வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

7.12.10

கமல் ஒரு கலைவியாபாரி







மன்மதன் அம்பு திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் தொடர்பாக, அப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் கமல், நடிகை த்ரிஷா மற்றும் இசையமைப்பாளருக்கு இந்து மக்கள் கட்சி ஒருங்கிணைப்பாளர் கண்ணன், நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

எதற்க்காக நோட்டீஸ் அனுப்பினார்கள் ? இந்த பாடல் வரிகளுக்காகதான் 

கண்ணொடு கண்ணைக் கலந்தாளென்றால்... களங்கம் உள்ளவள் எச்சரிக்கை. உடனே கையுடன் கைகோர்த்தாளா... ஒழுங்கங் கெட்டவள் எச்சரிக்கை. ஆடை களைகையில் கூடுதல் பேசினால்... அனுபவம் மிக்கவள் எச்சரிக்கை. கலவி முடிந்த பின் கிடந்து பேசினால்... காதலாய் மாறலாம் எச்சரிக்கை. உன்னுடன் இருப்பது சுகமென்றாளா... உறுதியாய்ச் சிக்கல் எச்சரிக்கை

அறுவடை கொள்முதல் என்றே காமம் அமைவது பொதுவே நலமாகக் கொள் கூட்டல் ஒன்றே குறியென்றான பின் கழிப்பது காமம் மட்டும் எனக்கொள் உன்னை மங்கையர் என்னெனக் கொள்வர் யோசிக்காமல் வருவதை எதிர்கொள் முன்னும் பின்னும் ஆட்டும் சகடை ஆணும் பெண்ணும் அதுவேயெனக்கொள் காமமெனப்படும் பண்டைச் செயலில் காதல் கலவாது காத்துக்கொள்

கலவி செய்கையில் காதில் பேசி கனிவாய் மெலிதாய்க் கழுத்தைக் கவ்வும் வெள்ளை பளிச்சிடும் பற்கள் வேண்டும் குழந்தை வாயை முகர்ந்தது போலக் கடும் நாற்றமில்லாத வாயும் வேண்டும்"

காமக் கழிவுகள் கழுவும் வேளையில் கூட நின்று உதவிட வேண்டும்

இப்படிக் கணவன் வரவேண்டும் என ஒன்பது நாட்கள் நோம்பு இருந்தேன் வரந்தருவாள் என் வரலட்சுமியென கடும் நோம்பு முடிந்ததும் தேடிப்போனேன் பீச்சுக்கு
வரம்தரக் கேட்ட வரலட்சுமியுனக்கு வீட்டுக்காரர் அமைந்தது எப்படி? நீ கேட்ட வரங்கள் 

எதுவரை பலித்தது? உறங்கிக்கொண்டே இருக்கும் உந்தன் அரங்கநாதன் ஆள் எப்படி? பிரபந்தம் சொல்லும் அத்தனை சேட்டையும் வாஸ்தவமாக நடப்பது உண்டோ? அதுவும் இதுவும் உதுவும் செய்யும் இனிய கணவர் யார்க்குமுண்டோ?"

மூத்த அக்காள் கணவனுக்கு முக்கால் தகுதிகள் இருந்தும் கூட அக்காளில்லா வேளையில் அவன் சக்காளத்தி வேண்டும் என்றான்

  இது  முழுமையான பாட்டு கிடையாது என் நியாபகத்தில் உள்ள சிலவரிகள்

பொதுவாக அரசியல் வாதிகளும் நடிகர்களும் தங்களுடைய சுயலாபத்திற்கு  என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் .அதற்கு கமலும் விதிவிலக்கு அல்ல .
இந்த பாடல் கலைஞர் கருணாநிதி  அவர்களை வேண்டுமானால்  சந்தோசப்படுத்தலாம் ,

படத்திற்கு படம் கமல் படம் ஏன்  இந்த அளவிற்கு சர்ச்சைகுள்ளாகிறது .இது திட்டமிட்ட செய்லா இல்லை தற்செயலா?
என் படத்தை பார்ப்பதற்கு டிக்கெட் வாங்கிவிட்டு என் வாழ்க்கையை ஏன் விமர்சிக்கிறீர்கள் என்றவர் தானே நீங்கள் இப்போது எப்படி எங்கள் வீட்டு பூஜை அறையை எட்டி பார்க்கலாம் என்கிறார்கள் இந்து மக்கள் .அவர்கள் கேட்பது ஒரு பக்கம் நியாயம் என்றாலும் .

இந்த இந்து மக்கள் கட்சிகாரர்களுக்கு வேலைவெட்டி கிடையாதோ என்னவோ ? எப்போதும்  போல் ஒன்றுக்கும் உதவாத பிரச்னையை கையில் எடுத்துகொண்டு அந்த படத்திற்கு இலவசமாக விளம்பரம் தேடித்தருகிறார்கள் .நாட்டில் தீர்க்க படவேண்டிய பிரச்சனைகள் எவ்வளோ உள்ளது .அதற்க்கெலாம் போராடாமல் .படத்தில் ஒரு பாட்டு வந்துவிட்டதாம் .அதற்கு போய் என்னவோ

சின்ன பிள்ளைகளை போல் என் நாமத்தை  அழித்துவிட்டான் ,என் பட்டையை பறித்து விட்டான் என்று அங்கலாய்க்கிறார்கள்
அரங்கநாதர் எழுந்து வந்து அறைந்தால் கூட இவர்களுக்கு புத்தி வராது .

கடவுள் நம்பிக்கையும்   மூடநம்பிக்கையையும்  குழப்பி கொண்டிருக்கிருக்கும் ஒரு சந்தர்ப்பவாதிகள் 

என் பார்வையில் -  கமல் ஒரு கலைவியாபாரி   

13 கருத்துகள்:

Unknown said...

மிகவும் சூடான பதிவு.. நல்லா எழுதியிருக்கீங்க..

pichaikaaran said...

கமல் நல்ல நடிகர் அல்ல என நினைத்தேன் . நல்ல மனிதரும் அல்ல என உணர்த்திவிட்டார்

karthikkumar said...

பார்வையாளன் said...
கமல் நல்ல நடிகர் அல்ல என நினைத்தேன் . நல்ல மனிதரும் அல்ல என உணர்த்திவிட்டார்//
same

THOPPITHOPPI said...

சினிமாவில் இதெல்லாம் சகஜம். நமக்கு தெரிந்தது இவ்வளவுதான்

NaSo said...

எனக்கென்னவோ இது அரசியல்வாதி-சினிமாக்காரன் கூட்டு திட்டம் போல் தெரிகிறது. நீ என்னைத் திட்டு, நான் உன்னைத் திட்டுறேன், ரெண்டு பேரும் பேமஸ் ஆகிடலாம் என்று போட்ட திட்டம் போல் தெரிகிறது.

கத்துக்குட்டி said...

இந்த பாடலை பார்த்தால் கமல் ஒரு காமவியாபாரி போல் அல்லவா தெரிகிறது

Unknown said...

test

Unknown said...

கமல் என்னும் இந்த நாதாரி மார்கழி மாசத்து தெரு நாய் போல் அவ்வப்போது ஆளை மாற்றிகொடிருக்கிறானே. அவனுக்கும் கௌதமி என்பவளுக்கும் இப்போது உள்ளது என்ன மாதிரியான உறவு என்று சொல்வானா.

ஹரிஸ் Harish said...

சரி தான்..போட்டுதாக்குங்க...

அந்நியன் 2 said...

நடிகனை நடிகனாகத்தான் பார்க்கணும்,நம்ம தமிழ் ரசிகர்களுக்கு நடிகர் நடிகைதான் தெய்வம்.கோவிலும் கட்டுவார்கள்,கும்பா அபிசேகமுமும் செய்வார்கள்,பிறகு கோட்டையிலும் அமர்த்துவார்கள் !
கமல் பெண் விசயத்தில் ரொம்ப வீக். உங்களின் பதிலடி அருமை

Unknown said...

@kudakku

அவன் இவன்னு சொல்லாத ------------- உனக்கு லாம் கமல பத்தி பேச அருகதையே கிடையாது .

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன் நண்பரே!

http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_09.html

நன்றி!

ரஹீம் கஸ்ஸாலி said...

நல்லதொரு பதிவு. நம்ம பண்ணிகுட்டியார் அறிமுகப்படுத்துவது என்பது பெரிய விஷயம் தான். வாழ்த்துக்கள்

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena