாப்ள என்னைய அந்த கடேசில தூக்கி  போட்டாங்கே டா  நீ எங்கடா  "நவீன்
"டேய் அதுகெடக்கட்டும்ட எங்கடா அவளா காணோம் "
"டேய் அப்படியே மெதுவா திரும்பி பாரு படில வந்துட்டு இருக்கறா பாரு "விஜய்
நான் மெதுவாக திரும்பி பார்த்தேன் முன்னைக்கு இப்போது கொஞ்சம் பெருத்திருந்தாள்
நான் அவளிடம் நேராக சென்று
"ஹாய் "என்றேன்
அவள் என்னை யாரென்று தெரியாத மாதிரி பார்த்தாள்
"ஹேய் ரம்யா என்னை ஞாபகமில்லையா "
" ஹேய் மணி நீயா இப்ப மீசை வச்சு பெரியாளு மாதிரி இருக்கியா அதான் அடையாளம் தெரியல சரி எங்க ஸ்கூல்ல  என்ன பண்ற "ரம்யா
"இங்க தான் எக்ஸாம் செண்டர் "
"ஒ அப்படியா எக்ஸாம் லாம் எப்படி பிரிப்பர் பன்னிரிக்க "ரம்யா
"அது பண்ணீருக்கேன் "
" ஏய் ரம்யா இப்ப முன்ன விட  நீ ரொம்ப அழகா இருக்க "
"ம்ம் அப்படியா நா அழகா இருக்கென இல்லியா லாம் எக்ஸாம் ல கேட்டுகிட்டு இருக்க மாட்டாங்க ஒழுங்கா எக்ஸாம் எழுதி பாஸ் பண்ற வழிய பாரு "
"என்ன டா மாமா கிளி சிக்காது போல "நவீன்


"டேய் பொண்ணுங்க எப்பவுமே ஆரம்பத்துல்ல இப்படிதாண்டா  பிகு பன்னுவாலுக பாத்துக்குவோம் "
எக்ஸாம் பெல் அடித்தது எல்லோரும்  எக்ஸாம் ஹாலுக்கு சென்றோம் 
"ரம்யா "
"என்ன "
"நா ஸ்ட்ரைட்டாவே விசயத்துக்கு வரேன் நா உன்னைய லவ் பண்றேன்   I  LOVE  YOU "
"இந்த மாதிரில்லாம் என்கிட்டே பேசாத இதன் உனக்கு லாஸ்ட் வார்னிங் இனிமே இந்த மாதிரி டார்ச்சர் பண்ண எங்க ஸ்கூல்ல கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன் "ரம்யா 
இரண்டு நாள் ஆனது 
"டே  நாள களிச்சோட எக்ஸாம் முடியுது அவ என்னடா சொல்றா "விஜய் 
"இன்னைக்கு எக்ஸாம் முடியட்டும் "
எக்ஸாம் முடிந்ததது 
"டேய் சைக்கிள் எடுற அவ பின்னாடிய போவோம் "
"போயி "நவீன் 
"டேய் வாடா தம்மு வாங்கி குடுக்கிறேன் கூட வர்ற ஜெயசங்கரியை வேணும்னா நீ கரெக்ட் பண்ணுடா "
"டேய் என்னக்குனு ஒரு டேஸ்டே இல்லேன்னு நெனச்சிகிட்டியா அதெல்லாம் போய் எவனவுது பாப்பானாடா "நவீன் 
"சரி சரி வா அவளுக கெளம்பீட்டாலுக  பாரு "
பின்  புறமாக சென்றோம் திடிரென்று ரம்யா சைக்கிளை நிறுத்தினாள்
"எதுக்கு ஏன் பின்னாடியே வர்றீங்க " ரம்யா கோபமாக கேட்டாள்
"நீதான் ஓகே சொல்ல மாட்டேன்கிறேல அதான் "
"அதுக்கு இப்படி பின்னாடியே வந்தா ஓகே சொல்லீடுவேனா "
"ஏன் என்னைய உனக்கு புடிக்கைலையா  "
"சரி நாளைக்கு எங்க வீட்டுக்கு வா யாரும் இருக்கமாட்டாங்க "போய்விட்டாள்


"டேய் மாப்ள சிக்கீடுச்சுபோல தம்ம மட்டும் வாங்கி கொடுத்து டென்சன் ஆக்காத ஒழுங்கா பீர் வாங்கி குடு "
"சரி வா போவோம் "
அடுத்த நாள் 


சுசுகி சமுராய்யில்    ஜம்பமாக சென்றேன் அவளது வீட்டின் முன் நிறுத்தி ஹாரன் அடித்தேன் வெளியில் வந்தாள் 
கேட்டை திறந்து என்னை உள்ளே அழைத்தாள் அவள் வீட்டு  நாய் என்னை பார்த்து குரைத்தது.வீட்டில் யாரும் இல்லையா என்றேன் யாரும் இல்லை என்றாள்.
சோபாவில் அமர சொன்னாள் .அமர்ந்தேன் .
"அப்பறம் என்ன சாப்பிடுற "ரம்யா
" ம்ம் bournvita  இருக்கா"
மாடி படியில் இருந்து யாரோ இறங்கி வரும் சத்தம் கேட்டது .
"யாரும்மா இது "
"என் கிளாஸ் மேட ப்பா"
"உன் பேரென்னப்பா "
"ம ம ம மணிவண்ணன் அங்கிள்  " என் கால்கள் லேசாக நடுங்கியது
"சரி நா வரேம்மா தம்பிக்கு  ஏதாவுது சாப்பிட குடு "
"எங்க அப்பா போலீஸ் இன்ஸ்பெக்டர்"   ரம்யா 
"வீட்ல யாரும் இல்லைன்னு சொன்னியே "
"ஆமா சொன்னேன் இங்க பாரு எனக்கு அம்மா கிடையாது போன வருசத்தான் இறந்தாங்க .அவுங்களோட ஆசை நா எப்படியவுது படிச்சு நல்ல பெரிய  டாக்டர் ஆகணும்க்ரதுதான் .எங்கம்மா ஆசை தான் என் ஆசையும் .உன்ன மாதிரி பொறம்போக்கு எல்லாம் என்னால லவ் பண்ண முடியாது .என்ன புரிஞ்சுச்சா"   ரம்யா 
"இல்லை ரம்யா என்ன சொல்ல வர்றேனா "
"பொறம்போக்குனு  திட்டியும் உனக்கு புத்திவர்லேல  அண்ணா"என்றாள்
கடா மாடு மாதிரி ஒருத்தர் உள்ளேருந்து வந்தார் 
"இவருதான் எங்க அண்ணா ரமேஷ் மிலிடரிலருந்து  லீவுல வந்திருக்கார் "
"அண்ணா இவன் என்ன சொன்னாலும் கேக்க மாட்டேங்கறான் "என்றாள் 


வந்தார் என் சட்டையை பிடித்து கொத்தாக தூக்கி கன்னத்தில் மாறிமாறி ஐந்து முறை அடித்தார் .எனக்கு தலை சுற்றுவது போல் இருந்தது ரம்யாவும்  அவள்  அண்ணனும் எனக்கு மங்கலாக தெரிந்தனர். என் வலது  கையை தூக்கினேன் கையோடு சேர்ந்து ஐந்து கை வந்த மாதிரி இருந்தது .ஐந்து நிமிடத்திற்கு பிறகு தெளிந்தேன் .என்னை வெளியில் போக சொன்னாள் .வெளியில் வந்தேன் நாய் குரைத்தது .நல்ல வேளை நாயை விட்டு கடிக்கவிடவில்லை என்று சந்தோசப்பட்டு தலையை தொங்க போட்டு கொண்டு வெளியில் வந்தேன் 
===================================================================================
இன்று :
               நேற்று பணி நிமித்தமாக  வெளியூர் சென்று ஊர் திரும்பி கொண்டிருந்தேன் பஸ்ஸில் இடதுஒரத்தில் அமர்ந்திருந்தேன் .
"டேய் மணி  அந்த மாமா பக்கத்துல்ல இடமிருக்கு பாரு அங்க உக்காரு "என்று குரல் கேட்க்க நிமிர்ந்து பார்த்தேன் 
"அம்மா நா ஜன்னல் ஓரத்துலதான் உக்காருவேன் "
கையில் ஒரு சிறுவன் இடுப்பில் ஒரு பெண் குழந்தையுடன் ரம்யா நின்றுகொண்டிருந்தாள்
நான் எழுந்தேன் 
"நீங்க உக்காருங்க "என்றேன் 
"இல்லை வேணாம் நீங்களே உக்காருங்க "
சிறுவன் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்துவிட்டான் 
"சரி அப்படினா குழந்தையாவது குடுங்க " என்றேன் அந்த பெண் குழந்தை அப்படியே அவள் சாயலில் இருந்தது 
அவ்வப்போது என் கண்களும் அவள் கண்களும் சந்தித்து கொண்டன 






Read More

23.11.10

அலோபதி மருத்துவர்களும் மருந்து கம்பனிகளின் வன்முறைகளும்


             மருத்துவம் அதன் முறைகளும் எப்போது தோன்றியது ? ஆதிகாலத்தில் மனிதனுக்கு ஏற்பட்ட  பய உணர்வின் காரணமாக மருத்துவம் தோன்றி இருக்கலாம் .
இன்று ஆலோபதி மருத்துவத்துறை மிக பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது .மருத்துவர்களை கடவுளாக எண்ணுகிறோம் .ஆனால் மருத்துவத்துறை இன்றைக்கு மனிதனை மனிதத்தோடு அணுகி அவனது நோய்களுக்கு தீர்வளிக்கிறதா என்றால் சத்தியமாக இல்லை .இது ஒரு கடுமையான விமர்சனம் . இந்த விமர்சனம்  நல்ல மருத்துவர்களை பற்றி அல்ல
.
சுஜாதாவின் நகரம் சிறுகதையில் மருத்துவர்களை பற்றியும் குறிப்பாக அரசாங்க மருத்துவமனையை  பற்றியும்  எழுதிருப்பார் .அந்த கதையை படிப்பவர்கள் கண்டிப்பாக  கடைசியில் ஒரு சொட்டு கண்ணீர் விடுவார்கள் . இன்றைக்கு மருத்துவர்களை பற்றி  ஜோக்ஸ் எழுத  ஒரு கூட்டமே உள்ளது
.
சமீபத்தில் எனக்கு இருமருத்துவர்களிடம் நேர்ந்த அனுபவம்

முதலாவது . தீபாவளிக்கு இருதினங்களுக்கு முன் கொஞ்சம் கடுமையான காய்ச்சலாக இருந்தது . அருகினில் இருக்கும் டாக்டர் தேடிபார்த்தேன் ஒருவரும் இல்லை .காலையில் முழுவதும் அரசாங்க மருத்துவ மனையில் வேலை  .மாலை சேவை என்ற பேரில் அப்பாவி மக்களிடம் பணம் வசூலித்தல் . அதுவரைக்கும் பொறுக்க முடியாது என்று இரண்டு  பெரசிடாமால் வாங்கி சாப்பிட்டேன் . கொஞ்சம் தெளிவாக இருந்தது .
மாலையில் ஓர அளவிற்கு சரியாகிவிட்டது .இருந்தாலும் டாக்டரிடம் சென்றேன் .
என்னுடைய சுற்று வந்தது போனேன் .மிக சரியாக சொல்லவேண்டுமென்றால் உள்ளே இரண்டே நிமிடம் இருந்திருப்பேன் உள்ளே போனவுடன்.என் உடம்பிற்கு என்ன செய்கிறது கேட்டார் கூறுவதற்குள் செதாஸ் ச்கோப்பை நெஞ்சிலும் முதுகிலும் வைத்துபாத்தார் .பின்பு வாய்க்குள் லைட் அடித்துபார்த்தார் .நர்சை அழைத்தார் .கேலினோவோ   பிளினோவோ  என்றார் .அந்த நர்ஸ் என்னை அடுத்த ரூமிற்கு வரச்சொன்னார் .
நானும் ஆவலுடன் சென்றேன். குப்பற அடித்து படுக்க சொன்னார் .நறுக்கென்று ஒரு சைடில் குத்து குத்தினார் .(டாக்டர் தீபாவளிக்கு போனஸ் குடுக்கவில்லையா என்று கேட்கலாமா என்று நினைத்தேன் )இன்னொரு சைடிலும் போடணும் என்றார் (நல்ல வேளை கேட்ருந்தா என்ன ஆகிருக்கும்)
எனக்கு இங்கே ஒரு சிறு சந்தேகம் .கிளினிக் ,சின்ன மருத்துவ மனைகளில் , வேளை பார்க்கும் நர்சுகள் முறையாக நர்சிங் படித்தவர்கள் இல்லை .அப்படி முறையாக படித்தவர்களை வேலைக்கு  வைத்தால் அவர்களுக்கு சம்பளம் அதிகமாக கொடுக்கவேண்டும் .அதனால் 10 ம் வகுப்போ அல்லது 12  ம் வகுப்போ படித்த ஏழை பெண்களை வேலைக்கு அமர்த்தி அவர்களுக்கு நர்சிங் வேலைகளை மேம்போக்காக சொல்லி கொடுத்து 1000 மோ ,2000 மோ சம்பளம்  நிர்ணைத்து வைத்துகொள்கிறார்கள்.அவர்களும் நோயாளிகளை மேலும் நோயாளிகளாக்கி நர்சிங் படிப்பை படிக்காமலே நர்சிங் தொழிலை கற்று கொள்கிறார்கள் . இது உண்மையா ?

இந்த மருத்துவசிகிச்சைக்கு பீஸ் 200 ருபாய் .இவர்களிடமே மருந்து வாங்க வேண்டும் அதற்க்கு 250  ரூபாய்  .இந்த மருத்துவரிடம் சென்றால் நோய்க்கு  உடனடியாக தீர்வு கிடைக்கும் .அப்படி தீர்வு கிடைத்தால் அவர்கள் நல்ல மருத்துவர்கள் .மக்களின் அறியாமைக்கு ஒரு வழிசொல்லுங்கள் மருத்துவர்களே .அதென்ன உடனடி தீர்வு?

இரண்டாவது  சுமார் ஒரு மூன்று மாதங்களுக்கு முன் ENT ஸ்பெசலிஸ்ட் டாக்டர் பார்க்கநேர்ந்தது .தலைகுத்தலாகவும்  இட காதில் வலி  இருந்தது எனக்கு பொதுவாக இப்படி தலைகுத்தியது கிடையாது (ஏனென்றால் விஜய் படம் பார்ப்பதில்லை) .சரி டாக்டரிடம் சென்று பாப்போம். போனேன் (போகாமலே இருந்திருக்கலாம் ) .
உள்ளே சென்று என்ன பிரெச்சனை  என்று கூறினேன் .பரி சோதித்துப்பார்த்தார்.காதிற்குள் ஒரு கருவியை விட்டார் அது பக்கத்தில் உள்ள டிவி ஸ்க்ரீனில் காதிற்குள் என்ன உள்ளது என்பதை படமாக காட்டியது.ஒன்னும் பிரெச்சனை இல்லை நான் கொடுக்கும் மருந்தினை சாப்பிடுங்கள் சரியாகிவிடும் என்றார் .reception  ல்
பீஸ் கொடுக்க சொன்னார் .அங்கே சென்றால் மருந்து நீங்கள் இங்கே தான் வாங்க வேண்டும் என்றார்கள். மொத்தம் 800 ரூபாய் கொடுக்க சொன்னார்கள் (ஐயையோ காது வலிபோய் நெஞ்சு வலி வந்துடுச்சே )அதையும் அழுதேன் . 
கடும் மன உளைச்சலாக  இருந்தது

சில நாட்கள்  கழித்து நண்பர் ஒரு வரை சந்தித்தேன் .அவர் மும்பையில்  உள்ள மருந்து கம்பெனிக்கு இங்கே வேலை பார்த்துகொண்டிருந்தார் .அவரிடம் நடந்ததை கூறினேன் .
பொது வாக மருந்து கம்பனிக்களுக்கும் மருத்துவர் களுக்கும் ஒரு உடன் பாடு உண்டு .மருந்து கம்பனிகள் என்ன மருந்து தயாரிக்கிறதோ அதைதான் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு கொடுக்க வேண்டும் .அதற்கு மருத்துவர்கள் தனியாக கவனிக்க படுவார்கள் .
அதாவுது வீரியம் உள்ள மருந்தை தயாரித்து கொடுத்தால் நோயாளிகள் விரைவாக குணமாகிவிடுவார்கள் .அதனால் மருந்து விற்பனை பாதிக்கப்படுமாம்.ஆகவே மருந்து கம்பனிகள் எப்போதும் தரம் சற்று குறைவாக உள்ள  மருந்தை தான் தயாரிக்குமாம்
பின்பு ஒரு செய்தி கூறினார் .மிரண்டு போனேன்
எந்த ஊரிலாவுது மருந்து விற்பனை சரியாக இல்லையென்றால் . அங்கே மிக பெரிய கம்பனிகள்(அதாவுது அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற கம்பனிகள் ) காற்று மூலமாக கிருமியை பரப்பி விடுமாம் .பிறகு பன்னிகள் மீதும் பறவைகள் மீதும் பலியை போட்டுவிடுமாம் கேட்பதர்க்கு  கொஞ்சம் அதிர்ச்சியான செய்தியாக தான் இருந்தது . இது ஒரு மருந்து  கம்பனியில் வேலை பார்ப்பவர் கூறியது.
இதுவும் ஒரு வகையில் வன்முறைதானே.
Read More

21.11.10

அத்த மக

                எனக்கும் என் அத்த பொண்ணுக்கும் ஒரு வாரந்தான் வயசு வித்யாசம் .என் அத்த பொண்ணு பேரு ரத்தினகுமாரி .அவள நானு ரத்தினுதான்  கூப்பிடுவேன் எங்க அப்பாவோட கூட பிறந்த தங்கச்சி மவ .எனக்கு ரத்தினத்த ரெம்ப புடிக்கும் .அவளுக்கும் தான். .ரத்தினத்துக்கு ரெண்டு அக்காவும்  ஒரு அண்ணே இருக்கான் .நாங்க எல்லோரும் ஒன்னா சேந்து விளையாடுவோம் .நான்தான் ராஜா ரத்தினம்தான் ராணி.அந்த ரெண்டு அக்காவும் சேந்து ரத்தினத்தா தூக்கிட்டு போய்டுவாங்க .நா போய் அவுங்க கூட சண்ட போட்டு என் ராணியை தூக்கிட்டு வந்துடுவேன் . எனக்கு இந்த விளையாட்டு ரொம்ப புடிக்கும்
Read More

19.11.10

சூப்பர் ஸ்டாரின் சூப்பர் 10 படங்கள்

                        ரஜினியின் மகளாக நடித்து ,அதே நடிகை ரஜினிக்கு ஜோடியாக நடித்து ,இப்போது இளம் ஹீரோக்களுக்கு அக்காவாக நடித்து கொண்டிருக்கிறார் .ஆனாலும் இன்னும் நம்ம சூப்பர் ஸ்டார் ஒரு ஹீரோ தான் .அதே நடிகை ரஜினிக்கு அம்மாவாகவோ இல்லை மாமியாராகவோ நடித்தாலும் நான் ஆச்சிரியபடமாட்டேன் .அதாங்க ரஜினியோட மாஸ் .
   நான் ஸ்கூலில் படிக்கும் போது வருடம் வருடம் நடக்கும் ஆண்டுவிழாவில் கடைசி பாட்டாக கண்டிப்பாக ரஜினி பாட்டு இருக்கும் ,அதில்   பணக்கார வீட்டு பிள்ளைகள் ஹீரோ ஹீரோயனியாக டான்ஸ்   ஆடுவார்கள்  ,என்னை போன்ற அடிபொடிகள் ஹீரோவாக ஆடுபவருக்கு  பின்னால் ஆடுவோம் , ப்ராக்டிஸ் ல சொல்லி குடுத்தமாதிரி ஆடலனா அடி பின்னி எடுத்துவிடு வாரு அந்த ஆளு (டான்ஸ் மாஸ்டர்),ஒழுங்கா படிக்கலனாகூட பிற வாத்தியார்கள் இந்த மாதிரி அடித்திருக்கமாட்டார்கள் ,தூணில் முட்டவைப்பார் ,காலால் எட்டி உதைப்பார் ,கெட்டவார்த்தையால் திட்டுவார் ,இப்படியெல்லாம் அடிவாங்கி சூப்பர் ஸ்டார்  பாட்டுக்கு ஒரு ஓரமாக ஆடிய என்னை ரஜினியின் பிடித்த படங்கள் தொடர் பதிவுக்கு அழைத்த அஞ்சா சிங்கம் ,நாயை ஏமாற்றி தேங்காய் தின்றாலும் தமிழக மக்களை ஏமாற்றாத தன்மான சிங்கம் அம்மாவாசை என்கிற நாகராஜாசோழன்  M .A அவர்களுக்கு நன்றியுரைத்துவிட்டு பதிவிற்குள் செல்கிறேன் (நீங்களும் வாங்க )


சூப்பர் ஸ்டாரின் சூப்பர் 10  படங்கள் :
 










10 . பாபா :
ரஜினி என்கிற மந்திரத்துக்காக இந்த படத்தை நான் நான்கு தடவை பார்த்தேன் .காமா சோமா வென்று மேக்கப் , அழுத்தமில்லாத கதை , இருந்தாலும் சூப்பர் ஸ்டாருக்காக சூப்பரா இருக்கு சொல்லி திரிந்தவன் .காருக்குள் வில்லனிடம் பேசும் காட்சி ரெம்ப பிடிக்கும் .சாயாஜிஷிண்டே பேசும் வசனங்கள் எல்லாம் ரஜினி எழுதி கொடுத்தது என்று கேள்வி .காலால் கடப்பாறையை வளைப்பது சூப்பராக இருக்கும் .ரம்யா கிருஷ்ணன் டைம் கேட்க்கும் காட்சியும் மகா அவதார் பாபாவுடானான காட்சியும் எனக்கு பிடித்தவைகள் (இந்த படத்தை போய் பிடிக்கும் என்று கூறுகிறானே இப்படி நிறைய பேர் நினைக்கலாம் .பொதுவாக ரசனைகள் ஒவ்வொருவருக்கும் வேறு படும் என்று மிக தாழ்மையுடன் கூறி கொள்கிறேன் )
 












9 . சந்திரமுகி :        
லகலக லக லக , வேட்டையனுக்காகவே இந்த படத்தை எத்தனை தடவை வேண்டுமானாலும் பார்க்கலாம் .திருமதி ஜோதிகாவின் நடிப்பும் ,வடிவேலு வின் வெடி சிரிப்பும் படத்தின் வெற்றிக்கு உதவின . நயன்தாராவை பேகால் பேக்கில் இடித்துவிட்டு செல்லும் கட்சி ரொம்ப புடிக்கும் (பிரபு தேவா மன்னிப்பாராக ). எங்கள் ஊரில் இந்த படமும்  விஜய்யின் சச்சின் ஒன்றாக ஒரே தியட்டரில் ரிலீஸ் செய்யபட்டது ரஜினி கட் அவுட் விட விஜய் கட் அவுட் டை விட  பெரிதாக இருந்ததை கண்டு கொதிப்படைந்த ரஜினி
ரசிகர்கள் விஜய் கட் அவுட் டையும்,டிக்கட்டையும்கிழித்து  விஜய் ரசிகர்களை விரட்டி அடித்தனர் .அன்று ரொம்ப சந்தோசமாக இருந்தேன் .


  










 8 . எங்கேயோ கெட்ட குரல்:
ரஜினியை எனக்கு ஒரு நல்ல நடிகனாக உணர்த்தியபடம் இந்த படத்தில் நடிகை அம்பிகா தான் ஓடிபோனாலும்  சோரம் போகவில்லை என்னை மன்னிபீர்களா என்று கேட்கும் காட்சிகளில்  ரஜினியின் நடிப்பு அபாரமாக இருக்கும் . அந்த தளர்ந்த நடையும் கடைசியில் அம்பிகாவை பிணமாக தூக்கி செல்லும் காட்சியும் அருமையாக இருக்கும் .இந்த படத்தில் நடிகை மீனா ரஜினியின் மகளாக நடித்திருப்பார். நடிகை ராதா குழந்தை மீனாவுக்கு சூடுபோட்டு விடுவார் அதற்கு ரஜினி உன் குழந்தை யாக இருந்தால் இப்படி செய்வாயா கேட்டும் இடம் அருமையானது




 








7 . சிவாஜி 
பாஸ் மொட்ட பாஸ் இந்த கடைசி நிமிட காட்சிகளுக்காகவே படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் .இந்த காட்சி சென்னை உள்ள காரப்பாக்கம் அருகில் ஒரு காலேஜில் நடத்தப்பட்டது .அதன் அருகினில்தான் தங்கி இருந்தேன்.சூட்டிங்கை பார்க்கலாம் என்று சென்ற எனக்கு கத்தை கத்தையாக ரூபாய் நோட்டுகள் தான் கிடைத்தது (அத்தனையும் சினிமா கள்ளநோட்டுங்க )ஏவிஎம் செய்த விளம்பரகளுக்காக  படம் வெற்றி பெற்றது என்று எழுத்தாளர் ஞாநி கூறினார் .ஷ்ரேயா வுடனான காதல் காட்சிகள் காதலுக்காக ரயில்வே தண்டவாளத்தில் நிற்பதும் ,ஷ்ரேயா தன் தாவணியை கழற்றி ரயிலை நிறுத்துவதும்,அப்போது ரஜினி செய்யும் எக்ஸ்ப்ரஷன் கலக்கல் .விவேக்குடன் சேர்ந்து காமெடி பிரித்து மேய்ந்திருப்பார் .
 










6 . தில்லு முள்ளு :
இது ஒரு ரீமேக் படமான பாலசந்தர் படம் . ஒரு முழுநீள காமெடி படம் .டிவியில் எத்தனை முறை போட்டாலும் உட்கார்ந்து பார்ப்பேன் .மீசை இல்லாத காரக்டர் ரஜினி தேங்காய் சீனி வாசனை பார்க்கவரும் பொழுது காலால் கேட்டை திறக்கும் காட்சி ரொம்ப பிடிக்கும் .அதில்  ஒரு ஸ்டைல் இருக்கும் .கிளைமாக்ஸ் காட்சியில் கமல் வருவது .ரசித்து பார்க்கும் கட்சிகள் .அது மட்டும் அல்லாமல் இதில் மாதவி மிகவும் அழகாக இருப்பார் .அந்த பெரிய கண்களும் ராகங்கள் பதினாறு என்ற பாட்டும்  ,அப்போதுசென்னையில் உள்ள  தியட்டர் பெயர்களை ராகங்கள் பெயராக கூறி தேங்காய் ஸ்ரீனிவாசனை ஏமாற்றும் காட்சி அருமை யாக இருக்கும் .
 














5 . அண்ணாமலை :
இந்த படத்தில் இருந்துதான் ரஜினிக்கு படம் பெயர் போடுவதற்கு முன்னால் சூப்பர் ஸ்டார் என்று ஒரு விதமான ஒலியுடன் கூடிய ரஜினி என்று ஆங்கிலத்திலும் பின்பு தமிழிலும் வரும் அந்த ஒலிகலவை போட பட்டது . குஷ்பு ரஜினி யிடம்  அட்ரஸ் கேட்டு துரத்தும் காட்சியும் பின்பு நடக்கும் சண்டை காட்சியும்  பாம்பு காட்சியும் அதை தொடர்ந்து நடக்கும் குஷ்பு உடனான கிளு கிளு குழு குழு காட்சியும்.மிகவும் ரசிக்கத்தக்கவை .சரத்பாபுவை கடத்திவிட்டார்கள் என்று கூறும் மனோரமா வை தொடர்ந்து வரும் பின்னணி இசையும் ரஜினி ஸ்லோ மோசனில் எழுதிருக்கும் காட்சியும் புல்லரிக்க வைப்பவை.இந்த படத்திற்கு சென்று மூன்று முறை டிக்கெட் கிடைக்காமல் வந்த அனுபவமும் உண்டு .












 4.எந்திரன் :
இந்த  மாதிரியான தொழில்நுட்பம் நிறைந்த படம் தமிழ் பட உலகிற்கு புதியது .அதற்காகவே இதை நாம் வரவேற்கலாம்.வேறு ஒரு ஹீரோவை கற்பனையே செய்து பார்க்க முடியாதவாறு   ரஜினி  நடித்திருப்பார் .அப்படி கற்பனை செய்து பார்க்க  வேண்டுமானால் விஜயை கற்பனை செய்து பாருங்கள் .(கடும் சீத பேதிக்கு ஆளானால் நான் பொறுப்பல்ல)ரஜினி  உடனான காதல்காட்சிகளில்  ஐஸ்வர்யாவின் எக்ஸ்பிரசன் கேவலமாக இருந்து என்று ஒரு பிரபல எழுத்தாளர் கூறினார். ஒரு வேளை அவர் ஆடியுள்ள பாட்டிற்கு ஐஸ்வரியாவை ஆடவைத்திருந்தால் இப்படி கூறி இருக்க மாட்டார் போலும் .கொஞ்சம் சயின்ஸ் பிக்சனும் அதிகம் கமர்சியல் நிறைந்த  படம் .
 














3 .  பாட்சா :
ஒரு முழு நீள கமர்சியல் படம் ஒரு தடவ சொன்ன நூறு தடவ சொன்ன மாதிரி போன்ற ரஜினி பன்ச்கள் இந்த படத்தில் இருந்து தான் தொடங்கியது , உண்மைய சொன்னேன்என்ற காட்சியும் பிளாஷ் பாக்கிற்கு முன்னால் வரும் சண்டை காட்சியில் உள்ளே போ என்று கூறும் காட்சியும்,எனக்கு பிடித்த காட்சிகள் ,நீ நடந்தால் நடை அழகு என்ற பாட்டில் பல கெட்டப்களில் ரஜினி வருவார் என்னுடைய  சிறுவயதில் ரசித்துபார்த்த  காட்சிகள் ,ரகுவரனுடன் போனில் பேசும்பொழுது யா யா யா என்று கூறுவது அருமையாக இருக்கும் ,நக்குமா உடனான் காதல் காட்சிகள் சலிப்பை தருபவை என்றாலும் சூப்பர் ஸ்டார் ருக்காகவே கணக்கிலாமல் பல தடவை   பார்த்திருக்கிறேன்
 















2 .  தளபதி :
ரஜினி நடிப்பிற்கு ஒரு  சான்று.ஷோபனா உடனான காட்சிகளில் ஊம் பின்னால  நானாடி சுத்துனேன் என்று அங்கிருந்து போக சொல்லுவார் அந்த காட்சியும் ,அரவிந்த சாமி தன் தம்பி என்று தெரிந்தவுடன் நா உங்களுக்கு ஒரு அண்ணன் மாதிரி  நீங்கள் இங்கிருந்து போக வேண்டும் என்று கூறும் காட்சியும் ,மம்முட்டி யிடம்  ஏன்னா நீ  என் நண்பன் என்று கூறும் காட்சிகள் எனக்கு மிகவும் பிடித்தவை . காட்டுக்குள்ளே மனசுக்குள்ளே என்ற பாட்டில் ஒருபாட்டியிடம் இடி வாங்கி விழும் காட்சி ரசித்த காட்சிகள், சின்ன தாய் அவள் பாட்டில்  ஸ்ரீவித்யா பின் தொடர்ந்து மறைந்து பார்க்கும் காட்சிகள் அருமையானவை ,இந்த படமும்  கமலின் குணா படமும்  ஒரே தியட்டரில் ரிலீஸ் ஆனது .இந்த படம் பார்க்க நாங்கள் குடும்பத்துடன் சென்றோம் .ஆனால் படம் பார்க்கவில்லை இரண்டு பேரின் ரசிகர்களும் சண்டையிட்டு கொண்டிருந்தார்கள் .பின்பு ரொம்ப நாள் கழித்து தான் பார்த்தேன்
 










1 . படையப்பா:
 இந்த படம் வந்தபொழுதுநான் படித்த  ஸ்கூல் அருகில்  நடந்த சம்பவம் . இதில் ரஜினி கையை சுழற்றி வணக்கம் போடும் ஸ்டைலை  நான் ஒரு பொண்ணு முன்னால் சைக்கிள் அதுவும்இரண்டு  கையை விட்டு அந்த ஸ்டை லை செய்தேன் .அந்த நேரம் பார்த்து பின்னால் ஒரு போலீஸ் மப்டியில் வந்தார்.என்னை அழைத்தார் நானும் எவனோ ஒருத்தன் கூப்பிடுகிறான் என்ற தெனா வெட்டில் சென்றேன் .பளிரென்று ஒரு அரை விட்டார் .அதன் பின்தான் உணர்தேன் அவர் ஒரு போலீஸ் காரர் என்று .அதோடு விட்டாரா 15  உக்கி போட விட்டார் .பின்பு ஸ்டைல் பண்ற மூஞ்ச பாரு என்று கூறி ஓட்ரா என்றார் .எடுத்தேன் சைக்கிளில் ஓட்டம் .அப்போது ஒன்பதாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன் என்று ஞாபகம் சரியாக தெரியவில்லை .சரி படத்திருக்கு வருவோம் 
ரம்யா கிருஷ்ணனிடம் உங்களை பிடிக்கவில்லை என்று கூறும் பொழுது அவர் கண்ணாடியை கலட்ட இவர் கண்ணாடியை மாட்டுவார் .மணிவண்ணனிடம் பேசும் வசனம் . என்வழி தனி வழி என்று கூருவதிலாகட்டும் சான்சே இல்லை 
ரஜினி ரஜினி தான்

இது போக இன்னும் நிறைபயபடங்கள் எனக்கு பிடித்தவை .பொது வாக படங்களில் வரும் பாட்டுக்களை அப்போது பார்ப்பதோடு சரி பெரிய அளவில் ரசிப்பதில்லை ,ஆனாலும் 


ஆல் டைம் பேவரைட் : அடுத்த வாரிசில் வரும் " ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா"


இந்த தொடர் பதிவுக்கு நான் அழைக்கும் பதிவர் 
பலநாள் பதிவு போடாமல் டகால்ட்டி வேலை காட்டிகொண்டிருப்பவர் 
முறைமாமன் 
(இவருடைய கருத்துக்கும் கொள்கைக்கும் இந்த பதிவு சரியானதல்ல இவர் படலாம் பார்ப்பாரா என்று சந்தேகமாக உள்ளது  )
இருந்தாலும் எனக்கு யாரை அழைப்பதென்று தெரியவில்லை நண்பா
பப்ளி ஹரிஸ்
மூன்றாவதாக யாரை அழைக்கலாம், வேண்டாம் .இவர் இப்போது வேறு மாதிரியான உலக சினிமாக்கள் பார்க்கிறார்   
நண்பர்களே என் அழைப்பை ஏற்றுகொள்வீர்களா?


















































































Read More

12.11.10

தமிழக மக்களே தலையில் மண் அள்ளி போட்டு கொள்ள தயாராகுங்கள்

         "தமிழர்களே தமிழர்களே என்னை கடலில் தூக்கிபோட்டாலும் கட்டுமரமாகத்தான் மிதப்பேன் அதில் ஏறி நீங்கள் பயணம் செய்துகொள்ளலாம் கவிழ்ந்துவிடமாட்டேன் "
இந்த வார்த்தைக்கு ஒரு மறைமுக அர்த்தம் உள்ளது
அதுதான் இந்த தலைப்பு
தமிழக மக்களே தலையில் மண் அள்ளி போட்டு கொள்ள தயாராகுங்கள்
தமிழக மக்களே தலையில் மண் அள்ளி போட்டு கொள்ள தயாராகுங்கள்
தமிழக மக்களே தலையில் மண் அள்ளி போட்டு கொள்ள தயாராகுங்கள் 

இந்த செயலை யானைகள்தான் செய்யும் என்று கேள்விபட்டிருக்கிறேன் .அந்த வகை யில் பார்த்தால் தமிழர்களும் யானைகளே .
இந்த தேர்தல் பலகட்சிகளுக்கு எதிர்காலத்தில்  இருப்பதும் இல்லாமல்  போவதற்கும் ஒரு சான்றாக இருக்கும்

தி.மு.க:






                இவர்கள் தமிழகத்திற்கு ஒரு புதிய "திருமங்கல கலாச்சாரத்தை " தோற்றுவித்தவர்கள் .இதற்குமுன்னாலும் இந்த கலாச்சாரம் இருந்தாலும் இவர்களால் ஒரு புதிய பரிணாமத்தை  அடைந்தது .இநதியா முழுவதிலும்  ஒரு மிக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது .இந்த தேர்தலில் இன்னும் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்துவதற்கு கட்சி நிதியாக 1 .76 லட்சம் கோடி சேர்க்கப்பட்டுள்ளது. இலவசங்களை அள்ளித்தருவதற்கு" குடிமக்கள் " உருவாக்க பட உள்ளனர் .ஆதலால் தமிழக மக்களே கவலை படாதீர்கள் .
அ.தி.மு.க :
             இவர்களும் அவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல .என்ன ஒன்று அவர்களை போல் கட்சி நிதியை வளர்க்கதெரியா தவர்கள். ஆனாலும் இவர்களுக்கு இந்த தேர்தல் ஒரு மிக மிக மிக முக்கியமான தேர்தல் .சூரியனை அஸ்த்தமனம் செய்வதற்கு இவர்களால்  தான் முடியும் கட்சி தலைவி கொடநாட்டில் ஓய்வு எடுக்காமல் கட்சிப்பணி ஆற்றி பிறகு தமிழக "குடிமக்களுக்கு " தொன்றாட்டுவார் என்று நம்புவோமாக . இவர்கள் "மைனாரிட்டியாக" இல்லாமல் மெஜாரிட்டி யாக வருவார்களா பொறுத்திருந்து பாப்போம்
தமிழக காங்கிரஸ் :
   இவர்களுக்கு யார் படத்தை வைப்பதென்றே தெரியவில்லை .இவர்களுக்கு அ.தி.மு.க அம்மையார் அவர்கள் ஆதரவு தெரிவித்திருக்கிறார் தி.மு.க வெளியேறினால் .இவர்களுக்கு உரிய பாரம்பரியத்தை என்றோ இழந்து விட்டார்கள் .சமிபத்தில் மதுரையில் தியாகி கக்கனுக்கு விழா கொண்டாடினார்கள். ஒரு திராவிட கட்சிகளை போல் செயல்பட்டார்கள் .மதுரை முழுவதும் இவர்களுடைய படங்கள் ப்ளெக்ஸ் போர்டாக சந்து போந்து இண்டு இடுக்கு எல்லாம் வைத்துதிருந்தார்கள்.கக்கன் சுடுகாட்டில் இருந்து எழுந்து வந்து மருந்தை குடித்திவிட்டு மீண்டும் சுடுகாட்டில் படுத்திருப்பார் என்றே நினைக்கிறேன் .காங்கிரஸ் காரர்களுக்கு ஒரு வேண்டு கோள் .தயவுசெய்து .பெருந்தலைவர் காமராஜர் பெயரை பயன்படுத்தாதீர்கள் .

.
தே.மு.தி.க :
         இந்த கட்சியின்  செயல்பாடுகள்  என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை.இவர்கள் கூட்டணி வைப்பார்களா என்றும் என்னால் கணிக்க முடியவில்லை .விருத்தாசலம் மக்களுக்கு தான் இவர்களை பற்றி அதிகம் தெரிந்திருக்கும் அந்த தொகுதியை சேர்ந்தவர்கள் இதை பார்த்தால் கொஞ்சம் அந்த கட்சியின் கட்சி தலைவரையும் பற்றி பின்னூட்டம் இடுங்கள் .மக்களுக்கு உதவியாக இருக்கும் .ஒரு வேளை விருத்தகிரி படம் தேர்தலுக்குள்  வராமல் இருந்தால்  இவர்கள் வெற்றிபெறலாம்
பா.ம.க :
       இவர்கள் ஒரு கட்சி அந்தஸ்த்திற்கு எப்படி வந்தார்கள் என்று தெரியவில்லை .ஆனாலும் இவர்கள் உதவி மற்ற கழகத்திற்கு தேவைப்படும் ஓட்டுக்காக அல்ல கலகம் புரிவதற்கு .இதற்ககு மேல் இவர்களை விமர்சிக்க எழுத்துவர மாட்டேன்கிறது .

மார்க்சிஸ்ட் /கம்யுனிஸ்ட் :
சமீபத்தில் நண்பர் ஒருவரது ப்ளோகில் கம்யுனிசம் காலாவதியாகி போன  ஒன்று என்று கூறியிருந்தார் .இந்த "தோழர்களால்தான் "  அவர் அப்படி எழுதி இருக்ககூடும் .கம்யுனிசத்தில் ஆராயப்படவேண்டிய பல விடயங்கள் உள்ளன .இன்றைய சூழலில் அதனுடைய பரிணாமம்  இந்த போலி கம்யுனிஸ்ட் களால் சிதைந்து விட்டது .இருந்தாலும் கம்யுனிஸ்ட் களின் உதவி இரு  கழகத்திற்குகொஞ்சம் தேவை  படும் 
ச.ம.க :
      இப்படி ஒரு கட்சி இருக்கா .எனக்கு தெரியாதே 
ம.தி.மு.க:
      இவர்களை பற்றி கூறவேண்டுமா
இன்னும் இருக்கிற 
பிற கட்சி பற்றி எழுதுவதால் என் கண்களும் கைகளும் பாதிப் படைய வாய்ப்பிருப்பதால (கொஞ்ச நஞ்ச கட்சியா இருக்கு ) இத்துடன் முடித்துகொள்கிறேன் .

தமிழக மக்களே எந்த கழகம் ஆட்சிக்கு வரவேண்டுமென்று நீங்கள் தீர்மானிக்க போகிறீர்கள் அதாவுது உங்கள் தலையில் மண் அள்ளி போட்டு கொள்ள தயாராகுங்கள் 

பின்குறிப்பு :
நானும் போன தேர்தலில் மண் அள்ளி என் தலையில் போட்டு கொள்ள நேர்ந்தது . ஆனால் இந்த தேர்தலில் நீர் அப்படி செய்யவேண்டாமென்று எலெக்சன் கமிசன் கூறிவிட்டது.வீடு மாறி விட்டால் பெயரை வோட் லிஸ்டில் இருந்து எடுத்துவிடுவார்களாம். இந்த சட்டம் உங்கள் நாட்டிலும் உள்ளதாஎன்று  ஒபாமா விடம் கூட கேட்டிருக்கலாம் . இந்த ஐந்தான்டிற்கு ஒரு முறை நிகழும் அறிய செயலை செய்யவிடாமல் செய்த எலெக்சன் கமிசன் ற்கு ஒரு மிக பெரிய குட்டு வைக்க சொல்லி ஞாநி யிடம் கூற வேண்டும் (ம்ம்ம்  500 ரூபாய் போச்சே )



 
Read More

2.11.10

மறைக்கப்பட்ட ஒரு கொலை






நொக்கியா செல்பேசிகளின் மதர் போடுகள் நீளமாக வருவதால் அதை ஒரு இயந்திரம் கொண்டு துண்டுகளாக வெட்டுவார்கள். இங்கு இருக்கும் “ரவுட்டர் கட்டிங் மிஷின்” எனும் இயந்திரம் மொத்தமாக வரும் செல்போன்களுக்குரிய மதர்போர்டுகளை தனித்தனித் துண்டுகளாக்கி பிரிக்கும். அவ்வாறு அது துண்டுகளாக மதர் போர்டை அறுக்கும்போது சில துண்டுகள் மிஷினில் விழுந்துவிடுவது உண்டு, அதனை கைகளால் எடுக்கும்போது, அங்கே பொருத்தப்பட்டிருக்கும் சென்சர் அதனை உணர்ந்து மெஷினை நிறுத்திவிடும். அவ்வாறு நிறுத்தப்பட்ட மெஷின் திரும்பவும் ஆரம்பிக்க 10 நிமிடங்கள் வரை ஆகும்.

சம்பவ தினத்தன்று அவ்வாறு விழுந்த மதர் போர்டு துண்டு ஒன்றை எடுக்க அம்பிகா முயற்சித்துள்ளார். ஆனால் அங்கே இருந்த சென்சர் வேலைசெய்யவில்லை. உண்மையிலேயே அது வேலைசெய்யவில்லை என்று சொல்வதை விட அதை நிறுத்திவைத்திருந்தார்கள் என்பதே உண்மையாகும். காரணம் அவ்வாறு மெஷின் நின்றால் திரும்பவும் இயங்க 10 நிமிடங்கள் ஆகுமே, அந்த 10 நிமிடத்தில் உற்பத்தி பாதித்துவிடுமே என்ற ஒரு அற்ப காரணம் தான் இந்த நரபலிக்கு முக்கிய காரணம். அன்றைய தினம் அம்பிகா மதர்போட் துண்டை எடுக்க முனைந்தவேளை அவர் களுத்துக்கு பின்பக்கமாக அந்த அறுக்கும் இயந்திரத்தின் பிளேடுகள் அவரைத் தாக்கியுள்ளது.

பலத்த ரத்தக் கசிவுக்கு மத்தியில் அவர் பின்புறத்தில் பிளேடு ஏறிய நிலையில் துடித்துக்கொண்டிருப்பதைக் கண்ட தொழிலாளர்கள் இயந்திரத்தை நிறுத்தினர். அம்பிகாவின் தலைக்கும் தோழுக்கும் இடையே ஆழமாக அந்த பிளேட் சென்றிருந்ததால் பிளேடை உடைத்து அம்பிகாவை மீட்க தொழிலாளர்கள் முற்பட்டுள்ளனர். ஆனால் அங்கு இருந்த சூப்பர்வைசர் அது 2 கோடி ரூபா இயந்திரம் எனக் கூறித் தொழிலாளர்களைத் தடுத்துள்ளார். இந்த புண்ணியவான் பெயர் வெற்றி தேவராஜ். இவர் மேலிடத்தோடு தொலைபேசியில் தொடர்புகொண்டு, இயந்திரத்தை உடைக்காது அதனை கவனமாக களற்றி அம்ம்பிகாவை வெளியே எடுக்கலாம் என புண்ணாக்கு ஜடியா கொடுத்துள்ளார்.

ஆனால் அந்த இயந்திரத்தை களற்றுவதற்கான எந்த ரூல் பாக்ஸ்ஸும் அங்கு இல்லை எனத் தெரியவரும்போது, அம்பிகா வலிதாங்காமல் துடிதுடித்துக்கொண்டு இருக்கிறார், ரத்தம் ஆறாகப் பாய்கிறது. இதைஎல்லாம் சற்றும் அசட்டைசெய்யாது, எவ்வாறு இயந்திரத்தைப் பாதுகாப்பது என்று நினைத்திருக்கிறார் வெற்றி தேவராஜ். இவரை எந்த உயிரினத்தில் சேர்ப்பது என்றே தெரியவில்லை ஒருவாறு அங்கு நின்ற ஆண் தொழிலாளர்கள் கோபமடைய, நிலை கட்டுக்கடங்காமல் போனதால் அந்த கம்பிகளை உடைத்து அம்பிகாவை வெளியே எடுத்தனர் சக தொழிலாளர்கள்.

இதனிடையே சுமார் 20 தொடக்கம் 25 நிமிடங்களுக்குப் பின்னரே அம்பிகா மீட்டெடுக்கப்பட்டுள்ளார். ஆலையிலிருந்து இரண்டு கி.மீ தொலைவில் இருக்கும் ஜெயா மருத்துவமனைக்கு அம்பிகா கொண்டு செல்லப்படுகிறார், அங்கிருந்து பின்னர் அபோலோ மருத்துவமனைக்கும் கொண்டுசெல்லப்படுகிறார். இறுதியில் அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால் நடந்ததோ வேறுவிதமாக உள்ளது. ஆலையில் இருந்து அம்பிகாவை முதல் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் போதே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒரு கண் துடைப்புக்காக ஜெயா மருத்துவமனை பின்னர் அப்பலோ என 2 வைத்தியசாலைக்கு கொண்டுசென்று, தாம் ஏதோ மருத்துவம் பார்த்தாக பிலிம் காட்டியுள்ளனர், நொக்கியா நிர்வாகத்தினர்.

இது இவ்வாறிருக்க சம்பவதை நேரில் பார்த்த சக தொழிலாளர்களுக்கு, அம்பிகாவுக்கு ரத்தம் ஏற்றப்படுவதாகவும் விரைவில் அவர் உடல்நலம் தேறிவருவார் என்றும் பொய்கூறி வேலையைச் செய்யும் படி கூறியிருக்கிறார் மற்றுமொரு சூப்பர்வைசர் ஜே.புருஷோத்தமன். அங்கு வேலைசெய்யும் தொழிலாளர்கள் கைத்தொலைபேசிகளை ஆலைக்குள் கொண்டுசெல்லக் கூடாது என்ற காரணத்தால், அம்பிகாவின் மரணம் பலருக்குத் தெரியது. அத்தோடு அது திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது. ஜே.புருஷோத்தமன் மீது பாலியல் புகார் உள்ளிட்டு 12 புகார்கள் இருக்கின்றன என்றாலும் நிர்வாகம் இவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காரணம் அவனது மேலாண்மையில் உற்பத்தி இலக்கு நிறைவேறுகிறது என்பதேயாகும்.

மருத்துவமனையில் அம்பிகாவின் பெற்றோர் கதறி அழுதவாறு இருக்கின்றனர். எந்திரத்தை உடனே உடைத்திருந்தால் தங்களது மகளை காப்பாற்றியிருக்கலாமே என்று அவர்கள் குமுறுகிறார்கள். அந்த எந்திரத்தின் மதிப்பான இரண்டு கோடியை உங்களுக்கு தந்துவிட்டால் தங்களது மகளின் உயிரை திருப்பித்தர முடியுமா என ஆவேசப்படுகிறார்கள். இதில் கொடுமையான விடையம் என்னவென்றால், சென்ற மாதம்தான் நோக்கியா ஆலைக்கு 6 எஸ் (6ஸ்) எனும் சிறந்த பாதுகாப்பு வசதிகள் கொண்ட ஆலை என்ற விருது கொடுக்கப்பட்டாதம். கட்டிங் இயந்திரத்தின் சென்சார் ஃபோர்டு இயங்குவதற்கு தடை போட்டு, அதையும் தொழிலாளிக்கு அறிவிக்காமல், ஏதும் அறியாத அம்பிகாவின் உயிரைக் குடித்துள்ளது இந்த நொக்கியா நிறுவனம்.

போதாக்குறைக்கு சாக்கடை அரசியல்வேறு இங்கு விளையாடுகிறது. அம்பிகா கொலை செய்யப்பட்டதை சாதாரண விபத்தாக மாற்றுவதற்கு தி.மு.க பிரமுகர்கள் ஒருபக்கம் முயல்கிறார்கள்.

அடுத்த மாதம் பின்லாந்தில் ஒரு வெற்றிவிழா நடக்கும். அது நோக்கியாவின் 100 மில்லியன் இலக்கை அடைந்த சாதனைக்கான கேளிக்கை விழா. நோக்கியா முதலாளிகளும், அதிகாரிகளும் சீமைச் சாரயத்தை பருகியவாறு தமது வெற்றியை சல்லாபிப்பார்கள். அவர்கள் அங்கு பருகப்போவது சாராயம் அல்ல ! அம்பிகா போன்ற ஏழைகளின் இரத்தமே !

இப் படுகொலையை தமிழகத் தமிழர்கள் எவ்வாறு கையாளப் போகிறார்கள் ? தமிழர்கள் இந்த செல்பேசியை புறக்கணிப்பார்களா ?


அவர் களுக்குத்தான் தீபாவளி வந்துவிட்டதே .அவர்களுக்கத்தானே கலைஞர் டிவியில் சிவாஜி படம் ,சன் டிவியில் எந்திரன் உருவான கதை போடபடுகிறது  .இங்கே இது செய்தியாகத்தான் பார்க்கபடுகிறது .வலிகளோடு வாழ்வதற்கு ஏழை மக்கள் பழகிகொண்டார்கள்.சமிபத்தில் கோவையில் பிஞ்சுகளை கொலை செய்த கொடூரன்
 நரகாசுரனை பலி இட்டு தீபாவளி கொண்டாடும் மனிதர்களே .இந்த உலகில்  எண்ணற்ற நரகாசுரன்கள் வாழ்கிறார்கள் அரசியல்வாதிகள் வடிவில் அவர்களிடம் மிருந்து இந்த பூமியை யார் காப்பாற்ற போகிறார்கள் .


Read More

1.11.10

எந்திரி

நீங்கள் எல்லோரும் எந்திரன் படம் பாத்துருப்பீர்கள்
எந்திரன் சிட்டி  ரஜினி பதிலாக

எந்திரி சிட்டியை ஐஸ்வரியா ராய்  கற்பனை செய்துகொள்ளுங்கள் .அவ்வளவு தான் .

அது வே  எந்திரி யின் கதை




படம் முடிந்தது


எல்லோரும் எந்திரிச்சு வீட்டுக்கு போங்க ஆன்னு வாயை போலந்த்துகுட்டு , போங்க
Read More

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena