வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

2.11.11

வேலாயுதம் -The jumb


 வேலாயுதம் -படம் பார்த்தவர்களுக்கான விமர்சனம்         

பொதிகை மலை சாரலிலே 
வசந்த மோகன வேளையிலே 
கண்டேன்-வேலாயுதம்
                                                                 
வேலாயுதம் -அநீதியை அளி'க்க பிறந்தவன் 

மக்களாகிய நமக்கு எப்பொழுதுமே ஒரு பேராசை உண்டு .
'எல்லோரும் சிரிக்க நினைத்தால் சிரிக்கிறோம் ,அழுகை வந்தால அழுகிறோம் ,கோபம் வந்தால் மட்டும் ஏன் அதை வெளிப்படுத்த இன்னொருவன் வர வேண்டும் என்று நினைக்கிறோம் ' என்று நமக்குள் இருக்கும் அநீதிகளுக்கு எதிரான கோபத்தை தூண்டி விடுவதற்கான ஆயுதமாக மாறிய இளைய தளபதி விஜய்யின் படம் தான் வேலாயுதம்

உங்களுக்குளும் வேலாயுதம் இருக்கிறான் என்று வில்லனை சூரசம்ஹாரம் செய்துவிட்டு வசனம் வாசித்தார் பாருங்கள் .அப்படியே தறிக்கெட்டு ஓடிவந்தவன்தான். ஆனாலும் எனக்குள்ளும் ஒரு வேலாயுதம் என்பதை ஒத்துகொள்ளதான் வேண்டும் .ஆமாம் .மழையினால் மேடு பள்ளங்களை தாவி குதித்து ஓடி வந்ததின் பயனாக உணர்ந்தேன் 

எஸ் ஐயம் ஆல்சோ எ வேலாயுதம் (பெசமா தூக்குல தொங்கிடுவோமா )

வாயில் அருவாளை கவ்விக்கொண்டு ரயிலில் இடத்தை பிடிப்பதற்காக ஓடி தாவி தவ்வி குதிப்பது என தொடங்கும் டாக்டர் விஜய்யின் ஜம்பலக்கடி பம்பா வேலைகள் அடுத்து படம் முழுவதும் ஒரே ஜம்பு ஜம்பு ஜம்பு ஜம்பு ஜம்பு தான் 

இந்த இடத்தில் நாம் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும் .  தமிழ்த்தாயின் மூத்த மகனின் பேரனை எண்பத்து நாலு கோடி செலவு செய்ய வைத்து மறத்தமிழரான  
ஏ.ஆர் .முருகதாஸ் தனது ஆறாம் அறிவை பயன் படுத்தாமல் எடுத்த படமான ஏழாம் அறிவு  நமக்கு உணர்த்த முயற்சிப்பதென்ன ?  அந்த முயற்ச்சியில் வெற்றி கண்டாரா ?இல்லை .ஆனால் ல் ல் ல் ல் ல் ல் ல் .

எந்த பிரதி பலனையும் எதிர்பாராமல் அந்த பணியை  தனி ஒரு மனிதனாக செய்து முடித்தது டாக்டர் தான் என்றால் மிகையாகாது.ஸ்ப்ரிங் இல்லாமல் குதித்து ,தவ்வி .தாவி .என நமக்கு முன்னோரை நினைவு படுத்துகிறார் .நம் அறிவியல் தமிழ் என்ன கூறுகிறது .நாம் எந்த இனத்தில் இருந்து பிரிந்து வந்தோம் .அந்த வகையில் ஹாட்ஸ் ஆப் டு விஜய் 

நம் முன்னோர்
படம் பார்ப்பதற்கான செலவு = 100  ருபாய்
அதை ஈடு செய்தது நமது தங்க தலைவி வாரி வழங்கிய நான்கு பிட்டுகள் ,அம்முனிங்க அம்முனிங்க கொஞ்சம் அளவா சாப்புடுங்க  ஓவரா வெயிட்டு போட்டீங்கன்னா ஒங்களையும் ஜாக் பாட் எடுக்க விட்ருவாய்ங்க. உங்களுக்காக இங்கு எத்தனை பெயர் காத்து கொண்டிருக்கிறோம் (ரசிகனாக )

ரசகுல்லா இனிப்பா இருக்குமாமே சாப்பிட்டு பார்க்கணும்
 அடுத்து என்ன கேட்டீர்கள் ஆங் ஜெனிலியாவா .எனக்கு காய்களிலே          பிடிக்காத காய் வெண்டாக்காய் 
                                                              
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் ,குழந்தை தொழிலாளர் (உதவி அண்ணன் :திரு செங்கோவி ) சரண்யா மோகன் .




 

10 கருத்துகள்:

VANJOOR said...

அடியிற்க‌ண்ட‌ சுட்டியை சொடுக்கி ஸ்தம்பிக்க செய்யும் விடியோக்கள் காணுங்கள். விவரிக்க வார்த்தைகள் இல்லை.


//// ** அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல். அரிதான விடியோக்கள். காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். எங்கேயும்! ஒவ்வொரு விநாடியும் !! எச்சூழ்நிலையிலும்!!! அகிலம் முழுவதிலும்!!!! “ மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… /////


.

Sivakumar said...

எங்க மணி விமர்சனம்? நிறைய எதிர்பாத்தேன்.

Yoga.S. said...

நல்லாக் கலாய்ச்சிருக்கீங்க!ஹன்சி தானே மெலி
ஞ்சுக்குவாங்க!டான்ஸ் பண்ணுறப்போ இடுப்பு அங்கொரு பக்கம் இங்கொரு பக்கம் போவுதாமே?(செங்கோவி சொல்லியிருந்தாரு)பரவால்ல,இடுப்பா முக்கியம்?

பாலா said...

இந்த படத்த பார்த்து பலருக்கு போன ஜென்ம நினைவு வந்ததாக சொன்னார்கள். ஆனா உங்களுக்கு நம்ம முன்னோர்களின் நினைவே வந்துருச்சு போலிருக்கு.

செங்கோவி said...

டாக்குட்டர்னாலே மணிக்கு தனி குஷி தான்..

Unknown said...

என்னவோ ப்ளான் பண்ணிபுட்டீக போல ஹிஹி!

தமிழ்வாசி பிரகாஷ் said...

அடிச்சு ஆடுறார் மணி

இரண்டு புதிய திரைப்படங்கள் பற்றி - பிராப்ள பதிவர்களின் விமர்சனம்

vivek kayamozhi said...

மணி உங்கள் முழு விமர்சனத்தை எதிர்பார்த்துவந்தேன்....எமாத்தீடீகளே... ஆனால் ஒன்று....எனக்கு படம் பாக்க கொடுப்பினை இல்ல....சின்ன வயசுல இருந்தே எனக்கு ஹார்ட் வீக். குருவிக்கு பிறகு வந்த டாகுடர் படம் எதுவும் பாக்கல... பாத்தா நான் டாக்டர் ட்ட போகணும்னு என் குடும்ப ஜோசியர் சொல்லீட்டாரு....

vivek kayamozhi said...

மணி உங்கள் முழு விமர்சனத்தை எதிர்பார்த்து வந்தேன்....எமாத்தீடீகளே... ஆனால் ஒன்று....எனக்கு படம் பாக்க கொடுப்பினை இல்ல....சின்ன வயசுல இருந்தே எனக்கு ஹார்ட் வீக். குருவிக்கு பிறகு வந்த டாகுடர் படம் எதுவும் பாக்கல... பாத்தா நான் டாக்டர் ட்ட போகணும்னு என் குடும்ப ஜோசியர் சொல்லீட்டாரு....

சித்திரவீதிக்காரன் said...

படம் எப்படி இருக்கும்ன்ணு வேலாயுதம் டிரெய்லர பார்த்தப்பவே முடிவு பண்ணிட்டேன். 'நான் சும்மாவே காட்டு காட்டுன்ணு காட்டுவேன், நீ வேற காட்டு காட்டு'ன்ணு விஜய் சொல்றப்ப உண்மையில சிரிப்ப அடக்க முடியல. பகிர்வுக்கு நன்றி.

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena