வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

24.8.10

எந்திரனின் தந்திர பேச்சு

சென்னையில் பையனூர் என்ற இடத்தில் நடந்த திரைப்பட நடிகர்,நடிகைகளுக்கான நகரை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த இடத்தை திரைப்பட கலைஞர்களுக்காக முதல்வர் கருணாநிதி வழஙகினார்.
இதற்கான அடிக்கல் விழாவில் நடிகர் ரஜனிகாந்த பேசினார்.' என்னை வாழவைக்கும் தெய்வங்களாகிய தமிழ்மக்களுக்கு நன்றி.தாசரி நாராயணா தெலுங்கில் பேசினார். தமிழ்மக்களுக்கு அது புரியுமா என்றனர். தமிழர்களுக்கு தெரியாத விஷயமே இல்லை. தமிழ் மக்கள் மனதை ஜெயித்து விட்டால் அவர்களிடம் பாராட்டு பெற்று விட்டால் இந்தியாவிலேயே பெயர் வாங்கிவிடலாம். இது சினிமாவுக்கு மட்டுமல்ல. அரசியல் உள்பட எல்லா தொழிலுக்கும் பொருந்தும்.

இங்கு திரைப்பட நகர் திட்டம்ட சீககிரம் நடக்கும்னு எதிர்பார்க்கலை.கலைஞர் ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா அது முடிவு தான். ரொம்ப சந்தோசமா இருக்கு. நான் மும்பை,பெங்களுர்,டெல்லினு நிறைய நகரங்களுக்கு போறேன். அங்கெல்லாம் கலைஞர் பற்றி தான் பேசுறாங்க. இந்த வயதில் எப்படி இவ்வளவு சுறுசுறுப்பு அவரை பார்க்கும் போது ஒரு புத்தகத்தில் மகான் சொன்னது தான் ஞாபகம் வருது. சுயநலத்துக்காக உழைக்கறவங்க சீக்கிரத்துல சோர்ந்து போயிட்றாங்க.பொதுநலத்துக்காக உழைக்கறவங்க சோர்வடையமாட்டாங்க. கலைஞர் பொதுநலத்துக்காக உழைப்பதால் சோர்வடையிறதில்ல. இந்த விழாவில் உங்களுக்காக அவருக்கு நன்றி சொல்லிக்கிறேன்.

யாராவது நிலம் வாங்க போய் அதை பார்த்து விட்டு வேண்டாம் என்று திரும்பி வந்தால்,மூதேவி போறான் பாரு.இவனுக்கு நிலம்,வீடு கிடைக்காது என்று அவைகள் சொல்லும். எனவே வீடு,நிலத்தை வேண்டாம் என்று சொல்லக்கூடாது.பாங்கியில் பணம் கிடைக்க இங்கேயே உத்தரவு போட்டாச்சு. பெரியார் சமத்துவபுரம் என்பார்கள். இது கலைஞரின் சமத்துவபுரமாக இருக்கும்'
இப்படி ரஜினி பேசியதாக அறியவருகிறது.


 

0 கருத்துகள்:

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena