வேலாயுதம் -படம் பார்த்தவர்களுக்கான விமர்சனம்
பொதிகை மலை சாரலிலே
வசந்த மோகன வேளையிலே
கண்டேன்-வேலாயுதம்
வேலாயுதம் -அநீதியை அளி'க்க பிறந்தவன்
மக்களாகிய நமக்கு எப்பொழுதுமே ஒரு பேராசை உண்டு .
'எல்லோரும் சிரிக்க நினைத்தால் சிரிக்கிறோம் ,அழுகை வந்தால அழுகிறோம் ,கோபம் வந்தால் மட்டும் ஏன் அதை வெளிப்படுத்த இன்னொருவன் வர வேண்டும் என்று நினைக்கிறோம் ' என்று நமக்குள் இருக்கும் அநீதிகளுக்கு எதிரான கோபத்தை தூண்டி விடுவதற்கான ஆயுதமாக மாறிய இளைய தளபதி விஜய்யின் படம் தான் வேலாயுதம்
எஸ் ஐயம் ஆல்சோ எ வேலாயுதம் (பெசமா தூக்குல தொங்கிடுவோமா )
வாயில் அருவாளை கவ்விக்கொண்டு ரயிலில் இடத்தை பிடிப்பதற்காக ஓடி தாவி தவ்வி குதிப்பது என தொடங்கும் டாக்டர் விஜய்யின் ஜம்பலக்கடி பம்பா வேலைகள் அடுத்து படம் முழுவதும் ஒரே ஜம்பு ஜம்பு ஜம்பு ஜம்பு ஜம்பு தான்
இந்த இடத்தில் நாம் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும் . தமிழ்த்தாயின் மூத்த மகனின் பேரனை எண்பத்து நாலு கோடி செலவு செய்ய வைத்து மறத்தமிழரான
ஏ.ஆர் .முருகதாஸ் தனது ஆறாம் அறிவை பயன் படுத்தாமல் எடுத்த படமான ஏழாம் அறிவு நமக்கு உணர்த்த முயற்சிப்பதென்ன ? அந்த முயற்ச்சியில் வெற்றி கண்டாரா ?இல்லை .ஆனால் ல் ல் ல் ல் ல் ல் ல் .
எந்த பிரதி பலனையும் எதிர்பாராமல் அந்த பணியை தனி ஒரு மனிதனாக செய்து முடித்தது டாக்டர் தான் என்றால் மிகையாகாது.ஸ்ப்ரிங் இல்லாமல் குதித்து ,தவ்வி .தாவி .என நமக்கு முன்னோரை நினைவு படுத்துகிறார் .நம் அறிவியல் தமிழ் என்ன கூறுகிறது .நாம் எந்த இனத்தில் இருந்து பிரிந்து வந்தோம் .அந்த வகையில் ஹாட்ஸ் ஆப் டு விஜய்
![]() |
நம் முன்னோர் |
படம் பார்ப்பதற்கான செலவு = 100 ருபாய்
அதை ஈடு செய்தது நமது தங்க தலைவி வாரி வழங்கிய நான்கு பிட்டுகள் ,அம்முனிங்க அம்முனிங்க கொஞ்சம் அளவா சாப்புடுங்க ஓவரா வெயிட்டு போட்டீங்கன்னா ஒங்களையும் ஜாக் பாட் எடுக்க விட்ருவாய்ங்க. உங்களுக்காக இங்கு எத்தனை பெயர் காத்து கொண்டிருக்கிறோம் (ரசிகனாக )
![]() |
ரசகுல்லா இனிப்பா இருக்குமாமே சாப்பிட்டு பார்க்கணும் |
அடுத்து என்ன கேட்டீர்கள் ஆங் ஜெனிலியாவா .எனக்கு காய்களிலே பிடிக்காத காய் வெண்டாக்காய்
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் ,குழந்தை தொழிலாளர் (உதவி அண்ணன் :திரு செங்கோவி ) சரண்யா மோகன் .
![]() |