நா.மணிவண்ணன்

வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

10.4.13

பத்தினி



 தினசரி பக்கங்கள் தீர்ந்த பிறகு சிறிது நேரம் மாடியில் உலாத்தலாம் என்று எழுந்தேன் .காலை காபியும் சிறிது நேர நடையும் வயிற்று சங்கடங்களை தீர்க்க வல்லது.  ஐந்து குடித்தனங்கள்  இருக்கும் காம்பௌன்ட் வீட்டில் அதிகாலை வெயிலேரத்தொடங்கியது.

"நீ தேவ...........ங் கொம்மா தேவ........ உன் குடும்பமே தேவ............... குடும்பம்டி,.....
 நா தேவ............. வா,நா தேவ............. வா ம்ம் அப்பறம் என்ன மயித்துக்குயா என் வயித்துல புள்ளைய குடுத்த ,ஆட்டோக்காரன் குடும்பம் காலையிலே ஹாரன் அடிக்க ஆரம்பிச்சுட்டாய்ங்க போல.முதலில் வீட்டை மாத்தணும்

மாடி திருப்பத்தில் சுடிதார் டாப்சும் தலையில் கொண்டையுமாக கையில் பிளாஸ்டிக் வாளியுடன் ஒதுங்கி நின்ற தீபிகாவை பார்த்து மனத்தில் எழுந்த எண்ணத்தையும் மற்றதையும் அடக்க கஷ்டப்பட்டேன். கடைசி வீட்டு அரசாங்க பேருந்து கண்டக்டரின்  மூத்த பெண் ,என்னை விட கொஞ்சம் உயரம். சற்றே கருப்பு என்றாலும் கவர்ச்சியான முகவெட்டு ,அடிக்கடி  வீட்டு வாசலில் வந்து நின்று ,அண்ணா அத்தையை கூப்பிடுங்களேன் ,என புதிய உறவுமுறையை உருவாக்குபவள்.

பல் விளக்குதல் ,குளித்தல் , காலை உண வருந்துதல் என இத்தியாதி கடமைகளை முடித்தபொழுது ,மணி பதினொன்றுனென அறிவித்தது .கண்ணாடியை பார்த்து தடவியதில் நான்கு நாள் கன்னம் சொர சொரத்தது ,என்ன பொன்னா பாகக போறோம் .செல்போன் சங்கர் அழைப்பதாக  சிணுங்கியது .
"சொல்றா போலிசு "
"எங்க இருக்க "
"வெளிய வா "
வெளியில் வந்தேன் மாமனார் வீட்டு சீதனத்தை முறுக்கி கொடிருந்தான் .அவனது வண்டியில் பின்னால் அமர்ந்தேன் " இன்னிக்கு லீவா " என்ற படியே  வண்டியை முறுக்கினான் .நேராக தமிழ்நாடு பாரில்  நிறுத்தினான்
"ஏ காலைலே வா "
"இன்னிக்கு லீவுதானே "
"அதுக்காக..... சாயிங்காலம் வருவோம்டா "
"டெண்சென்டா "
"உன் டெண்சன்பு ..............காலைலே அடிக்க முடியுமாடா   "
"அடேங்கப்பா  இதுவரைக்கும் காலைல குடுச்சதே இல்லாத மாதிரி நாடகக்கூ .........போடாத "
மெல்லிய குளிர் பரவ ,அந்த வேளையிலும் இரண்டு டேபிள்களில் சிலர் ஒதிங்கிருந்தார்கள் .சர்வர் "என்ன சாப்பிடுறீங்க "
"உனக்கு என்ன வேணும் "
"ஏதாவுது சொல்றா "
"எரிக்ஸ்டப் இருக்கா ?நாலு லார்ஜ் ,ரெண்டு டானிக் வாட்டர் ,கூலிங் இல்லாத வாட்டர் கேன் ஒன்னு ,அப்பறம் ஸ்நாக்ஸ்ல பொறி மட்டும் கொஞ்சம் ஜாஸ்த்தியா கொண்டு வாங்க
"தண்ணியே அடிக்காதவன்  மாறியே  வெளியே ஆகட்ட போட்டு எப்படி ஆர்டர் பண்ற "
"அதுக்காக மோந்து பாத்துட்டா போக முடியும் "

சங்கரை பற்றி இங்கே ஒன்றை சொல்லியேயாக வேண்டும் ,சங்கர் ஆண்ட்டிகளை மடுக்குவதில் தீரன்  ,ஆண்ட்டிகளை மடக்கி என்ன செய்வான் என்று நீங்கள்  யோசித்திதால் அப்படியே பின்வாங்கி கொள்ளுங்கள். .ஒரு முறை லிப்ட் கேட்டு வந்த ஆண்ட்டியை முள்ளு முருங்க  காட்டில் வைத்து  முடித்'தவன் .சங்கர் தமிழ்நாடு ஸ்பெஷல் போலீஸ்சில்  பணிபுரிகிறான் .ஆண்ட்டிகளை மடக்குவதில் ஒரு வகையான டெக்னிக் கையாள்பவன்.சிறு சிறு காகிதங்களை வெட்டி வைத்து கொண்டு அதில் அவனுடைய  செல் நம்பரை எழுதி வைத்திருப்பான் ,மடக்கப்பட வேண்டிய ஆண்ட்டிகளிடம் அவை தரப்படும் .ஆண்ட்டிகள் மிக இயல்பானவர்கள் ,தேவயானி போல் ஒரு குடும்பத்தலைவியாக என்னை உணரவைப்பது என்று 'பொம்மிஸ்' அணிந்தவராக இருக்கலாம் , அல்லது நைட்டியுடன் மேலே துண்டை போட்டு கொண்டு   காலையில் பால்பாக்கெட் வாங்க வருபவர்களாக இருக்கலாம் .

காலேஜுக்கு போகிற பெண்களை விட கல்யாணமான பெண்களை மடக்குவது மிக எளிது என்பது அவன் சித்தாந்தம் .

 இரண்டு லார்ஜ் அடித்து முடித்திருந்தோம் "என்னா டென்சன் உனக்கு அப்படி "என்றேன் .மேலும் ஒருலார்ஜில் மிக்சிங் செய்து ஒரே கல்பாக அடித்து விட்டு ,"ங்கொம்மா............. நம்ம்பி போனேண்டா  ஏமாத்தி அனுப்ச்சுட்டா "

"யாரு "
"எங்க வீட்டு சைடுல ஒருத்தி இருந்தாள ,நான் கூட சொல்லிருகேன்ல ,ஆளு கூட முத்துன சதா மாதிரி இருப்பான்னு "
"அவளா? ஆமஆமா  , என் புருசனகூட விட்டுட்டு உங்ககூட ஓடியாந்திறேன் சொன்னவதானே , அன்னைக்கு சிவகங்கைக்கு ஜென்டானவந்தானே  நீ "

"ஆமாமா அவளேதான் "

"ஏன் ரீஎன்ட்ரி வொர்க் ஆகலையா "

"அட்ரஸ் லாம் கண்டுபுடுச்சு விசாரிச்சு வீட்டுக்கே போயிட்டேன் .கதவ தொரன்தவ கொஞ்சம் அதிர்ச்சியாகிட்டா ,அப்படியே நைசா கதவ பூட்டிட்டு கட்டுலு வரைக்கும் கூட்டிட்டு போயிட்டேன் .முதுக தடவுனேன் பாரு
ச்ச்ச்சச்ச்ஸ் உதட்ட கடிச்சிகிட்டே ஒதுங்கி போனா "

'ஆஆங் "

"எந்திரிச்சு போயி முந்தானைய இழுக்கலாம்னு போனேன் பாரு .நீங்க தயவு செஞ்சு போயிடுங்க,நா இப்பலாம் அப்படி கெடையாது ,என் புருஷன் கூட உண்மையா சந்தோசமா இருக்கேன் .திரும்பவும் என் வாழ்க்கைல கொழப்பத்த ஏற்ப்படுத்தாதீங்க கெஞ்சுனா .

"அப்பறம் "

"அப்பறம் என்ன பண்ண அப்படியே மூஞ்சிய தொங்க போட்டு வந்துட்டேன் "

"இதலாம் ஒரு கதைன்னு வேற வெக்க பொச்சு இல்லாம வேற சொல்றியேடா .முதல்ல என்னைய வீட்டுல கொண்டு போயி விடுடா ......."

மதிய மூன்று மணி வீட்டிற்கு வரும்போது .என்னை இறக்கி விட்டு யு டர்ன் அடித்தான்

"ஏன் யு டர்ன் அடிக்கிற  இப்படியே போக வேண்டியதுதானே "

"தெற்க்குவாசளுக்கு போறேன்  ,பொண்டாட்டி முத பிரசவத்துக்கு போனது இன்னும் வீட்டுக்கு கூட்டிட்டு வல்லைலே ,கொழந்தையும் பாத்து நாலு நாள் இருக்கும் அதான் "

"ஓ ரொம்ப நாளா சூட்ட தணிக்க முடியாம அவதி பட்டிருக்க ,அதான் சான்ஸ் கெடச்ச அவள மறுபடியும் அமைக்கலாம்னு பாத்திருக்க ....க்காளி.... அவ உன்  மூஞ்சில எச்சி காரி துப்பாத கொறையா "

"சரி இன்னொரு நாளைக்கு பாப்போம் "என அவசரமாக அகன்றான்

வீட்டு காம்பவுண்டிற்குள் நுழைந்தேன் ".இங்காரு ஒங்கொப்பேன் மாறியே கத்திகிட்டே கெடந்த ,வெயில்ல தூக்கி படுக்க போட்டுடுவேன் ,கத்தாம கெடடா " என்று ஆட்டோ காரரின் மனைவி தன ஆறு மாத குழந்தைய கொஞ்சிக்கொண்டிருந்தாள் .








Read More

25.2.13

உள்ளே/ வெளியே -1

                                      செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள் என்று கூறுவார்கள் .சேமிப்பின் மகத்துவம் கையில் காலணா காசு இல்லாதபோதுதான் உணர முடிகிறது . செலவழித்தது போக மிஞ்சியதை சேமிப்போம் என்று நினைத் தீர்களானால் எந்த காலத்திலும் சேமிக்க முடியாது .சேமித்தது போக மிஞ்சியதை செலவழித்தால் நீங்களும் ஒரு கோடீஸ்வரன்தான்..சும்மாவா பாடி வைத்திருக்கிறார்கள் 

கைக்கு கைமாறும் பணமே 
உனை கைப்பற்ற நினைக்குது மனமே 
நீ தேடும் போது வருவதுண்டோ 
விட்டு போகும்போது சொல்வதுண்டோ 

சேமிப்பு ஓர் உற்ற நண்பன் 

உள்ளே :

                          நேற்று நண்பர் ஒருவரின் இல்ல விழாவிற்கு சென்றிருந்தேன் ,உண்மையிலே அந்த விழாவிற்கு பெயர் இல்ல விழாதான் .ஏதும் புதிதாக வீடு கட்டியிருக்குறீர்களா? என்று விசாரித்தேன் .இல்லை என்றார் .சுமார் ஐந்தாயிரம் பத்திரிக்கை கொடுத்திருப்பதாக கூறினார் .உறவினர்களின் விசேசங்களுக்கு  செய்த மொய்யை வரவழைத்து வசூலிப்பது தான் விழாவின் முக்கிய நோக்கம் 

ஏங்க உங்க  சொந்தக்கரவுங்க மொய் எழுதுவாங்க ,நீங்க செஞ்சிருப்பீங்க , நா எப்படிங்க மொய் எழுத முடியும் 

யோவ் மொயஎல்லாம் எழுத வேணா ,சும்மா வந்து சாப்பிட்டு போயா 

அப்ப சரி 

மண்டபத்தின் நுழைவுவாயிலில் ,குடும்ப உறுப்பினர்களுடன் நண்பர் வரவேற்றார் .அந்த இடத்திலேயே அவர்களுடன் போட்டோ மற்றும் வீடியோ எடுக்க படுகிறது .முதல் வேலையாக 'போய் சாப்பிடுங்க 'என்று அன்போடு உபசரிக்க பட்டேன் .சாப்பாடு கூடத்தில் பதினெட்டு பட்டியும் அமர்ந்து உணவருந்தி கொண்டிருந்தனர் .காதில் தண்டட்டி அணிந்த பாட்டி ஒருவர் எலும்பை கடித்து அனாயசமாக மென்று கொண்டிருந்தார் .ஒருவர் சாப்பிடும் நாற்காலிக்கு பின்னால் நின்று கொள்ளவேண்டும் .அவர் எழுந்தவுடன் மியூசிக்கல் சேரில் அமர்வது  போல அமரவேண்டும் .இது தெரியாமல் ஒரு சிறுவனிடம் ஏமாந்தேன் .

கீழே நடன  நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது .முதல் மரியாதை சிவாஜியாக 'மெத்த வாங்கினேன் தூக்கத்த வாங்கல ' என்றார் .நீ தூக்க மாத்திரையும் சேத்து  வாங்கிருக்கணும் என்று மனதிற்குள் நினைத்து கொண்டேன் .சுமார் ஐந்து மணிநேரம் இது போன்று நிகழ்ச்சி நடக்குமாம் .வெளியில் வந்தால் நீளமான மேஜை பின்னே ஐந்து பேர் நாற்காலியில் .

ஈச்சம்பட்டியெல்லாம் இங்க வாங்க , உசிலம்பட்டியெல்லாம் அங்கிட்டு போங்க ,ஒருவர் ஏப்பம் விட்டு  கொண்டே ,பத்தாயிரத்தி ஒன்னு ,ஒரு கை மீசையை முறுக்கி கொண்டிருந்தது .எங்கே இவர்களாகவே பாக்கெட்டிற்குள் கையை விட்டு பணத்தை எடுத்து மொய்யாக எழுதிகொள்வார்களோ என்று பயந்து நண்பரிடம் கூட சொல்லாமல் கொள்ளாமல் ஓடி வந்துவிட்டேன்.யோசித்து பார்த்தால் இவர்களுடைய பணம் மொய் என்ற பெயரில் உறவினர்கள் கூட்டத்துக்குளே சுற்றி கொண்டிருக்கும் ,அதுவும் வட்டியில்லா கடனாக .ஐந்தாயிரம் பேராவது கண்டிப்பாக வருவார்கள் என்றார் நண்பர் .தலைக்கு ஆயிரம் ரூபாய் வைத்தால் கூட ,அடங்கொக்க மக்கா அம்பது லட்சம்யா அம்பது லட்சம்

வெளியே :

                    சமீபத்தில் இரண்டு புத்தகங்கள் படித்தேன் .ஒன்று 'மயக்கம் என்ன' .  ஜூனியர் விகடனில் வெளியான தொடர் .இரண்டு பாரதி மணியின் 'பலநேரங்களில் பல மனிதர்கள் '.

எஸ்.கே.எஸ் மணியாக இருந்தவர் பாரதி படத்தில் பாரதியாராக நடித்த சாயாஜி சிண்டேவுக்கு தந்தையாக நடித்ததால் பாரதி மணியாக உயர்ந்தவர் .மணிரத்னத்தின் கடல் படத்தில் துவக்க காட்சிகளில் பாதிரியாராக வருபவர் .இவை எல்லா வற்றையும் விட கா.நா.சு வின் மருமகபிள்ளை .மிக அசுவாரஸ்யமாகத்தான் படிக்க தொடங்கினேன் .ஐம்பது ஆண்டு கால டில்லி வாசமும் ,பல மதிப்பு மிக்க மனிதர்களுடனான அனுபவங்களின் கட்டுரை தொகுப்பே இப்புத்தகம் .இவரை பற்றி மதிப்புரைகளில் குறிப்பிட்டது போல உண்மையிலேயே இவர் தகவல் கிடங்குதான் .இன்னும் இவரிடம் வெளிவராத பல தகவல்கள் இருக்கிறது என்று இவரே கூறிகிறார் .இந்த வயதில் திகார் சிறை வாசம் தனக்கு ஒத்து வராது என்பதாலே என்கிறார் .எவ்வித தயக்கமும் இல்லாமல் தான் ஒரு குடியனாக இருந்ததை ஒத்துகொள்கிறார் .இவர் ஒரு மிக சிறந்த நாடக நடிகரும் கூட ,அமரர் சுஜாதா இவரது 'நிகோம்போத் சுடுகாடு ' கட்டுரை பற்றி எப்போதாவுதுதான் இது போன்ற கட்டுரைகள் படிக்க முடிகிறது என்று குறிப்பிடுகிறார் .நாடாண்டவர்களின் மகன்கள் அதிகார மீறலுக்கு ,'காந்தி பாய் தேசாய் ' கட்டுரை ஒரு எடுத்துக்காட்டு .காந்தி பாய் தேசாய் ,மொராஜி தேசாயின் மகன் .மொராஜி ஆண்ட காலத்தில் இவர் விரும்பியருந்தும் விஸ்கியை தடை செய்ய முயன்றாராம் . அதை இவ்வாறு குறிப்பிடுகிறார்

"you drink your pisky, let me drink my whisky; cheers"
ரசனையான குடிகாரர் ,அன்னை தெரசாவுடனான அனுபவங்கள் ,சுஜாதா சில நினைவலைகள் ,பூர்ணம் விஸ்வனாதனுடனான  அனுபவங்கள் .சர்தாஜிகள் பற்றிய கட்டுரை முக்கியமானவை .அதிலும் குஷ்வந்தசிங் ' குறும்பான பேச்சை ' போகிற போக்கில் பதிவு செய்துவிட்டு போகிறார்
                                                                                   

ஒரு மனிதருக்கு எப்படி இவ்வளவு அனுபவங்கள் கிடைத்திருக்கும் என்று ஆச்சிரியபட்டுகொண்டிருக்கிறேன் .எது எப்படியோ தமிழ் சூழலில் மிக முக்கியமாக படிக்கப்பட வேண்டிய புத்தகம்


நா.மணிவண்ணன் 
Read More

14.11.12

போடா போடி


."ஸ்ட்ரிக்ட்லி பார் யூத்ஸ் " டைப்  படம் ,படம் முழுவதும் இளமை துள்ளல் ,முக்கால் வாசி அரங்கமே நிரம்ப படம் தொடங்க நேரமாகியது ,அதிலும் பாதி பேர் தல 'ரசிகர் போல,மனிதக்கடவுள் அஜித் ,அல்டிமேட் ஸ்டார் அஜித் , வாழ்க வாழ்க, இதில் ஹைலைட்டாக டாக்டர் அஜித் குமார் என்று ஒரு பிரகஸ்பதி கூறினார் ,அஜித் எந்த பல்கலைக்கும் சென்று காசு குடுத்து வாங்கியதாக செய்தி வரவில்லையே என்று யோசிக்க முனைந்த போது ,அடுத்த நொடியே அதற்க்கான காரணம் தெரிந்தது ,டாக்டர் அஜித்குமார் ,நர்ஸ் வி............,பெசிகாகவே நான் ரொம்ப நல்லவன் ,ஆனா இந்த ஒரு விசயத்துல மட்டு தரடிக்கெட் ரேஞ்சுக்கு போறோமே ,மனம் சில நேரங்களில்  உறுத்தத்தான் செய்கிறது 
                                                             
 " கொழந்தைக்கு அவ அம்மானா நான் அப்பா .கொழந்தைக்கு அவ தாய்ப்பால் குடுத்திருக்கலாம் ,ஆனா நான் என் குழந்தைக்கு குண்டி கழிவி விட்டிருக்கேன் "என படம் முழுவதும் சிம்புவின் அலப்பறை பல  ,கலாச்சாரத்தை காப்ப்ற்றுகிறேன் பேர்வழியென்று கணவனே மனைவியுடன் நடன நிகழ்ச்சியில் ஆடுவதுதான் "போடா போடி " யின் ஒன்லைன்

,கதைப்படி'போடா போடி'இருவரும் லண்டன் வாழ் தம்ளர்கள்\\/// ச்ச் ச்சே இது தமிழர்கள்  இரண்டு மூன்று சந்திப்புகளிலேயே ,காதல் என தொடங்கி ,கல்யாணம் முடிந்து , மனைவியின் பிரசவத்தை வீடியோ எடுப்பது ,(யூடுபில் ஏத்தவா போகிறேன் என்று நக்கல் வேறு) ,இடைவேளை ,குழந்தை பிரிவு ,ஊடல் பிரிவு ,மீண்டும் இணைதல் ,மீண்டும் பிரசவம் ,ஸ்ஸ் ஸ்ஸ்ஸ்ஸ் அபா ,இந்த படத்தை எப்படி அனுகுவதென்றே  தெரியவில்லை ,கலாச்சரீதியாக அணுகுவதா ?ஆனால் கலாச்சாரத்தை பற்றி சிம்பு  வசனமாக பேசுவதுதான் ,பாஸ் தாங்கள் அதற்க்கு இந்த படத்தில் விரலை வைத்து வித்தையாவது  காட்டிருக்கலாம்  ,பொறுத்திருப்போம் ,சிம்புவிற்கு தோதாக வசதியான கேரக்டர்தான் ,கூடவே நடனம் வேறு ,பிரித்து மேய்ந்திருக்கிறார் ,சரத்குமார் மகள் வரலட்சுமி  ,வித்தியாசமான  குரல்,நடிப்பு ,காதல் மோதிரத்தை கழிவறைக்குள் போட்டுவிட்டு கையைவிட்டு தொழாவி எடுத்து நம்மை பரிதாப கொள்ளவைக்கிறார்  ,இவரின் நடனத்திறமைக்காகவே தேர்வு செய்யபட்டிருக்கிறார் போல  , என்ன வாய்தான் கொஞ்சம் அகலம் .இருவருக்குமான வேதியியல் நெருக்கம்  நன்றாக  இருக்கிறது



சிம்புவின் சித்தப்பாவாக கணேஷ் வழக்கம்போல் ,திக்குஇல்லாமல்  அலையும் கதையில் ஓரளவுக்கு நம்மை சிரிக்கவைக்கிறார் ,நீண்ட கால தயாரிப்பில் இருந்ததாலோ என்னவோ இயக்குனருக்கு சலிப்பு தட்டிவிட்டது போல ,பரதநாட்டிய தாரகை சோபனா எதற்கென்றே தெரியவில்லை

லவ் பண்ணலாமா வேணாமா ,லவ் பண்ணலாமா வேணாமா ,லவ் பண்ணலாமா வேணாமா ,(இந்த படத்த தயாரிக்கலாமா வேணாமா ,இந்த படத்த தயாரிக்கலாமா வேணாமா )மிஸ்டர் தயாரிப்பாளர்  இப்படித்தான் யோசித்திருப்பார் ,பாடல்கள் பார்ப்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது ,தனியாக கேட்பதற்கு நன்றாக இருக்குமா என்று தோன்றவில்லை ,பின்னணி இசை பரவாயில்லை ,இதே ரீதியில் போனால் சிம்பு ,பிரசாந்த் ,ஹம்சவிருதன் வகையறாக்களுடன்  இனைந்து விடுவார் என்பது உறுதி .

மொத்தத்தில் போடா போடி -நடனநிகழ்ச்சி 
Read More

6.11.12

I-T ACT SECTION 66 A - தனி மனித உரிமைகளை பறிக்கிறதா???.


முன் குறிப்பு : சமீபத்தில் இணையத்தில் கருத்து தெரிவிப்பவர்களின் மீதான, சில நிகழ்வுகளுக்குப் பிறகுதான் இந்த தகவல் தொழில் நுட்பச் சட்டம் 2000, அதன் உட்பிரிவு 66A நாம் எல்லோராலும் கவனிக்கப்பட்டது. அதில் இருக்கும் ஷரத்துகள் அரசியல் சாசனம் நமக்கு அளித்துள்ள உரிமைகளை பறிப்பதாக உள்ளதாக ஒரு எண்ணம் ஏற்பட்டுள்ளதால், பதிவர் திரு தருமி ஐயாவின் கருத்தில் முழு உடன்பாடு கொண்டு,  அந்த சட்டத்தின் 66A பிரிவுக்கான எனது எதிர்ப்பை தெரிவிக்க, நானும் அதை இங்கே பதிவாக இடுகிறேன்.
==================================================================

I-T ACT SECTION 66 A பற்றி ப்ரனேஷ் ப்ரகாஷ், (Pranesh Prakash, Policy Director of the Bangalore based Centre for Internet and Society)கூறுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.(http://www.thehindu.com/news/national/iac-volunteer-tweets-himself-into-trouble-faces-three-years-in-jail/article4051769.ece) அவர் சொல்கிறார்: ’யாரும் என்னைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அதில் என்னை வேண்டுமென்றே மோசமாக எழுதினாலும் என்னால் அதைப் பெரிதாக ஒன்றும் சட்டப்படி செய்ய முடியாது. ஆனால் அப்படி ஒரு செய்தியை e-mail செய்தாலும் உங்களுக்கு மூன்றாண்டுகள் ஜெயில் நிச்சயம்! இது தவறாக யாரையும் கொன்றுவிட்டால் கிடைக்கும் இரண்டாண்டு சிறைத் தண்டனையை விட அதிகம்!’

”ரவி (சீனிவாசன்) மேல் கார்த்திக் சிதம்பரம் கொடுத்த புகாரின் பேரில், நீதிமன்றங்கள் அவரைத் 
தண்டிக்காதவரை அவரைக் கைது செய்தது தவறு” என்று இன்று இந்து தினசரியில்

 (5.11.12 - http://www.thehindu.com/todays-paper/advani-condemns-arrest-of-iac-activist/article4065734.ece) அத்வானி 
கூறியுள்ளார்.

இந்துவில் வந்த தலையங்கமும்
 (http://www.thehindu.com/opinion/editorial/an-attack-on-media-freedom/article4055267.eceஇக்கருத்தைப்
 பற்றியும், பேச்சு சுதந்திரத்தைப் பற்றியும் தெளிவாக வலியுறுத்தியுள்ளது.


*      இவ்வாறு செய்தித் தாட்களில் வந்த செய்திகளை நம் பதிவுகளில் மேற்கோளிடுவதும் கூட 
இச்சட்டத்தினால் தவறாகக் கருத்தப்படும் என்ற நிலையே இப்போது உள்ளது. இது தனி மனித 
உரிமைகளையே பறிக்கும். நம் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை நமக்கு
 வேண்டும். இந்த உரிமை நம்மிடம் இருக்குமளவிற்கு I-T ACT திருத்தப்பட வேண்டும்.

*      இதனோடு, பிரபலங்கள் கொடுக்கும் வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் காவல் 
துறையின் அவசரப் போக்கும் நமக்கு தேவையில்லாத அச்சத்தை மட்டுமே தரும். 
சரியான விசாரணை வேண்டும்; தேவையற்ற கைது தவிர்க்கப்பட வேண்டும் என்பவைகளைக்
 காவல் துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்.

*     முறையான விசாரணை மூலம் உண்மைகள் வெளிவரும் முன்பே வெகு கோரமான 
ஊடகச் செய்திகள் குற்றமற்றவர்களையும் பாதிக்கும் என்ற எண்ணம் ஊடகங்களிடம் 
இல்லை என்பதும் வேதனையான செய்தி. ஊடகங்கள் இன்னும் பொறுப்போடு செயல்பட 
வேண்டும்.


நம் உரிமையையும், சுதந்திரத்தையும் காப்போம்.
இதற்காக பதிவர்கள் ஒன்று படுவோம்.
==============================================================================

ட்விட்டர்,முகநூல், கூகுள் பிளஸ்ஸில் நிலைச்செய்தியாக பகிர,

"இந்திய அரசே,தனிமனித உரிமைகளையே பறிக்கும். I-T ACT 
Section 66 A திருத்தப்பட வேண்டும். தனிமனித கருத்துக்களை 
சுதந்திரமாக வெளியிடும் உரிமை வேண்டும்"

நன்றி!

=============================================================================

வேண்டுகோள்:

கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவான நிலைப்பாடு கொண்ட அனைத்து இணைய ஊடகவியலாளர்களும் இப்பதிவினை பிரதியெடுத்து வெளியிட்டு ஒத்துழைக்க
வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.மேலும் பதிவிட்ட பின் இடுகையை தருமி
அவர்களின் தளத்தில் இணைக்கவும். நன்றி!
Read More

3.3.12

அரவான்

                            தமிழ் மரபில் அரவான் பற்றி மிக நீண்ட விளக்கங்கள் உள்ளன .அரவான் என்பவர்  களத்தில் பலியிடுவதற்காக உருவாக்கப்பட்டவர் . அது போன்ற ஒரு அரவானின் வரலாற்றையும் அத்தோடு கள்ளர் மரபையும் அவர்களுடைய குலத்தொழிலான கன்னம் வைத்து திருடுவதும் .பதினெட்டாம் நூற்றாண்டின் கள்ளர் சமுதாயத்தையும் ,ஒரு அறிய தொகுப்பாகவும் ,ஆவணமாகவும் காவல் கோட்டம் ' ச .வெங்கடேசன் உதவியுடன் கூடுதல் கதை அமைத்து இயக்கியிருக்கும் வசந்த பாலனுக்கு வாழ்த்துகள்
                                                        
 
பதினெட்டாம் நூற்றாண்டில் கதை தொடங்குவதாக காட்டபடுகிறது .பசுபதி வேம்பூர் கிராமத்தின் தலைமை திருடனாக செயல்பட்டு அக்கிராமத்திற்க்கே படி'அளக்கிறார் .ஒரு கட்டத்தில் மகாராணியின் வைர அட்டிகை களவு செய்யபடுகிறது .அதை தொடர்ந்த காட்சியில் ஆதியின் அறிமுகமும் ,பசுபதி ஆதியின் நட்பும் ,பசுபதியின் தங்கை ஆதியின் மேல் கொண்ட காதலும் என தொடரும் கதையில் தொய்வு ஏற்படுவது இரண்டாம் பாதியில்தான் ,நீளத்தை கொஞ்சம் கத்திரித்து திரைக்கதியில் கொஞ்சம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்பது என் கருத்து .
 
இடைவேளை வரை பசுபதியின் ஆட்டம்தான் .இடைவேளைக்கு பிறகுதான் ஆதி குடுத்த பணியை செவ்வனே செய்திருக்கிறார் .வில்லனாக கரிகாலன் ,ரீஎன்ட்ரி .என் சிறுவயதில் பார்த்த படம் சோலையம்மா ' தனுஷின் அப்பா கஸ்துரி ராஜா இயக்கிய படம் என்று நினைக்கிறேன் ,ஒரு ஆஜால் குஜால் பாட்டு கூட ஒன்று வரும் 'தாமிர பரணி ஆறு நீ தரையில் நடக்கும் தேரு'.கரிகாலன்தான் அந்த படத்தின் வில்லன் ,மனிதர் கவட்டையை ஒன்று வைத்துகொண்டு அந்த ஊரில் உள்ள பெண்களை தினமும் ஒரு பெண்ணாக 'மார்க் செய்வார் ' மறுப்பவர்களை வலுகட்டாயமாக ம்ம்ம்ம்ம்ம்ம்ம் .மனிதரை மிக டெர்ராராய் காட்டியிருப்பார்கள் ,சமட்டியை கொண்டு நெஞ்சில் அடிப்பார்கள் (எக்ஸ்சர்சைசாம்),அண்டா அண்டாவாக பால் குடிப்பார் ,சண்டையில் ஈட்டியை கூட வைத்து குத்துவார்கள் ,ஈட்டி மடங்கிவிடும் ,அப்படி பட்ட மனிதரை அந்த படத்தின் நாயகி சுகன்யா கடைசியில் வில்லனை வதம் புரிவார் சோற்றில் விஷம் வைத்து .'இப்படிலாம் கூட வில்லைங்க இருப்பாய்ங்களா' என பயந்த காலகட்டம் அது . அப்படிப்பட்டவர் இந்த படத்தில் கூமுட்டை குடித்த முகபாவனைகளுடனே வலம் வருகிறார் .ஆனால் பயம் தான் வரமாட்டேன் என்கிறது .ஒரு வேளை நான் வளர்ந்த குழந்தை ஆகிவிட்ட காரணமாகவும் இருக்கலாம் (இந்த அளவிற்கான விமர்சனம் ஏன் வைக்கிறேன் என்றால் மதுரை நகர் முழுவதும் கரிகாலனை முன்னிறுத்தி சுவரொட்டிகள் ஒட்டபட்டிருந்தது)
                                                 
 இதில இன்னொரு வில்லானாக 'ராஜா' .கதாபாத்திரம் .சீரியாசாக சென்ற படத்தில் சிங்கம்புலி வந்தவுடன்தான் கொஞ்சம் ரிலாக்சாக முடிந்தது ,நட்புக்காக பரத் ,அஞ்சலி ,ரதிநிர்வேதம் புகழ் ஸ்வேதா மேனனும் ,இன்னும் நிறைய கேரக்டர்கள் 
                                                            
 
                        இப்பொழுதான் நம்ம ஐட்டம் வரபோகிறது.இந்த படத்தில் நடித்த அனைத்து பெண்களும் ஆல் பாரதிராஜா டைப் ஹீரோயின்ஸ்  " Full sleeve less" லே வலம்  வருகிறார்கள் இல்லை இல்லை அவ்வாறு காட்ட படுகிறார்கள் .நாயகியும் அவ்வாறே .நண்பர்களை டிக்கெட் எடுத்து கொண்டிருக்க நான் திரை அரங்கின் வெளியில் உள்ள தள்ளு வண்டியில் "கப்ப கிழங்கு " வாங்கி சாப்பிட்டேன் .என்ன செய்வது இது போன்ற கப்ப கிழங்குகளை மட்டுதான் சாப்பிட முடிகிறது  இட்ஸ் ஓகே ,பரவாயில்லை நாயகி தன்சிகாவிற்க்கு நடிப்பு வருகிறது .இருந்தாலும் அந்த "கப்ப கிழங்கில் ஒரு சுவை இருந்தது .அந்த கிழங்கில் மாவு சத்து அதிகம் என்று நினைக்கிறேன் ,நன்றாக மாவுமாவாக இருந்தது .இன்னொரு கிழங்கு வாங்கி சாப்பிட்டேன் ஆனால் அந்தளவிற்கு சுவை இல்லை ,ஆங் சொல்ல மறந்து விட்டேன் இதில் இன்னொரு நடிகையும் இருக்கிறார் பெயர் ஏதோ அர்ச்சனாவோ ,கவியோ ,இருந்தாலும் அந்த முதலில் சாப்பிட்ட கப்ப கிழங்கு .................................(கடேசி வரைக்கு கப்ப கிழங்கு தான் சாப்பிட முடியும் போல ) 
 
                                                              
அரவான் -தரம்



 
                                          
                                                                    
Read More

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena