வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

3.3.12

அரவான்

                            தமிழ் மரபில் அரவான் பற்றி மிக நீண்ட விளக்கங்கள் உள்ளன .அரவான் என்பவர்  களத்தில் பலியிடுவதற்காக உருவாக்கப்பட்டவர் . அது போன்ற ஒரு அரவானின் வரலாற்றையும் அத்தோடு கள்ளர் மரபையும் அவர்களுடைய குலத்தொழிலான கன்னம் வைத்து திருடுவதும் .பதினெட்டாம் நூற்றாண்டின் கள்ளர் சமுதாயத்தையும் ,ஒரு அறிய தொகுப்பாகவும் ,ஆவணமாகவும் காவல் கோட்டம் ' ச .வெங்கடேசன் உதவியுடன் கூடுதல் கதை அமைத்து இயக்கியிருக்கும் வசந்த பாலனுக்கு வாழ்த்துகள்
                                                        
 
பதினெட்டாம் நூற்றாண்டில் கதை தொடங்குவதாக காட்டபடுகிறது .பசுபதி வேம்பூர் கிராமத்தின் தலைமை திருடனாக செயல்பட்டு அக்கிராமத்திற்க்கே படி'அளக்கிறார் .ஒரு கட்டத்தில் மகாராணியின் வைர அட்டிகை களவு செய்யபடுகிறது .அதை தொடர்ந்த காட்சியில் ஆதியின் அறிமுகமும் ,பசுபதி ஆதியின் நட்பும் ,பசுபதியின் தங்கை ஆதியின் மேல் கொண்ட காதலும் என தொடரும் கதையில் தொய்வு ஏற்படுவது இரண்டாம் பாதியில்தான் ,நீளத்தை கொஞ்சம் கத்திரித்து திரைக்கதியில் கொஞ்சம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்பது என் கருத்து .
 
இடைவேளை வரை பசுபதியின் ஆட்டம்தான் .இடைவேளைக்கு பிறகுதான் ஆதி குடுத்த பணியை செவ்வனே செய்திருக்கிறார் .வில்லனாக கரிகாலன் ,ரீஎன்ட்ரி .என் சிறுவயதில் பார்த்த படம் சோலையம்மா ' தனுஷின் அப்பா கஸ்துரி ராஜா இயக்கிய படம் என்று நினைக்கிறேன் ,ஒரு ஆஜால் குஜால் பாட்டு கூட ஒன்று வரும் 'தாமிர பரணி ஆறு நீ தரையில் நடக்கும் தேரு'.கரிகாலன்தான் அந்த படத்தின் வில்லன் ,மனிதர் கவட்டையை ஒன்று வைத்துகொண்டு அந்த ஊரில் உள்ள பெண்களை தினமும் ஒரு பெண்ணாக 'மார்க் செய்வார் ' மறுப்பவர்களை வலுகட்டாயமாக ம்ம்ம்ம்ம்ம்ம்ம் .மனிதரை மிக டெர்ராராய் காட்டியிருப்பார்கள் ,சமட்டியை கொண்டு நெஞ்சில் அடிப்பார்கள் (எக்ஸ்சர்சைசாம்),அண்டா அண்டாவாக பால் குடிப்பார் ,சண்டையில் ஈட்டியை கூட வைத்து குத்துவார்கள் ,ஈட்டி மடங்கிவிடும் ,அப்படி பட்ட மனிதரை அந்த படத்தின் நாயகி சுகன்யா கடைசியில் வில்லனை வதம் புரிவார் சோற்றில் விஷம் வைத்து .'இப்படிலாம் கூட வில்லைங்க இருப்பாய்ங்களா' என பயந்த காலகட்டம் அது . அப்படிப்பட்டவர் இந்த படத்தில் கூமுட்டை குடித்த முகபாவனைகளுடனே வலம் வருகிறார் .ஆனால் பயம் தான் வரமாட்டேன் என்கிறது .ஒரு வேளை நான் வளர்ந்த குழந்தை ஆகிவிட்ட காரணமாகவும் இருக்கலாம் (இந்த அளவிற்கான விமர்சனம் ஏன் வைக்கிறேன் என்றால் மதுரை நகர் முழுவதும் கரிகாலனை முன்னிறுத்தி சுவரொட்டிகள் ஒட்டபட்டிருந்தது)
                                                 
 இதில இன்னொரு வில்லானாக 'ராஜா' .கதாபாத்திரம் .சீரியாசாக சென்ற படத்தில் சிங்கம்புலி வந்தவுடன்தான் கொஞ்சம் ரிலாக்சாக முடிந்தது ,நட்புக்காக பரத் ,அஞ்சலி ,ரதிநிர்வேதம் புகழ் ஸ்வேதா மேனனும் ,இன்னும் நிறைய கேரக்டர்கள் 
                                                            
 
                        இப்பொழுதான் நம்ம ஐட்டம் வரபோகிறது.இந்த படத்தில் நடித்த அனைத்து பெண்களும் ஆல் பாரதிராஜா டைப் ஹீரோயின்ஸ்  " Full sleeve less" லே வலம்  வருகிறார்கள் இல்லை இல்லை அவ்வாறு காட்ட படுகிறார்கள் .நாயகியும் அவ்வாறே .நண்பர்களை டிக்கெட் எடுத்து கொண்டிருக்க நான் திரை அரங்கின் வெளியில் உள்ள தள்ளு வண்டியில் "கப்ப கிழங்கு " வாங்கி சாப்பிட்டேன் .என்ன செய்வது இது போன்ற கப்ப கிழங்குகளை மட்டுதான் சாப்பிட முடிகிறது  இட்ஸ் ஓகே ,பரவாயில்லை நாயகி தன்சிகாவிற்க்கு நடிப்பு வருகிறது .இருந்தாலும் அந்த "கப்ப கிழங்கில் ஒரு சுவை இருந்தது .அந்த கிழங்கில் மாவு சத்து அதிகம் என்று நினைக்கிறேன் ,நன்றாக மாவுமாவாக இருந்தது .இன்னொரு கிழங்கு வாங்கி சாப்பிட்டேன் ஆனால் அந்தளவிற்கு சுவை இல்லை ,ஆங் சொல்ல மறந்து விட்டேன் இதில் இன்னொரு நடிகையும் இருக்கிறார் பெயர் ஏதோ அர்ச்சனாவோ ,கவியோ ,இருந்தாலும் அந்த முதலில் சாப்பிட்ட கப்ப கிழங்கு .................................(கடேசி வரைக்கு கப்ப கிழங்கு தான் சாப்பிட முடியும் போல ) 
 
                                                              
அரவான் -தரம்



 
                                          
                                                                    
Read More

6.2.12

நான் கண்ட மெரீனா

              சென்னை தமிழ்நாட்டின் தலைநகர் ,வந்தேறிகளின் நகரம் ,கெட்டும் பட்டணம் போய் சேர் என்ற பழமொழிகேற்ப ,ஒரு ஐந்து வருடத்துக்கு முன்னால் மதுரையை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை மட்டும் அறிந்த
நான் ,காய்ந்த ஒரு மாலை பொழுதினில் சென்னை சென்று வேலை தேடுவதென முடிவெடுத்தேன் 

" டே அங்கையா போறே தவிச்ச வாய்க்கு தண்ணி குடுக்கமாட்டாய்ங்க டா ,"

என நண்பர்கள் வாழ்த்த ,பேருந்தில் பயணித்தேன் சென்னைக்கு .

சினிமா ஏற்படுத்திய சென்னை மாய பிம்பங்கள் விட  சென்னையை அடைந்த போது  அந்த பிரமாண்டம் என்னை பயமுறுத்தவே செய்தது , அதனால் என்னவோ தெரியவில்லை ,இல்லை பயண களைப்பினாலோ   நண்பனது அறையில் பேதியாகி கிடந்தேன் ,பேதியினால் காய்ச்சல் ,அருகிலிருந்த மருத்துவரை அணுகினேன் ,சோதனை செய்யப்பட்டது ,பின்புறம் ஊசி( நான் வேண்டாம் வேண்டாம் என மறுக்க நர்ஸ் கட்டாய படுத்தினார் ) ,சிறிது தேவலாம் போல் இருந்தது , நண்பனது அறையை அடைந்தேன் ,வீட்டுக்கார அம்மா என்னை அனுமதிக்கவில்லை ,நண்பன் வேறொரு நண்பன் அறைக்கு அழைத்து சென்றான் , அங்கு இரவு பதினொரு மணி தொடங்கி காலை ஏழு மணி வரை தான் எனக்கு தங்க அனுமதி ,இப்படியே ஒரு வாரம் கழிந்தது ,பிறகு அதற்க்கும் ஆப்பு . வேறொரு நண்பன் மூலமாக காரப்பாக்கத்தில் அவனது நண்பர்கள் அறையில் தங்கினேன் ,அங்குதான் கிட்டத்தட்ட இரண்டு வருடம் களித்தேன் , ஒரு மாதம்தான் எனக்கு சென்னை பழகி விட்டது


              காலையில் தொடங்கி இரவு வரை ஒரு மனிதன் எதையுமே நான் வாங்க மாட்டேன் என்று இருக்க முடியாது .வாழ்க்கையின் மிக எளிமையான சூத்திரம் விற்பதும் வாங்குவதும் .

கிட்ட தட்ட இது போன்ற நிலையில் இருக்கும் மனிதர்களே 'எதாவுது செஞ்சு பொலச்சுக்குலாம்யா'  என்று சென்னையை நோக்கி படை எடுக்க தொடங்கிறார்கள் .

சரியாக ஒரு மாதம் இருக்கும் 
காலையில் ஒன்பது மணிக்கு மெரினாவை அடைவது இரவு பத்து மணிவரை கடலின் மணலோடு மணலாக படுத்து கிடப்பது .பிறகு நண்பனது அறையை அடைவது .மீண்டும் காலையில் மெரினாவை அடைவது ......................'

இருந்தும் சலிப்புற்றதில்லை .கடல் அலைகள் என பொய் சொல்ல விரும்பவில்லை .பல்வேறு நிலைகளில் இருக்கும் காதலர்களும் காரணமாய் இருக்கலாம்

அடேங்கப்பா என்னமா லவ்வு பண்றாய்ங்க

மொட்ட  வெயில்லயும் முக்காடு போட்டுக்கிட்டு அப்படி என்னதாண்டா உள்ள பண்றாய்ங்க

எப்படித்தான் மடக்குறாய்ங்களோ

ஒக்காமக்கா

ஆஆஆஆஆ

யே என்னடா லட்டு லட்டா திரியிறாலுக


யே அங்க பாருடா மவுத் கிஸ்ஸ போடுறாயிங்க

 யே இதுகளோட அப்பன் ஆத்தா பார்த்த அப்படியே கடல்ல குதிச்சு தற்கொல பண்ணிக்கிவாய்ங்கடி

என்று உள்ளுக்குள் புழங்கிய காலங்கள் அவை.(ஒரு மாசம் சுத்தியும் ஒன்னும் சிக்கலல)

 மெரினா _ சென்னையை அடையாளபடுத்துவது ,,'மெயின் ரோட்டுல இருந்து கடல தொடுரதற்க்கு ஒரு கிலோமீட்டர் நடக்கனும்டா '.ஊர்களிலிருந்து ஓடிவரும்  சிறுவர்கள் தங்கள் பிழைப்புக்காக சுண்டல் ,வாட்டர் பாக்கெட்கள் விற்பது ,தன் மகனையும்  மருமகளையும் அவமான படுத்துவதற்க்காக பிச்சைடுக்கும் பெரியவர் ,பின்னர் திருந்தி சிறுவர்களிடம் அழுவது .குதிரை ஒட்டி , 'பீச்ச வாடகைக்கு விற்றுக்கேன் ' என்று தன்னை அறிமுகபடுத்தி கொள்ளும் மனநிலை சரியில்லாதவர் .இவர்களோடு சிவகார்த்திகேயன் ஓவியா காதல் என மெரீனா முழுவதும் நம்மை பயணிக்க வைத்திருக்கிறார் 

வெளியில் சொல்ல முடியாத பல காரியங்கள் நடந்து கொண்டிருக்கும் மெரினாவில் அவற்றையெல்லாம்  படத்தில் காட்ட முடியாததுதான் .அதனால்தான் என்னவோ படம் பார்த்து விட்டு எழுந்தால் தட்டி விடவேண்டிய அளவிற்கு  மண் ஒட்டவில்லை 

மெரினா -பசங்க அளவில் ஒரு பரிணாமத்தை ஏற்ற முடியாது ,ஆனாலும் பார்க்கலாம் 
                                                               
 டிட்பிட்ஸ் : இடைவேளையில் மரணம் என்னை துரத்துது  சாரு என் முப்பொழுதும்  உன் கற்பனைகள் ட்ரைலர் ஓடிகொண்டிருந்தது அதில் பலபேர் சாருவை துரத்தி கொண்டிருந்தார்கள் ,நானும் துரத்துறேன் ,துரத்தி நைட்டு போறேன் ,போயி (i mean to say when the film is release i will go night show why this english means on that day also i had seen film nanban (night show) the sathyan character resemblance has overcome me so that i am also going to search kosaki pasapupugazh (என்ன பேருடா இது )
Read More

2.11.11

வேலாயுதம் -The jumb


 வேலாயுதம் -படம் பார்த்தவர்களுக்கான விமர்சனம்         

பொதிகை மலை சாரலிலே 
வசந்த மோகன வேளையிலே 
கண்டேன்-வேலாயுதம்
                                                                 
வேலாயுதம் -அநீதியை அளி'க்க பிறந்தவன் 

மக்களாகிய நமக்கு எப்பொழுதுமே ஒரு பேராசை உண்டு .
'எல்லோரும் சிரிக்க நினைத்தால் சிரிக்கிறோம் ,அழுகை வந்தால அழுகிறோம் ,கோபம் வந்தால் மட்டும் ஏன் அதை வெளிப்படுத்த இன்னொருவன் வர வேண்டும் என்று நினைக்கிறோம் ' என்று நமக்குள் இருக்கும் அநீதிகளுக்கு எதிரான கோபத்தை தூண்டி விடுவதற்கான ஆயுதமாக மாறிய இளைய தளபதி விஜய்யின் படம் தான் வேலாயுதம்

உங்களுக்குளும் வேலாயுதம் இருக்கிறான் என்று வில்லனை சூரசம்ஹாரம் செய்துவிட்டு வசனம் வாசித்தார் பாருங்கள் .அப்படியே தறிக்கெட்டு ஓடிவந்தவன்தான். ஆனாலும் எனக்குள்ளும் ஒரு வேலாயுதம் என்பதை ஒத்துகொள்ளதான் வேண்டும் .ஆமாம் .மழையினால் மேடு பள்ளங்களை தாவி குதித்து ஓடி வந்ததின் பயனாக உணர்ந்தேன் 

எஸ் ஐயம் ஆல்சோ எ வேலாயுதம் (பெசமா தூக்குல தொங்கிடுவோமா )

வாயில் அருவாளை கவ்விக்கொண்டு ரயிலில் இடத்தை பிடிப்பதற்காக ஓடி தாவி தவ்வி குதிப்பது என தொடங்கும் டாக்டர் விஜய்யின் ஜம்பலக்கடி பம்பா வேலைகள் அடுத்து படம் முழுவதும் ஒரே ஜம்பு ஜம்பு ஜம்பு ஜம்பு ஜம்பு தான் 

இந்த இடத்தில் நாம் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும் .  தமிழ்த்தாயின் மூத்த மகனின் பேரனை எண்பத்து நாலு கோடி செலவு செய்ய வைத்து மறத்தமிழரான  
ஏ.ஆர் .முருகதாஸ் தனது ஆறாம் அறிவை பயன் படுத்தாமல் எடுத்த படமான ஏழாம் அறிவு  நமக்கு உணர்த்த முயற்சிப்பதென்ன ?  அந்த முயற்ச்சியில் வெற்றி கண்டாரா ?இல்லை .ஆனால் ல் ல் ல் ல் ல் ல் ல் .

எந்த பிரதி பலனையும் எதிர்பாராமல் அந்த பணியை  தனி ஒரு மனிதனாக செய்து முடித்தது டாக்டர் தான் என்றால் மிகையாகாது.ஸ்ப்ரிங் இல்லாமல் குதித்து ,தவ்வி .தாவி .என நமக்கு முன்னோரை நினைவு படுத்துகிறார் .நம் அறிவியல் தமிழ் என்ன கூறுகிறது .நாம் எந்த இனத்தில் இருந்து பிரிந்து வந்தோம் .அந்த வகையில் ஹாட்ஸ் ஆப் டு விஜய் 

நம் முன்னோர்
படம் பார்ப்பதற்கான செலவு = 100  ருபாய்
அதை ஈடு செய்தது நமது தங்க தலைவி வாரி வழங்கிய நான்கு பிட்டுகள் ,அம்முனிங்க அம்முனிங்க கொஞ்சம் அளவா சாப்புடுங்க  ஓவரா வெயிட்டு போட்டீங்கன்னா ஒங்களையும் ஜாக் பாட் எடுக்க விட்ருவாய்ங்க. உங்களுக்காக இங்கு எத்தனை பெயர் காத்து கொண்டிருக்கிறோம் (ரசிகனாக )

ரசகுல்லா இனிப்பா இருக்குமாமே சாப்பிட்டு பார்க்கணும்
 அடுத்து என்ன கேட்டீர்கள் ஆங் ஜெனிலியாவா .எனக்கு காய்களிலே          பிடிக்காத காய் வெண்டாக்காய் 
                                                              
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் ,குழந்தை தொழிலாளர் (உதவி அண்ணன் :திரு செங்கோவி ) சரண்யா மோகன் .




 
Read More

30.10.11

குமார காவியம்

                         
                                         அன்று குமாரன் துயில் எழுந்தபொழுது சூரியன் முந்திகொண்டது .குமாரனுக்கு அது விடுமுறை நாள் ஞாயிற்று கிழமை.ஆண்டு பரீட்சை முடிந்து பள்ளிகள் விடுமுறை  முடிந்து குமாரனுக்கு  ஒன்பதாம் வகுப்புகள் தொடங்கி ஒரு வாரமே ஆகி இருந்தது .குமாரன் அதே வழக்கமான காலை கடன்கள் முடித்தல் ,பல்விலக்குதல் ,மிகவும் எரிச்சல் பட்டு குளித்தல் ,அதன் பிறகு ஆவலாதியாக காலை உணவருந்துதல் .கடைசியாக  தனது தம்பியை அடித்து அழவைத்துவிட்டு வீட்டை  விட்டு ஓடிவிடுதல் போன்று பணிகளை செய்துவிட்டு கூட்டாளிகளுடன் விளையாட சென்று விடுவான்  .அவர்கள் இருந்த வீடு ஒரு தொகுப்பு வீடு .அந்த தொகுப்பு வீடுகளில் முதல் வீட்டில் இருந்தது தனபுஷ்பம் .அவளது தந்தையார் அரசாங்க காரியாலயத்தில் பணிபுரிகிறார் .தற்போது மாற்றலாகி வந்திருக்கிறார் .தன்புஷ்பமும் திருக்குமாரனும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் வெவேறு பிரிவுகளில் படிக்கிறார்கள் .குமாரன் தனபுஷ்பம் வீட்டை தாண்டி செல்லும் பொழுது .தனபுஷ்பமும் சரியாக வெளியில் வருகிறாள் .இருவரும் புன்னகை புரிகிறார்கள் .
ஏ எங்கே போகிறாய் 

நான் விளையாடசென்றுகொண்டிருக்கிறேன் 
கணக்கு ஆசிரியர் குடுத்த வீட்டு பாடத்தை முடித்து விட்டாயா 
இல்லை மாலைதான் செய்ய வேண்டும் .எனக்கு நேரமாயிற்று நண்பர்கள் காத்து கொண்டிருப்பார்கள் நான் வருகிறேன் 

அன்று அவர்கள் விளையாட தேர்ந்தெடுத்த இடம் ,அந்த தெருவில் புதிதாக கட்டப்பட்டு கொண்டிருந்த ஒரு வீட்டை .அந்த வீடு நான்கு மாடியாக கட்ட பட்டு கொண்டிருந்தது .குமாரனும் அவனது நண்பர்களும் ஒவ்வொரு மாடியாக ஏறி மேலிருந்து கீழே கொட்டி கிடக்கும் ஆற்று மணலில் குதிப்பார்கள் .அப்படி குதித்து குதித்து மூன்றாவது மாடியை எட்டி இருந்தார்கள் .மூன்றாவது மாடியிலிருந்து முதலில் குமரான் குதிப்பதென முடிவெடுக்க பட்டது .குமாரன் மாடி படிகளில் ஏறி கொண்டிருந்தான் .குமாரனுக்கு  இரண்டாவது மாடியிலிருந்து குதித்தபோதே சற்று பீதியாகத்தான் இருந்தது .இருந்தும் முயன்று பார்ப்போம் .அவன் மூன்றாவது மாடி விளிம்பிலிருந்து கீழே பார்த்தான் .குதிப்பதற்கு தயக்கமாக இருந்தது .குதிப்பதற்கு முன் எதேச்சையாக இடது புறம் திரும்பி பார்த்தான்.அங்கே ஒரு புத்தகம் கொட்டி வைக்க பட்ட செங்கற்கற்க்களுக்குள் தினத்து வைக்க பட்டிருப்பதைப்பார்த்தான் 

அந்த புத்தகத்தை வேக வேகமாக திருப்பி பார்த்தான் .முழுவதும் நடிகைகளின் அந்தரங்க ஆடைகளின் அணிவகுப்பாக இருந்தது .கீழே இருந்து நண்பர்கள் குமாரனை கத்தி அழைத்து கொண்டிருந்தார்கள் .தான் குதிக்கவில்லை என்பதால் நண்பர்கள் மேலே வந்துவிடுவார்கள் .அது மட்டுமில்லாமல் நண்பர்கள் இப்புத்தகத்தை பார்த்தால் தனக்கு ஒரு பக்கம் கூட கிடைக்காது .ஆதலால் இங்கிருந்து உடனே செல்ல வேண்டும் என தீர்மானித்தான்

அந்த புத்தகத்தை  அவனது கணக்கு புத்தகத்திற்குள்  ஒளித்துவைத்தான்.விதியும் உள்ளே சென்று ஒளிந்து கொண்டதை   அவன் அறியவில்லை  .வீட்டில் சூழ்நிலை சரியில்லை .அன்று முழுவது பல முறை முயன்றும் அந்த புத்தகத்தை பார்க்க முடியவில்லை .கையில் ஆப்பத்தை குடுத்து விட்டு வாயை அடைத்த போட்டு விட்ட கதையாகி போனது
மறுநாள் திங்கட்கிழமை .குமாரனும் வழக்கம் போல் பள்ளிக்கு செல்ல பள்ளி பேருந்திற்காக தனது தம்பியுடன் பேருந்து நிறுத்தத்தில் காத்து கொண்டிருந்தான் .தனபுஷ்பம் அவள் தாயாருடன் வந்தாள். அவளது தாயார் அவனை பார்த்து புன்னகைத்தார் .
அன்று குமாரனுக்கு மூன்றாவது பாட வேளை விளையாட்டு பாடம்.நான்காவது  பாடவேளையாக கணக்கு வகுப்பு .குமாரன் மூன்றாவது பாடவேளையில் விளையாட சென்றான் .அப்பொழுது எட்டாம் வகுப்பு ஆ பிரிவிற்கும் விளையாட்டு பாட வேளை .அந்த வகுப்பை சேர்ந்த மாணவர்களான ஆள்வார்,பேள்வார் இருவரும் குமாரனின் வகுப்பை அடைந்தார்கள் .இங்கு ஆள்வார் மற்றும் பேள்வார் பெயர்களின் காரணங்களை அறிந்து கொள்வோம் .அவர்கள் இருவரும் இரட்டையர்கள் .குமாரனின் பக்கத்து தெருவில் வசித்து வந்தார்கள் .குமாரன் சிறுவயதில் மட்டை பந்து விளையாடும் பொழுது பேள்வாரும் விளையாட வருவான் .பேள்வாரின் இயற் பெயர் ரமேஷ் .அவனால் இரண்டு'க்கு வருவதை அடக்க முடியாது .அவன் விளையாட வந்தான் என்றால் ஒன்றுக்கு இரண்டு முறை கேட்கப்படும் 'போய் விட்டு வந்தாயா 'என்று .அவனும் தலையாட்டுவான் .சில சமயம் எதுவும் செய்ய மாட்டான்,ஆனால் பல சயங்களில் அந்த விளையாட்டு மைதானத்தையே அசிங்கம் செய்துவிட்டு ஓடிவிடுவான் .அதன் பிறகு அவனின் அண்ணனான் சுரேஷை மண்டையிலேயே அடித்து இழுத்து வருவார்கள் .உன் தம்பி செய்த அசிங்கத்தை பார் அதை சுத்த செய் என்பார்கள் .அப்படி சுத்தம் செய்வதன் மூலம் சுரேஷ் அள்வார் என்ற பெயரை பெற்றான் .அப்பெயர் நாளிடைவில் ஆள்வார் என்ற பெயாராக உருமாறியது .அது மட்டுமில்லாமல் இந்த பெயர்களை பள்ளிகளில் பரப்பிய பெருமை குமாரனையே சாரும்.
ஆனால் அவர்கள் இன்று குமாரனின் வகுப்பிற்கு வந்த காரணமே வேறு .எந்த வகுப்பில் ஆள் இல்லையோ அந்த வகுப்பிற்கு சென்று .மதிய உணவுகளும் ,கொறிப்பதற்கு வைத்திருப்பதை திருடி தின்பது .பலரது புத்தக பைகளை வேக வேகமாக பிரித்து வகுப்பரையையே அலங்கோலமாக்கி உணவுகளை தின்று விட்டு சென்றனர் .அப்படி தின்று விட்டு சென்றதில் குமாரனின் மதியவுணவும் அடக்கம் .
நான்காவது பாட வேளை தொடங்குகிறது .வகுப்பறைக்குள் நுழைந்ததுமே எல்லோரும் கண்டிபிடித்து விடுகிறார்கள் உணவுகள் களவாடபட்டுவிட்டதென்று.கணக்கு ஆசிரியர் உள்ளே வருகிறார் .மாணவர்கள் முறையிடுகிறார்கள் .நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கிறார் .கணக்கு ஆசிரியர் வளைய வருகிறார் குமாரனின் மேசைக்கு மேல் கணக்கு புத்தகம் இருக்கிறது .புத்தகத்திற்க்குள்ளே உள்ளே இருப்பது
                                                             

தொடரும் ..............          
Read More

29.10.11

வெங்காயுதமும் தோலுரியாத பதிவர்களும்

எச்சரிக்கை : இந்த பதிவு தீவிர அஜித் ரசிகனால் எழுத படுவது .அப்பறம் படித்துவிட்டு குயோ மியோ என குதிக்காதீர்கள் .ஏன்னா நாங்கலாம் ஏறுனா ரயிலு எறங்குனா ஜெயிலு .வெளில வரது பெயிலு .

நானும் எழுத வேணாம்ன்னு வேணாம்னு தான் பார்த்தேன் .ஆனா நீங்கதான் வேணும் வேணும்னு எழுத வச்சுட்டீங்க 

சில இடங்களில் நான் குஜியை  (மன்னிக்கவும் டங்கு சிலுப்பிங் போல வெரலு சிலுப்பிங் ப்ரோப்ளம் ) டாக்டர் குஜையை வைத்து ஒரு வரம்பு மீறிய பதிவாகவே எழுதபோகிறேன் .எழுதபோகிறேன் என்பதை விட எழுத வைத்துவிட்டீர்கள் என்பதுதான் உண்மை

தமிழகத்தில் பெய்த பலத்த மழைக்கு ஊடாக வெளியாகி வெற்றிகரமாக படம்பார்க்கவந்தர்களை ஓடவைத்து கொண்டிருக்கும் டாக்டர் குஜய் அவர்களின் வெங்காயுதம் எந்த மாற்று கருத்தும் இல்லாமல்  சக்கை போடு போடுகிறது

மாப்புள எங்க வீட்டு பக்குத்துல உள்ள மாடு சானிய சக்க சக்கையா  போடுதுடா 


யே பதிவு எழுதறப்ப இம்சைய  கூட்டாதடா ,அப்பறம் பேசுவோம் 

டாக்டர் குஜய்   அவர்களின் வெங்காயுதம் படம் வெற்றி பெற விடாமல் செய்வதற்கு பல பதிவர்கள் கங்கணம் கட்டி அலைந்தார்கள் .ஆனால் அவர்களின் நிலைமை இன்று பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது . அவர்களுக்கு ஒன்றே ஒன்று மட்டும்  கூறிகொள்கிறேன் .டாக்டர் குஜையை  வைத்து பதிவெழுதி பல ஹிட்ஸ்கள் வாங்கி அதான் மூலம் பணம் சம்பாரித்து, பலவீடுகள் கட்டி ,பல பொண்டாட்டிகளை கட்டி, பல குழந்தைகளை பெற்று, தெருவோர பிச்சை காரர்களிடம் பிச்சை எடுத்து சாப்பிடுகிறீர்கள் .
இந்த நிலை யாரால் உங்களுக்கு வந்தது டாக்டர் குஜய் அவர்களும் அவர்களின் படமும்தான் என்பதை நினைவில் கொள்ள்ளுங்கள்


மாப்ள வயிறு வலிக்குதுடா 


யே சும்மா இருக்க மாட்டியா நீயி .....சும்மருடா பதிவு எழுதிகிட்டுஇருக்கேன்ல

வெங்காயுதம் தமிழ்சினிமாவின் சரித்திர (மன்னிக்கவும்) தரித்திர வருசையில் இனைய போகிறது என்பதை உங்களால் மறுக்க முடியுமா .அடுத்து டாக்டர் குஜய்   அவர்களுக்கு நடிக்க தெரியாது என்று கூறுகிறீர்கள் .யாரை பார்த்து இப்படி கூறுகிறீர்கள் அவர் நடித்த பல படங்களின் தயாரிப்பாளர்கள் நட்டாத்தில் விட பட்டுளார்கள்,அவர்கள் கையில் நெளிந்த அலுமினிய டப்பா உள்ளது ,அதில் அவ்வப்போது சில்லறைகள் விழுகிறது .இதற்க்கெல்லாம் யார் காரணம் எங்கள் டாக்டர் குஜய் அவர்கள் நடித்ததால் தானே அவர்கள் இநத நிலைமைக்கு சென்றுள்ளார்கள் .

உங்களை போன்ற பதிவர்களுக்கு பாம்பு போல் தோல் உரியவேண்டாம் என்றால் இனிமேல் டாக்டர் குஜையை பற்றி எழுதாதீர்கள் .அதையும் மீறி  எழுதினால் தோல் உரியத்தான் செய்யும் , தோல் உரிவதால் சொரிவீர்கள் ,அதன் மூலம் சிரங்கு வரும் .அப்பறம்  இனிமேல் சிரங்கு வத்தி பதிவர்கள்  என்று அழைக்கபடுவீர்கள் என்று இறுதி எச்சரிக்கையாக கூறி கொள்கிறேன் .கடைசியாக
உங்களுக்கெல்லாம்  ஒன்று சொல்லிகொள்கிறேன்

காரித்துப்புனா  அது   பேரு                                            எச்ச்சி
சாயிங்காலாம் டீ கடைல சுடுவாங்க                       பச்ச்சி
எங்க கணக்கு வாத்தியாரு கைல இருக்கு             குச்ச்சி
எப்பவுமே அவருதான்(குஜய் )  எங்களுக்கு            மச்ச்சி மச்ச்சி மச்ச்சி

டே அவசரமா போகனும்டா 


டே உனக்கு என்னதாண்டா வேணும் எழுத விடாம இம்மசை கூட்டிக்கிட்டு


டே நேத்து ராத்திரி வெங்காயுதம் படம் பார்த்தேண்டா அதுல இருந்தே 


அதுல இருந்தே 

வயிறு ..... இந்த இந்தா வந்து சொல்றேன் 


ம்ம்ம் கக்கூஸ நாரடிக்குரதுக்குன்னே வர்றாய்ங்க.போகாதீங்கடான்னா  கேக்கணும் .இப்ப அனுபவிங்க 
                                                                 

டிஸ்கி : நானும் எவ்வளவு நாள்தான் நல்லவனாவே நடிக்கிறது .
Read More

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena