வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

7.3.11

அடிச்சிட்டோம்ல அரைசதம்

                                .50 வது பதிவு .வாழ்க்கையை இன்னும் பரிசோதனை முயற்சியாகவே மேற்கொண்டு வருகிறேன் 

அழுத்தி வைக்க பட்ட 
மெளனங்களோடும் (உள்ளே )

அள்ளி தெளிக்க பட்ட 
மகிழ்ச்சியோடும் (வெளியே )

வளைய வருபவன்

ஏட்டு சுரக்காய் கரிக்கு உதவாது என்பது போல ,என் ஏட்டு படிப்பு எதற்கும் உதவவில்லை ,படித்த முடித்த கையேடு வேலைக்காக ,சென்னை ,பெங்களூர் ,கேரளா ,ஹைதரபாத் என்று ஏழு வருடத்தில் அதிக படியாக பயணங்களிலே வாழ்க்கை கழிந்திருக்கிறது ,பலவிதமான வேலைகள் பார்த்திருக்கிறேன் ,அப்படி பார்த்ததிலே மிகவும் கஷ்டமான வேலை செல்போன் டவரில் ஏறி வேலை செய்தது......... என்பதடி டவரின் உச்சியில் ஏறி டிஷ் ஆன்ட்டெனா, GSM மை பிட் செய்வது ,கேபிளை கீழிருந்து மேல் உச்சிக்கு இழுத்து பிறகு மேலிருந்து கீழாக ரூட் செய்து கொண்டு வந்து உஸ்ஸ் அப்பா ............. ட்டவ்சர் கிழிந்துவிடும்(உண்மைலே பல முறை கிழிந்திருக்கிறது )   நல்ல பணிதான்  ஆனால் சரிவர சம்பளம் குடுக்காத காரணத்தினால் தெறித்து ஓடி வந்துவிட்டேன் 

தமிழ் நாடு முழுவதும் சுற்றி இருக்கிறேன் ,இனிமேல்ஊர்  சுற்றியது போதும் என்று நம் மாண்புமிகு மின்சாரத்துறைஅமைச்சர்  ஆற்காட்டாரின்  மறைமுக உதவியோடு பிழைத்து வருகிறேன் ,அதாவுது , யு.பி.எஸ் ,இன்வெர்டர்ஸ் ,பாட்டரி என்று சுயமாக தொழில் செய்து வருகிறேன் ,வேறு சில தொழில்களும் செய்து வருகிறேன் ,வாழ்க்கை வண்டியை தள்ளி வருவது கடினமாக இருந்தாலும் பழகிவிட்டது

வாசிப்பு எனக்கு சிறுவயது முதலே பிடித்தாமானதாய் இருந்தது ,ஆனால் பள்ளி பாடம் புத்தகம் மட்டும் உஉவ்வே................. வெறும் காதல் கதைகள் ,க்ரைம் கதைகள் என்று மட்டும் தான் வாசிப்பை நிறுத்தி வைத்திருந்தேன் ,பிறகு அது சலித்து போய்விட்டது எளிதாக முடிவை யூகிக்கும் அளவிற்கு வாசிப்பானுவபம் வளர்ந்து விட்டது ,பிறகுதான் இலக்கிய தரமான கதைகளை நாடினேன் ,அப்படி படித்ததுதான் கா.நா.சுவின் பொய்த்தேவு ,சோமு என்கிற மனிதனின் வாழ்க்கை பின்னாலே சென்று பார்த்த அனுபவம் கிடைத்தது ,இலக்கிய சூழலில் வெகுவாக கவனிக்க பட்ட நாவல் ,பிறகு
ஜெயகாந்தனின் சிறுகதைகள்
சுஜாதாவின் கதைகள் ,அவர் இறந்த பின்புதான் அதிகமாக அவரை வாசிக்க ஆரம்பித்தேன் ,இப்படியாக முக்கிய தலைவர்களின் வரலாறுகள் படிப்பது ,ஆய்வு நூல்கள் படிப்பது என்று என் வாசிப்பின் திசையை மாற்றி கொண்டேன்

எனது கல்லூரிக்காலத்திலே ப்ளாக் என்று ஒன்று இருப்பதை அறிந்திருக்கிறேன் ,ஆனாலும் தீவிர கவனம் பெறவில்லை ,இரண்டு வருடத்திற்கு முன்பே இப்பொழுதைய பெருந்தலைகளின் பதிவுகளை படித்து வந்தேன் ,இவர்கள் எப்படி இவ்வளவு பிரபலம் ஆனார்கள் என வியந்தேன் ,போன வருடம் மே மாதத்தில் முன்பு வேலை பார்த்த கம்பெனியில்  அக்கௌன்ட் செக்சனில் வேலை பார்த்த பெண் தமிழ்மணத்தை ஓபன் செய்து பார்த்து கொண்டிருந்தார் ,அதை பார்க்க நேர்ந்தது ,இதன் மூலமாக எல்லோரும் பிரபலாக இருக்கிறார்கள் என்று தெரிந்தது

ஆஹா மணி ஓபன் பண்றா  ப்ளாக்க  நாமளும் நாலு பேருக்கு இம்சைய குடுப்போம் ,இப்படியாக எனது வலைப்பதிவு  வரலாறு தொடர்கிறது ,தொடருமா என்றால் சந்தேகமே ?

நேற்று பகலில் வீட்டிற்கு உணவருந்த சென்ற பொழுது வீட்டில் இரு பெரியவர்களை உபசரித்து கொண்டிருந்தார்கள் எங்கள் வீட்டு பெரியவர்கள் ,நான் அவர்களை இதுவரை பார்த்ததில்லை ,என் அப்பத்தா வெகு இயல்பாக உரையாடி கொண்டிருந்தார் .நான் அவர்களிடம் "வாங்க " என்று கூறிவிட்டு உள்ளே சென்று விட்டேன் ,மீண்டும் வெளியில் வந்த பொழுது அவர்கள் கிளம்பி கொண்டிருந்தார்கள் ,அப்பாட போயிட்டாய்ங்க என்று டிவி பார்க்க ஆரம்பித்தேன்

உணவருந்தும் பொழுது அம்மாவிடும்
"வந்தைவிங்க யாரு "
"உன்னைய மாப்பிளை கேட்டு வந்தாங்கடா "
"என்னயாவா"
மீண்டும் "என்னைவா "(ப்பாரா நம்மலகூட மாப்பிள கேட்டு வர்றாய்ங்கலே)
"நீங்க என்ன சொன்னீங்க "
"இப்போதைக்கு பொண்ணு பார்க்கிறமாதிரி இல்லைன்னு உங்க அப்பா சொல்லீட்டாருடா "
அப்பாடி த்தப்பிச்சேண்டா சாமி ,எல்லாம் எங்கப்பத்தா பண்ணுகிற வேலை எனக்கு சீக்கிரம் திருமணம் செய்து விட வேண்டும் ,முயற்ச்சிக்கிறார்

திருமணம் என்பது ஒரு சரியான கமிட்மென்ட் ,திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை வேறு ஒரு திசையில் செல்லும் ,ஆனால் என் பள்ளி நண்பர்கள் ,கல்லூரி நண்பர்கள் நிறைய பேருக்கு திருமணம் ஆகி குழந்தை கூட இருக்கிறது ,அதற்காக இவனுக்கு வயாதகிவிட்டது என்று நினைத்து விடாதீர்கள் , எனக்கு இப்பொழுதான் 26 வயதே நடக்கிறது ,இந்த மே 6 வந்தால்தான் எனக்கே 27 வயதே தொடங்கும் ,இன்னும் ஒன்றை வருடமாவது செல்லும் திருமணம் செய்து கொள்ள 

ஓவர் மொக்கையா இருக்கா............ வேண்டுமென்றால் எனது பள்ளிகாலத்தில்  இறுதியில் நடந்த இரு சம்பவங்கள் கூறுகிறேன் சிரித்து விட்டு போங்க 

  1. அன்று பதினொன்றாம்வகுப்பு என்று நினைக்கிறேன் ,வகுப்பு தொடங்கியது ,முதல் பீரியட் ஆங்கிலம் ,ஆங்கில ஆசிரியர் வந்தார் ,மிகவும் நல்ல ஆசிரியர் படம் நடத்துவதற்கு பதிலாக அதிகமாக கதை சொல்லுவார் ,ரோமியோ ஜூலிஎட்,ஹாம்லெட் , ஈடிபஸ் காம்ப்ளெக்ஸ் குறித்த உலகின் முதல் கிரேக்க நாடக கதை (ஈடிபஸ் காம்ப்ளெக்ஸ் கிட்ட தட்ட அதன் பின்னணியில் பாலுமகேந்திரா படம் எடுப்பதற்காக ஜெயமோகனால் எழுதப்பட்ட "அனல்காற்று ",  நாவல் சமீபத்தில் தான் படித்தேன் ,காமத்தின் மன அதிர்வளைகளுடன் போராடும் ஒருவனின் அவனது பார்வையில் கூறப்படுவதாக இருக்கும் )ஆனால் அன்று என்ன நினைத்தாரோ பாடம் எடுக்க போகிறேன் என்று கூறினார் ,ஆங்கில துனைபாட பாட நூலை வாங்கினார் ,அந்த புத்தகம் முழுவதும் கதைகளாகத்தான் இருக்கும் வில்லியம் ஷேக்ச்பியரின் " Twelth night"
எடுக்க போவதாக அறிவித்து "twelth night" போர்டில் எழுதினார் ,அப்பொழுது கீழே ஆபீசில் இருந்து அழைப்பு வரவே ,அப்படியே நிறுத்தி விட்டு சென்று விட்டார் 
முதல் இரண்டு பெஞ்ச்களில் பெண்கள் அமர்ந்திருப்பர் ,நான் அதற்க்கு பின்னால் அமர்ந்திருப்பேன் ,எழுந்தேன் ,போர்டு அருகே சென்றேன் ,"twelth" அழித்து "first" என்று மாற்றினேன் ,வகுப்பறையே சிரிப்பலையில் ஆழ்ந்தது ,அந்நேரம் பார்த்து மீண்டும் ஆபிசில் இருந்து ஒருவர் வந்தார் ,டெர்ம் பீஸ் கட்டாதவர்களை correspondent அழைப்பதாக கூறினார் ,சில மாணவர்களில் கூட்டமாக சென்றோம் ,அந்த பள்ளியில் குறித்த தேதியில்  பீஸ் கட்டவில்லைஎன்றால் வீட்டிற்கு அனுப்பி விடுவர் ,வீட்டிற்கு சென்று  பணத்தை வாங்கி வரவேண்டும் என்று கூறுவார் ,இதற்காகவே நான் வேண்டுமென்றே காலம் தாழ்த்தியே பீஸ் கட்டுவேன் ,அப்பொழுதானே நன்றாக ஊர் சுற்றலாம் ஹி ஹி ஹி ,ஆனால் நான் சென்றவுடன்  பிரின்சிபால் ரௌண்ட்ஸ் வந்திருக்கிறார் ,எல்லா வகுப்பறையும் அமைதியாக இருக்க இந்த வகுப்பறையில் சத்தம் வருகிறதே என்று எட்டி பார்த்திருக்கிறார். கட் .........அடுத்தநாள் நான் வழக்கம்போல்  பள்ளி சென்றேன் ,வகுப்பறைக்கு சென்றதுதான் தாமதம் ,உன்னை கீழே அழைக்கிறார்கள் என்று செய்தி வந்தது , கீழே சென்றேன் ,பிரின்சிபால் ரூமிற்கு அழைத்து சென்றார்கள் ....correspondent டின் மூத்த மகன்தான் ப்ரின்சிப்பால் ,இளைய மகன் ,அந்த பள்ளியில் தவறு செய்யும் மாணவர்களை அடிப்பதற்காகவே அவர்களின் சொந்தக்காரர் ஒருவர் வந்து போவார் (லிட்டில் லிட்டில் பண்ணியாரம் ,குட்டி குட்டி இடியாப்பம்  என்று குனியவைத்து முதுகிலே தன்னுடைய கர்லாக்கட்டை கைகளினால் அடிப்பார் பாருங்கள் ,மூச்சே நின்றுவிடும் )இவர்கள் நால்வரும் கையில் பிரம்புடன் நின்று கொண்டிருந்தார்கள் ,உள்ளே சென்றதுதான் தாமதம் ,உங்க வீட்டு அடியா ,எங்க வீட்டு அடியா ,மூச்சு தெனற தெனற அடித்துவிட்டு ............கிரௌண்டில் மணலில் முட்டிங்கால் போடவிட்டாகள் .பெண்கள் எல்லோரும் பார்த்து வாய்க்குள்ளே சிரித்து சென்றது இன்னும் வலிக்கிறது 

2. எங்கள் வீட்டில் ஒரு ஆறு தெரு தள்ளி நடந்த சம்பவம் அந்த சிறய தெருவை அடைத்த  மாதிரி சைக்கிளை நிறுத்தி நானும் என் நண்பனும் அமர்ந்து பேசிகொண்டிருந்தோம் ,நண்பனின் 'ஆள் ' சற்று நேரத்தில் இந்த பாதை வழியாக வருவார் ,வந்து சென்றவுடன் போகலாம் என்று கூறினான் ,இயல்பிலே எனக்கு உதவி மனப்பான்மை அதிகம் (உண்மை காரணம் :நண்பனின் 'ஆள் ' லின் தோழி )திடீரென்று அந்த இடத்தில் இருவர் பிரசனமானார்கள் .இருவரும் கைகளில் லத்தி போல் உருண்டையாக ,நீளமாக ,குச்சி வைத்திருந்தார்கள் ,வந்தசோறில் , என் நண்பனின் தோள்பட்டையில் ஒரு அடி வைத்திருந்தார்கள் ,"ஏண்டா சந்த அடைச்சு போட்ட மாதிரி சைக்கிள நிறுத்தி டாப் அடிக்கிறீங்களா ம்ம்ம் " இன்னொருவர்" சைக்கிள எடுங்கடா " ஆஹா போலிசு மப்ப்ட்டீள வந்திருக்காய்ங்க மீண்டும் என் நண்பனின் முதுகில் அடிவைத்து ,பிறகு என்னை கவனிக்க வந்தனர் ,நான் என் நண்பனை பார்த்தேன் அவன் அதற்குள் சைக்கிளை எடுத்து காத தூரம் சென்று விட்டான் (ஐயையோ சிங்கம் தனியா சிக்கிடிச்சே அசிங்கமா போய்டுமே என்று அந்த தெருவாசிகள் நினைத்திருப்பார்கள் )அந்த இருவரும் மாற்றி மாற்றி முட்டிங்காலிலே அடிக்கிறார்கள் ,நான் சற்று முன்நகர்ந்தால் முதுகில் அடிக்க ஏதுவாகி  விடும் என்ற  காரணத்தினால் அந்த இடத்திலே பரதநாட்டியம் ,கதக்களி ,குச்சுபுடி என கலவையாக நடனமாடி கொண்டிருக்கிறேன் அந்த இடத்தில ,தெரு முழுக்க கூட்டம் கூட்டமாக வேடிக்கை பார்த்தனர் ,அதில் நண்பனின் 'ஆள் ' 'ஆளின் ' தோழி , 
அப்படியே அடியை வாங்கி கொண்டு சற்று நகர்ந்து நகர்ந்து ,சைக்கிளில் ஏறி விரட்டி சென்றேன் ,சிறிது தூரத்தில் என் நண்பா இஈஈஈ இளித்தவாறு நின்று கொண்டிருந்தான் 'டேய் உன் கூட வரப்பெல்லாம் யாருக்கிட்டையாவுது அடிவாங்கி குடிக்கிரியடா ,அப்பிடி நா என்னடா துரோகம் செஞ்சேன் " இன்னைக்கு மிஸ்சா ஆய்டுச்சு நாளைக்கு வருவோம் ," என்றான் ,என்னது நாளைக்கு வேறையா "அடப்பாவி முட்டிங்காலுக்கு கீழ விண்ணு விண்ணுனு தெரிக்குதுடா ,இதுல நாளைக்கு வேறையா......... டே அப்படியே ஓடி போய்டு கல் எடுத்து மண்டைய ஒடேச்சே புடுவேன்  " 
பிறகென்ன........... வலியோடு சைக்கிளை ஒட்டி சென்றேன் .ம்ம்ம் இப்பொழுது அந்த தெருப்பக்கம் செல்வதில்லை 

தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில மான்போல வந்தவன யார் அடிச்சாரோ யார் அடிச்சாரோ யார் அடிச்சாரோ யார் அடிச்சாரோ ...............................................................ரோ

                                               

29 கருத்துகள்:

சக்தி கல்வி மையம் said...

தாங்கள் மேலும் மேலும் பல நல்ல படைப்புகளை வெளியிட்டு புகழின் உச்சிக்கே செல்ல என் அன்பான வாழ்த்துக்கள் ....

Unknown said...

அரை சதத்துக்கு வாழுத்துக்கள் நண்பா

சிரிக்க வச்சதுக்கும்....அப்படியே அடிச்சி ஆடுங்க

மாணவன் said...

உங்கள் ஸ்டைலில் பதிவு சூப்பர்...

50 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பரே :)

மைதீன் said...

50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

ஆனந்தி.. said...

congrats my dear brother...:))

எஸ்.கே said...

ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்! தொடர்ந்து சிறப்பாக செயல்படுங்கள்!

அஞ்சா சிங்கம் said...

அடிச்சி நகத்து மாப்ளே .................................

பாலா said...

ஆற்காட்டாருக்கு விஷ்யம் தெரியுமா? தெரிந்தால் மின்வெட்டால் பலருக்கு வேலைவாய்ப்பு அளித்து சாதனை புரிந்திருக்கிறது இந்த அரசு என்று பேட்டி கூடுத்து விடுவார்கள்.

நிறைய எழுதுங்க. நல்லா எழுதுங்க. வாழ்த்துக்கள்.

Chitra said...

ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்! நல்ல கலகலப்பான பதிவுங்க.

MANO நாஞ்சில் மனோ said...

வாழ்த்துகள் மக்கா...

pichaikaaran said...

ஐம்பது அம்சமாக இருந்தது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதெல்லாம் எத்தன வருசம் முன்னாடி நடந்ததுண்ணே......?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கலக்குங்க தலைவரே.....!

Riyas said...

50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்..

தமிழ்வாசி பிரகாஷ் said...

வாழ்த்துக்கள் ஐம்பதாவது பதிவுக்கு... இன்னும் நிறைய எழுத வாழ்த்துகிறேன்....

எனது வலைபூவில் இன்று:
இந்தியா - அயர்லாந்து சுட சுட ஹைலைட்ஸ் - வீடியோ

Unknown said...

வருகைபுரிந்து கருத்துரைத்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்

arasan said...

தல கெளப்புங்க கெளப்புங்க ...
இன்னும் நிறைய சாதனைகளை படைக்க வாழ்த்துக்கள்

arasan said...

பதிவு செம கலக்கல்

Anonymous said...

அரை சதம் அடித்ததற்கு வாழ்த்துகள் மணி! வாழ்க பல்லாண்டு.

சி.பி.செந்தில்குமார் said...

>>>.50 வது பதிவு .வாழ்க்கையை இன்னும் பரிசோதனை முயற்சியாகவே மேற்கொண்டு வருகிறேன்

வாழ்த்துக்கள்.. சோ நோ கும்மி

குறையொன்றுமில்லை. said...

50-வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

Pranavam Ravikumar said...

50 வது பதிவுக்கு நல்வாழ்த்துக்கள்!

போளூர் தயாநிதி said...

தாங்கள் மேலும் மேலும் பல நல்ல படைப்புகளை வெளியிட்டு புகழின் உச்சிக்கே செல்ல என் அன்பான வாழ்த்துக்கள் ....

cheena (சீனா) said...

அன்பின் மணிவண்ணன்

ஐய்ம்பதுக்கு நல்வாழ்த்துகள்

மலரும் நினவுகளாக பள்ளி வாழ்க்கை - மறக்க இயலுமா ?

26 / 27 மணம் புரிய ஏற்ற வயது - அப்பத்தா சொல்வதைக் கேள் மணிவண்ணா

வாழ்க்கையில் - துவக்கத்தில் துயரப்பட்டவர்கள் பின்னாளில் வளமுடன் வாழ்ந்திருக்கிறார்கள். தற்போதைய சொந்தத் தொழில் செழித்தோங்க நல்வாழ்த்துகள்.

நட்புடன் சீனா

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இன்றுதான் உங்கள் ப்ளாக் கு முதல் தடவையாக வருகிறேன்! ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்! இனி அடிக்கடி வருவேன்! நீங்களும் நம்ம ஏரியாவுக்கு வரலாம்!




எவரும் நம்ம எதிரிகள் அல்ல அறிமுகமில்லா நண்பர்களே '


இது சூப்பர்!


இன்ட்லியிலும் தொடர்கிறேன்!

Unknown said...

50வது பதிவுக்கு வாழ்த்துக்கள் மணிவண்ணன்..

pichaikaaran said...

உங்களுக்கு ஒரு வேண்டுகோள்

சில பதிவர்களிடம் நான் எதிர்பார்க்கும் இடுகைகள்- நேயர் விருப்பம் – பாகம் 1

ப.கந்தசாமி said...

நல்லா இருக்குங்க.

அடி வாங்கினத சொல்றதுக்கு, அடி வாங்கறத விட அதிக "தில்" வேணுமுங்க.

அன்புடன் மலிக்கா said...

50 ஆவது பதிவுக்கு அன்பான வாழ்த்துக்கள்...

http://niroodai.blogspot.com நீரோடையில் பெண் எழுத்துக்கள் பற்றி எழுதியுள்ளேன் படித்துவிட்டு கருத்துக்கள் பகிருங்கள்

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena