வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

30.10.11

குமார காவியம்

                         
                                         அன்று குமாரன் துயில் எழுந்தபொழுது சூரியன் முந்திகொண்டது .குமாரனுக்கு அது விடுமுறை நாள் ஞாயிற்று கிழமை.ஆண்டு பரீட்சை முடிந்து பள்ளிகள் விடுமுறை  முடிந்து குமாரனுக்கு  ஒன்பதாம் வகுப்புகள் தொடங்கி ஒரு வாரமே ஆகி இருந்தது .குமாரன் அதே வழக்கமான காலை கடன்கள் முடித்தல் ,பல்விலக்குதல் ,மிகவும் எரிச்சல் பட்டு குளித்தல் ,அதன் பிறகு ஆவலாதியாக காலை உணவருந்துதல் .கடைசியாக  தனது தம்பியை அடித்து அழவைத்துவிட்டு வீட்டை  விட்டு ஓடிவிடுதல் போன்று பணிகளை செய்துவிட்டு கூட்டாளிகளுடன் விளையாட சென்று விடுவான்  .அவர்கள் இருந்த வீடு ஒரு தொகுப்பு வீடு .அந்த தொகுப்பு வீடுகளில் முதல் வீட்டில் இருந்தது தனபுஷ்பம் .அவளது தந்தையார் அரசாங்க காரியாலயத்தில் பணிபுரிகிறார் .தற்போது மாற்றலாகி வந்திருக்கிறார் .தன்புஷ்பமும் திருக்குமாரனும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் வெவேறு பிரிவுகளில் படிக்கிறார்கள் .குமாரன் தனபுஷ்பம் வீட்டை தாண்டி செல்லும் பொழுது .தனபுஷ்பமும் சரியாக வெளியில் வருகிறாள் .இருவரும் புன்னகை புரிகிறார்கள் .
ஏ எங்கே போகிறாய் 

நான் விளையாடசென்றுகொண்டிருக்கிறேன் 
கணக்கு ஆசிரியர் குடுத்த வீட்டு பாடத்தை முடித்து விட்டாயா 
இல்லை மாலைதான் செய்ய வேண்டும் .எனக்கு நேரமாயிற்று நண்பர்கள் காத்து கொண்டிருப்பார்கள் நான் வருகிறேன் 

அன்று அவர்கள் விளையாட தேர்ந்தெடுத்த இடம் ,அந்த தெருவில் புதிதாக கட்டப்பட்டு கொண்டிருந்த ஒரு வீட்டை .அந்த வீடு நான்கு மாடியாக கட்ட பட்டு கொண்டிருந்தது .குமாரனும் அவனது நண்பர்களும் ஒவ்வொரு மாடியாக ஏறி மேலிருந்து கீழே கொட்டி கிடக்கும் ஆற்று மணலில் குதிப்பார்கள் .அப்படி குதித்து குதித்து மூன்றாவது மாடியை எட்டி இருந்தார்கள் .மூன்றாவது மாடியிலிருந்து முதலில் குமரான் குதிப்பதென முடிவெடுக்க பட்டது .குமாரன் மாடி படிகளில் ஏறி கொண்டிருந்தான் .குமாரனுக்கு  இரண்டாவது மாடியிலிருந்து குதித்தபோதே சற்று பீதியாகத்தான் இருந்தது .இருந்தும் முயன்று பார்ப்போம் .அவன் மூன்றாவது மாடி விளிம்பிலிருந்து கீழே பார்த்தான் .குதிப்பதற்கு தயக்கமாக இருந்தது .குதிப்பதற்கு முன் எதேச்சையாக இடது புறம் திரும்பி பார்த்தான்.அங்கே ஒரு புத்தகம் கொட்டி வைக்க பட்ட செங்கற்கற்க்களுக்குள் தினத்து வைக்க பட்டிருப்பதைப்பார்த்தான் 

அந்த புத்தகத்தை வேக வேகமாக திருப்பி பார்த்தான் .முழுவதும் நடிகைகளின் அந்தரங்க ஆடைகளின் அணிவகுப்பாக இருந்தது .கீழே இருந்து நண்பர்கள் குமாரனை கத்தி அழைத்து கொண்டிருந்தார்கள் .தான் குதிக்கவில்லை என்பதால் நண்பர்கள் மேலே வந்துவிடுவார்கள் .அது மட்டுமில்லாமல் நண்பர்கள் இப்புத்தகத்தை பார்த்தால் தனக்கு ஒரு பக்கம் கூட கிடைக்காது .ஆதலால் இங்கிருந்து உடனே செல்ல வேண்டும் என தீர்மானித்தான்

அந்த புத்தகத்தை  அவனது கணக்கு புத்தகத்திற்குள்  ஒளித்துவைத்தான்.விதியும் உள்ளே சென்று ஒளிந்து கொண்டதை   அவன் அறியவில்லை  .வீட்டில் சூழ்நிலை சரியில்லை .அன்று முழுவது பல முறை முயன்றும் அந்த புத்தகத்தை பார்க்க முடியவில்லை .கையில் ஆப்பத்தை குடுத்து விட்டு வாயை அடைத்த போட்டு விட்ட கதையாகி போனது
மறுநாள் திங்கட்கிழமை .குமாரனும் வழக்கம் போல் பள்ளிக்கு செல்ல பள்ளி பேருந்திற்காக தனது தம்பியுடன் பேருந்து நிறுத்தத்தில் காத்து கொண்டிருந்தான் .தனபுஷ்பம் அவள் தாயாருடன் வந்தாள். அவளது தாயார் அவனை பார்த்து புன்னகைத்தார் .
அன்று குமாரனுக்கு மூன்றாவது பாட வேளை விளையாட்டு பாடம்.நான்காவது  பாடவேளையாக கணக்கு வகுப்பு .குமாரன் மூன்றாவது பாடவேளையில் விளையாட சென்றான் .அப்பொழுது எட்டாம் வகுப்பு ஆ பிரிவிற்கும் விளையாட்டு பாட வேளை .அந்த வகுப்பை சேர்ந்த மாணவர்களான ஆள்வார்,பேள்வார் இருவரும் குமாரனின் வகுப்பை அடைந்தார்கள் .இங்கு ஆள்வார் மற்றும் பேள்வார் பெயர்களின் காரணங்களை அறிந்து கொள்வோம் .அவர்கள் இருவரும் இரட்டையர்கள் .குமாரனின் பக்கத்து தெருவில் வசித்து வந்தார்கள் .குமாரன் சிறுவயதில் மட்டை பந்து விளையாடும் பொழுது பேள்வாரும் விளையாட வருவான் .பேள்வாரின் இயற் பெயர் ரமேஷ் .அவனால் இரண்டு'க்கு வருவதை அடக்க முடியாது .அவன் விளையாட வந்தான் என்றால் ஒன்றுக்கு இரண்டு முறை கேட்கப்படும் 'போய் விட்டு வந்தாயா 'என்று .அவனும் தலையாட்டுவான் .சில சமயம் எதுவும் செய்ய மாட்டான்,ஆனால் பல சயங்களில் அந்த விளையாட்டு மைதானத்தையே அசிங்கம் செய்துவிட்டு ஓடிவிடுவான் .அதன் பிறகு அவனின் அண்ணனான் சுரேஷை மண்டையிலேயே அடித்து இழுத்து வருவார்கள் .உன் தம்பி செய்த அசிங்கத்தை பார் அதை சுத்த செய் என்பார்கள் .அப்படி சுத்தம் செய்வதன் மூலம் சுரேஷ் அள்வார் என்ற பெயரை பெற்றான் .அப்பெயர் நாளிடைவில் ஆள்வார் என்ற பெயாராக உருமாறியது .அது மட்டுமில்லாமல் இந்த பெயர்களை பள்ளிகளில் பரப்பிய பெருமை குமாரனையே சாரும்.
ஆனால் அவர்கள் இன்று குமாரனின் வகுப்பிற்கு வந்த காரணமே வேறு .எந்த வகுப்பில் ஆள் இல்லையோ அந்த வகுப்பிற்கு சென்று .மதிய உணவுகளும் ,கொறிப்பதற்கு வைத்திருப்பதை திருடி தின்பது .பலரது புத்தக பைகளை வேக வேகமாக பிரித்து வகுப்பரையையே அலங்கோலமாக்கி உணவுகளை தின்று விட்டு சென்றனர் .அப்படி தின்று விட்டு சென்றதில் குமாரனின் மதியவுணவும் அடக்கம் .
நான்காவது பாட வேளை தொடங்குகிறது .வகுப்பறைக்குள் நுழைந்ததுமே எல்லோரும் கண்டிபிடித்து விடுகிறார்கள் உணவுகள் களவாடபட்டுவிட்டதென்று.கணக்கு ஆசிரியர் உள்ளே வருகிறார் .மாணவர்கள் முறையிடுகிறார்கள் .நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கிறார் .கணக்கு ஆசிரியர் வளைய வருகிறார் குமாரனின் மேசைக்கு மேல் கணக்கு புத்தகம் இருக்கிறது .புத்தகத்திற்க்குள்ளே உள்ளே இருப்பது
                                                             

தொடரும் ..............          

0 கருத்துகள்:

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena