வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

8.6.11

சோப்பு ,சீப்பு ,கண்ணாடி -7

இனிய நட்புகளுக்கு வணக்கம்
                                  தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் தி.மு,க  வின் குடும்ப வாரிசுகள் அனைவரும் கலக்கத்தில் உள்ளனர் ,அடுத்து யாரு கம்பி என்ன போவது என்று ?மத்திய ஜவுளித்துறை  தயாநிதி மாறன் கதறி கொண்டிருக்கிறார் " அடுத்து நம்மள உள்ள தூக்கி வச்சுடுவாய்ங்களோ"  ஊடங்களின் ஏகபோக உரிமைகளை தம்பி தாரைவார்த்து  அண்ணன் கையில் கொடுக்க ,கேடி அண்டகோ பிரதர்ஸ்  ஆடிய ஆட்டம் என்ன ,பாடிய பாட்டு என்ன ? 


சோப்பு : 

கண்கள் பனித்தன இதயம் இனித்தன நாடகத்தை நடத்தாமலே இருந்திருக்கலாம் போல
 நாடாளுமன்ற கூட்டு குழு  விசாரிக்க உள்ளதால் இவர் விரைவில் மத்திய அமைச்சர் பதிவியை ராஜினாமா செய்யலாம்    

சீப்பு : 
          
 1 .     அண்ணல் காந்திஜி சமாதியில் நடனமாடி தொண்டர்களை குசிப்படுத்துகிறாராம் ,இதே போன்று தற்போது தோய்ந்து போய் உள்ள தி.மு.க தொண்டர்களை குசிப்படுத்த அண்ணா சமாதியில் தானை தலைவி குசுப்பு நடனமாடுவாரா ?

2 . 
சும்மா இருந்திருக்கலாமோ ?
அரசியல்வாதியாகிவிடலாம் என்ற ஆசையில் இப்படி மண்ணள்ளி கொட்டிவிட்டார்களே ,ஆயிரம் கோடி எப்படி வந்தது என்று அமலாக்க பிரிவினர் விசாரிக்க போகிறார்களாம் ,ஏன் உனக்கு இந்த வேண்டாத வேலை ,ஆசிரமத்திற்கு வெளில நாலு பந்தகால நட்டு அங்க உண்ணாவிரதம் இருக்க வேண்டியதுதான ,உண்ணாவிரதம் இருக்க பதினெட்டு கோடி செலவழிச்சா .

கண்ணாடி :
                          
3 .
                 

கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு
மகளின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டதை கேட்ட கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள், கோர்ட் வளாகத்தில் கண்ணீர் விட்டு அழுதார். 
 தங்களின் வருத்தத்தை உணரமுடிகிறது எனக்கு ஒரு மகளிருந்து அவளை சிறையிலடைத்து ,ஜாமீன் வழங்க மறுத்தால் எப்படி இருக்குமோ , அப்படித்தானே உங்களுக்கும்  இருக்கிறது ,என்னால் உணரமுடிகிறது ,உணரமுடிகிறது ,அழாதீர்கள் அழாதீர்கள்

4 . 
அழகிரிக்கு ஜாமீன் 
மத்திய அமைச்சர் அஞ்சாநெஞ்சன் அண்ணன் அழகிரி தேர்தலின் போது மதுரை மேலூரில் நடந்த பிரச்சனைக்காக கோர்ட்டில் தன் பரிவாரங்களுடன்  ஆஜராகி முன்ஜாமீன் பெற்றார் 

                                      ஐயா என்னய்யா இது காலகொடுமையா இருக்கு ஒரு புள்ளைக்கு ஜாமீன் குடுக்குறாய்ங்க இன்னொரு புள்ளைக்கு குடுக்க மாட்டேங்கிறாய்ங்க ,கூடா நட்பு கேடாய்  முடிஞ்சுபோச்சே ,ஓவர் நைட்ல  இப்படி உங்கள ஒச்சுபுட்டாய்ங்கலே ,அதான்யா ஒரு தமிழனா  எனக்குரொம்ப வருத்தமா இருக்கு 
 5.
                                                             
சமச்சீர் கல்வி திட்ட குறைபாடுகளை மறுக்கவில்லை: ராமதாஸ்

பல்ட்டி பரமானந்தன் விருதுக்கு தங்கள் பெயர் பரிந்துரைக்க படுகிறது 

ரசிகர்களுக்கு நடிகர் விஜய் வேண்டுகோள்!
                           
நடிகர் விஜய்க்கு வரும் 22ம்தேதி பிறந்த நாள். என் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடுவதை விட்டு விட்டு, ஏழை - எளிய மக்களுக்கு உங்களால் ஆன உதவிகளை செய்து சமூக நற்பணிகளில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்,

தமிழ்நாட்டின் இனமான தலைவர் ,எதிர்கால முதல்வர் ,டாக்டர் இளைய தளபதி விஜய் அவர்களின்  ரசிகர்களே புரிந்துகொள்ளுங்கள் ,அவரின் பிறந்தநாளை கொண்டாடதீர்கள்


லாஸ்ட் பட்நாட் லீஸ்ட்


விஜயகாந்த் மகனுக்கு போட்டியாக களமிறங்கும் டி.ஆர்., மகன்!
தமிழக மக்கள் கடும் சித்திரவதைக்கு உள்ளாக போகிறார்கள் என்று தெரிகிறது


நட்புடன்

நா.மணிவண்ணன் 


11 கருத்துகள்:

சக்தி கல்வி மையம் said...

பல செய்திகளை தாங்கிய பதிவு அருமை..

Unknown said...

அட்டகாசம் மணி! கலக்குறீங்க!
கனிமொழியப் பாத்தா பாவமா இருக்குல்ல! ஒண்ணுமே தெரியாத பச்சப்புள்ளமாதிரி இருக்குப்பா...!

Unknown said...

யோவ் செத்த பாம்பயே போட்டு எவ்வளவு நாளுதான் அடிக்கறது, அதான் தயா மேலயும் கை வச்சிட்டாங்க போல, இளைய தளபதிய விட மாட்டீங்க போல, இருங்க சிவாகிட்ட சொல்லி கொடுக்கறேன் ...

pichaikaaran said...

சூப்பர்

தமிழ்வாசி பிரகாஷ் said...

விஜயகாந்த் மகனுக்கு போட்டியாக களமிறங்கும் டி.ஆர்., மகன்!>>>>

தமிழ்நாட்டு மக்கள் பாவம்....


தமிழ்வாசியில்: அட்ராசக்க சி.பி. செந்திலின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்

Sivakumar said...

அ(ற்புதமாவும்) தி(ல்லாவும்) மு(ன்னணி) க(ட்சிகளை) வாரி இருக்கீங்க.

உணவு உலகம் said...

சுவையான பகிர்வு. கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு விடை கிடைக்குமா?

Unknown said...

அது என்னய்யா ஏழைகளுக்கு உதவறது......துட்டு போட்டு இந்த நாதாரி படத்த பாத்தாலே அவன் ஏழையா ஆயிருவான்......இதுல எப்படி அடுத்த ஏழைக்கு உதவறது... ஹிஹி!..........பலவிஷயங்களை உள்ளடக்கிய பதிவு சூப்பரு!

Unknown said...

கடைசி நச்

அஞ்சா சிங்கம் said...

என்னமோ போங்க நமக்கு நல்லா பொழுது போகுது ........

அஞ்சா சிங்கம் said...

மாப்பு நான் தான் உனக்கு ஏழாவது ஒட்டு போட்டேன் .
மரியாதையா என் கடை பக்கம் வந்திரு இல்லைன்னா ...............
அருவா பேசும் ...........

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena