வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

24.9.11

சோப்பு ,சீப்பு ,கண்ணாடி -9

இனிய நட்புகளுக்கு வணக்கம்

                           ஐயம் பேக் ,சில தொழில் நுட்ப காரணங்களால் இந்த தளத்தில் எதுவும் பதியாமல் இருந்தேன் , அதை சரி செய்து விட்டேன் ,அதனால் இந்த தளத்திலே இனி எழுதுவேன் என உறுதிகூறுகிறேன்,(நீ எழுதுனா என்ன எழுதாட்டினா எங்களுக்கு என்ன சொல்றீங்களா? சரி விடுங்க ஏதோ தெரியாம எழுத தொடங்கிட்டேன் .நிறுத்த முடியல )பொதுவாகவே செய்த தவறுகள் அப்போதைய நியாயங்களாகவே இருந்து விடுவதால் நாம் தவறுகள் செய்துகொண்டே இருக்கிறோம் .என்னது இது என்று கேட்பவர்களுக்கு கண்ணாடியில் பதில் உண்டு
Read More

1.4.11

சோப்பு ,சீப்பு ,கண்ணாடி -5

இனிய நட்புகளுக்கு வணக்கம்

                                    இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடி எட்டியுள்ளது ,ஆனால் மக்கள் தொகையின் வளர்ச்சி விகிதம் (17 சதவிகிதம் )குறைந்துள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது 

                                         அடுத்து அம்மாவா ,அய்யாவா (மன்னிக்கவும் ) தாத்தாவா என்று  தீர்மானிக்கும் அதிகாரம் நம்மிடம் இருக்கிறது .முதலில் எங்கள் தொகுதியில் தலைக்கு ஐய்யாயிரம் குடுப்பார்கள் என்றார்கள் ,அதன் பிறகு இரண்டாயிரம் என்றார்கள் .இப்பொழுது வெறும் ஆயிரம் ரூபாய் என்கிறார்கள் ,ஒரே குழப்பமாக இருக்கிறது .அவ்வபோது இரவு பத்து மணிக்கு மேல் பவர் கட் செய்யப்படுகிறது ,அந்த நேரத்தில் அரசியல் அதிகாரிகள் மூலமாக பணம் ஈயப்படும் என்றார்கள் .இன்று வரை வந்த பாடு இல்லை .சிலர்  நம் தொகுதியில் காங்கிரஸ் நிற்பதால் பணம் எதிர்பார்க்க முடியாது என்கின்றனர் ,பணம் வாங்கி கொண்டு ஓட்டு போட்டு பழகி விட்டது ,என்ன செய்வது என்று தெரிய வில்லை

சோப்பு :

ரிஷிவந்தியம்:""தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்னைகளுக்காக பாளையங்கோட்டையை தவிர, அனைத்து சிறைகளுக்கும் சென்றுள்ளேன்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்

நானும் அரசியல் ரௌடிதான் ,ஜெயிலுக்கு போயிருக்கேன் ஜெயிலுக்கு போயிருக்கேன் 
        
ஐயா தமிழ்குடிதாங்கி சும்மா மைக் கெடச்சிடுச்சுனுட்ரதுக்காகலாம் எதையாவது பேசக்கூடாது ,வேற ஏதாவுது பிட்ட போடுங்க 

               தமிழகம் பல மாநிலங்களுக்கு முன்னோடி : கனிமொழி எம்.பி.

                  
அப்படிங்களா இருக்கும் இருக்கும்(ஆமாங்க இந்த ராசா .........சரி எதுக்கு வம்பு  )

சீப்பு :
உங்களலாம் பார்த்தா பாவமா இருக்கு 

   ங்கொய்யால வாங்குன காசுக்கு மேல கூவுராண்டா

                           இந்தாளுக்கு இப்ப பாத சனி நடக்குது. ஒரு வழி பண்ணாம விடாது. தப்பு தப்பாதான் பேச சொல்லும். நடக்க சொல்லும்.


                             

கண்ணாடி :
          

பொதுநலன் :

                        அவசரமாக பணம் எடுப்பதற்கு யூனியன் பேங்க் ஆப் இந்தியா ஏ.டி.எம்  சென்றேன் ,கார்டை உள்ளே செலுத்தி காத்திருந்த நேரத்தில் பின்னாலே திரும்பி  பார்த்தேன் ,வெளியில் ஒரு காலேஜ் போகிற  வயதில் பெண் நின்று கொண்டிருந்தாள் .பணம் வருவதற்குள் கொஞ்சம் ஸ்டைல் காட்டுவோமே என்று தலை முடியை கோதினேன் அப்படி இப்படி என்று சீன் போட்டு திரும்பி பார்க்கிறேன் அந்த பெண் இல்லை ,சரி பணத்தை எடுப்போம்  ,அப்படியே கீழே பார்த்தேன் பணம் வெளியில் வந்திருந்தது ,பணத்தை எடுக்க கையை கொண்டு சென்று தொடத்தான் செய்திருப்பேன் .பணம் பழைய படி உள்ளே சென்று விட்டது ,மீண்டும் கார்டை உள்ளே செலுத்தி அக்கௌன்ட் கணக்கை பார்த்தால் ,பணம் பத்தாயிர ரூபாய் குறைந்ததாக காட்டுகிறது ,பிறகு வங்கி அதிகாரியிடம் முறையிட்டேன் ,அவர் என்னமோ நான் லோஓஓஓஓ ன் கேட்டு வந்ததுபோல் முறைத்தார் .பணத்தை திரும்ப பெறுவதற்கான  வழிமுறைகளை கூறினார் .பணம் திரும்ப பெறுவதற்கு பத்து நாள் ஆகும் என்றார் 

பத்து செகண்ட்ல பத்தாயிர ரூவா பணம் போச்சே 

நீதி :ஏ.டி.எம் லிருந்து பணம் வந்த 30 செகண்டிற்க்குள் எடுத்து விட வேண்டும் ,இல்லை என்றால் பணம் பழைய படி உள்ளே சென்று விடும்

-------------------------------------------------------------------------------------------------------------

சிவகாசியில் நண்பர் ஒருவர்  ஹோம் அப்லையன்ஸ் பிசினஸ் செய்து வருகிறார் ,வீடு வீடாக சென்றும் விற்ப்பார் , "உங்ககிட்ட வாங்குனா காசு அவுங்ககிட்ட வாங்குனா ஓசி " என்று விரட்டுகிறார்களாம் அந்த மக்கள்

இப்படி ரெண்டு பேரும் பொழப்புல லாரிலாரியா மண்ணள்ளி கொட்டிட்டாங்களே என்று புலம்புகிறார்

மக்களோட குடிய கெடுக்கிறதே  இவுங்களுக்கு வேலைய போச்சு

-------------------------------------------------------------------------------------------------------------


பூனம் பாண்டே


ஒரு வரலாற்று செய்தி :


                         இந்தியா  உலககிண்ண போட்டியில் கிண்ணத்தை வென்றால் மேலே இருப்பவர் 'ஷேம் ஷேம் பப்பி ஷேமாக ' ஓடத்தாயராம் 




ஜெயிப்பாய்ங்களா?
                                                  
                      
                                                                                         
Read More

25.3.11

பிசினஸ் மேன்

                                    சென்ற புதன் கிழமை காலையில் சாப்பிட்ட பதினைந்து தோசை நெஞ்சை கரித்துகொண்டே இருந்ததால் மதியம் ஆட்டு ரத்தம் ,ஈரல் ,புதைத்து வைக்கப்பட்ட இரு கோழி கால்களின் பிரியானி ,சிக்கன் 65  , இரண்டு தட்டு சோறு , ஒரு அவித்த முட்டை ,சில பொறித்த முட்டைகளும் என அளவாக உணவருந்திவிட்டு ,தீக்குச்சியின் உதவியுடன் பல்லிடுக்களை குத்தி கொண்டிருந்தபொழுது எனது செல்போன் நண்பன் அழைப்பதாக காட்டியது 

" என்னடா ரஞ்சித் "
" டே  எங்கிருக்க "
"வீட்ல "
"டே உடனே கிளம்பி ரயில்வே ஸ்டேஷனுக்கு போ "
"எதுக்கு "
"ஒருத்தர ரிசீவ் பண்ணனும் "
"போடா பொங்கலு வேலை இருக்குடா "
"டே வர்றவன் ஒரு பிசினஸ் மேன்ரா ,திருவனந்தபுரத்தில இருந்து  வர்றான் ,  அவன் மதுரைக்கு  புதுசுடா ,அவன கூட்டிட்டு வந்து நல்ல லாட்ஜா பார்த்து தங்க வை , சாயங்காலம் வந்து நா பாத்துக்கிறேன் "
"எதுக்கு இங்க வந்திருக்கான் "
"அந்த பிசினச கத்து குடுக்கத்தான் வந்திருக்கான் ,நீயும் வா கத்துக்குலாம் ,அவன் எட்டு நாடுல பிசினஸ் பண்றாண்டா "
" அப்படியா "
மைன்ட் கால்க்குலேசன் 'ஆகா இந்த பிசினச எப்படியாவுது கத்துகிட்டு ,வெளிநாட்டுல பிசினெஸ் பண்ணி ,பில் கேட்ஸ் பின்னுக்கு தள்ளீடனும்'
"ஓகே டா ,அவன் பேரு என்ன "
"அச்சுகோபன் "
                                                                       =================
" மிஸ்டர் அச்சுகோபன் "
" வெல் ,நீங்கள் ரஞ்சித் சார் பிரெண்டோ "
"ஆமாம் ,மணிவண்ணன் "
" ஹாங் ,மணிவண்ணன் ,ஹி செட் ,ஹி செட் . போலாமா ,எனக்கு தமிழ் கொறச்சு கொறச்சு வரும் "
" ஹி ஹி ,இங்கயும்  நெறைய பேருக்கு தமிழ் கொறச்சு கொறைச்சு தான் வரும் "நீங்கள் என்ன பிசினஸ் பண்றீங்க "
"ஞான பண்ணும் பிசினஸ் ஒரு வல்லிய பிசிநெசானு,ஈ பிஸ்னெஸ் செய்வதற்கு வயது முக்கியமில்லா ,ஆண் ,பெண் ,முக்கியமில்லா ,ஈ பிசினெஸ் செய்வதை பற்றி இந்தியாவின் நம்பர் ஒன யுனிவெர்சிட்டி யில் பாடாமே உண்டெங்கில் நீங்கள் நம்புவீர்களா "
" ஈ பிசினெஸ் செய்த பிறகு ஞான்  ஒரு காரே வாங்கியது , டாட்டா இண்டிகா , இன்னும் சொந்தாமாக வீடு ஒன்று   வாங்கும் "
"எனக்கு என்ன வயசாயிட்டு என்று நீங்கள் அறியுமோ "
"தெரியலையே "
"21 " 
ஆஆஆஆஆ வென வாயை பிளந்தவன் தான் ,
மைன்ட் கால்குலேசன் 'மணி இவன விட்டுதாத ,பில்கேட்ச பின்னுக்கு தள்ளனும் '
அவரை ஒரு நல்ல ஹோட்டலாக பார்த்து தங்க வைத்து விட்டு ,மீண்டும் மாலை வந்து சந்திக்கிறேன் என்று கூறிவிட்டு வந்தேன் ,ஆனால் என்னாலும் என் நண்பானாலும் அன்று மாலை செல்ல முடியவில்லை ,

வியாழக்கிழமை :
"சாரி ,நேற்று என்னால் வர முடியவில்லை "
"இட்ஸ் ஓகே ,ரஞ்சித் சாரு ,இப்ப வரமுடியாது ,ஜோலி உண்டுன்னு போன் செய்து    "
"அப்படியா "
"இங்க பக்கத்துல  மீனாக்ஷி அம்மன் டெம்பில் இருக்கு ,கூட வருமோ "
வேலை இருந்தாலும் வருகிறேன் என்று தலையாட்டினேன்,போகிற வழியில்  கிளி ஜோசியம் பார்த்தார் ,,கிளி வந்து ஒரு கார்டை எடுத்தது ,படத்தை பார்த்துவிட்டு பலன் கூறினார் கிளிஜோசியாக்காரர்
"தம்பிக்கு கைக்கெட்டுனது வாய்க்கெட்டாது "
"i don't understand" என்று என்னை பார்த்தார்
"thatmeans, hand taking but mouth not catching" என்று கிளி ஜோசியர் கூற கூற ஆங்கில மொழி பெயர்ப்பு வேலை செய்தேன் ,கடைசியாக
ஒரு எலுமிச்சம்பழம் வேண்டும் என்று கூறினார் கிளி ஜோசியக்காரர் ,சரிஎன்று  வாங்கி வர சென்றேன் ,அதை தலையை மூன்று முறை சுற்றி எச்சி துப்பி தூக்கி எரிய சொன்னார் ,150 /- பீஸ் வாங்கினார் ,தம்பி நீங்க ஜோசியம் பார்க்கலையா என்றார் என்னிடம் ,ஹி ஹி ,நானும் மதுரக்காறேன்தானே
கோயிலில் கூட்டமாக இருந்தது ,கோயில் அருமை பெருமைகளை விளக்கினேன் ,ஆச்சிரியமாக எல்லாவற்றையும்  கேட்டார் ,ஸ்பெஷல் தரிசன டிக்கெட் 200/- குடுத்து வாங்கினேன் ,ஒரு கால்மணிநேரம் கண்ணை மூடியவாறு வேண்டினார் ,சரி என்று நானும்  " அம்மா ,தாயே ,ஸ்பெஷல் தரிசன டிக்கெட் வாங்கிருக்கேன் ,ஸ்பெஷலா நல்லது பண்ணனும் ஆமா சொல்லிபுட்டேன் " வேண்டினேன்
அவரை ஹோட்டலில் டிராப் செய்துவிட்டு மீண்டும் நண்பனோடு மாலைவந்து சந்திப்பதாக கூறி  விடைபெற்றேன்
                                                    =======================

மாலை வந்தது ,நண்பனுடன் சந்திக்க சென்றேன் ,சில வழக்கமான விசாரிப்புகள் ,பேச்சுகளை முடித்து பிறகு ,பிசினெஸ் பற்றி விளக்குவதாக கூறி லேப்டாப்பை எடுத்தார் ,இந்த  பிசினஸ் எப்படி செய்வது ,அதன் கூறுகள் என்று விளக்கினார் ,முடித்தார்
நண்பனை பார்த்தேன் ,அவன் கொட்டாவி விட்டான் ,எனக்கு தூக்கம் வருவது போல் இருந்தது ,

இத பத்தி சொல்றதுக்குதான் அங்கிருந்து வந்தியா , e-commerce ' பில்ட் அப் குடுத்தியடா ,

கடைசில பாத்தா ஆளு செத்து விடுற வேலையா , இந்த  ஆளு புடிக்கிற வேலைக்குதான் இங்க ஆயரம் பேரு சுத்துரான்களே

இப்பகூட மூணு பேரு என்னைய தொறத்தோ தொரத்துன்னு தொரத்துறாய்ங்களே

இந்த எம்.எல் ,எம் பிசினஸ் பண்றவுவிங்க தொலை தாங்க முடியலைங்க ,இந்த பிசினெஸ் செய்யும் நண்பர்கள் கண்டாலே அலறியடித்து ஓடி ஒளியிறேன்,
மீட்டிங் என்று அழைத்து செல்வார்கள் , இந்த பிசினெஸின் சிறப்புகளை எவராவுது  விளக்கோ விளக்கென்று விளக்குவார்கள் ,அதன் பிறகு இதில் சாதனை புரிந்தவர்கள் வரிசையாக வருவார்கள் ,இந்த பிசினெஸ் அவர்கள் ஏன் செய்கிறோம் காரணம் கூறுவார்கள்

கஞ்சிக்கு வழியிலாம கிடேந்தேங்க,குடும்பத்தோட மருந்த குடிக்கலாம்னு இருந்தேங்க ,மருந்து மூடிய தெறக்க போறேன் ,ஒரு நண்பர் வந்து தட்டிவிட்டாருங்க ,அடப்பாவி ஏன்டா மருந்த குடிக்க போற ,உனக்கு நா நல்ல வழிய காட்டுறேண்டானு இந்த பிசிநெசுல சேத்துவிட்டாருங்க ,இன்னிக்கி நா நெலையில இருக்கேங்க ,பொண்டாட்டி பிள்ளையோட சந்தோசமா இருக்கேங்க

உடனேகூடி இருக்குறவுங்க  கையி தட்டுவாங்க பாருங்க பில்டிங்கே இடிஞ்சு விழுந்துடும்

அன்று இரவு 11 மணி ,போன்அடித்தது எடுத்தால்
"ஹலோ "
" மணி , அச்சு கோபன் ஸ்பீகிங் "
"என்ன மணி டீம் பார்ம் பண்ணிடலாம "
போடா பொங்கி





Read More

7.3.11

அடிச்சிட்டோம்ல அரைசதம்

                                .50 வது பதிவு .வாழ்க்கையை இன்னும் பரிசோதனை முயற்சியாகவே மேற்கொண்டு வருகிறேன் 

அழுத்தி வைக்க பட்ட 
மெளனங்களோடும் (உள்ளே )

அள்ளி தெளிக்க பட்ட 
மகிழ்ச்சியோடும் (வெளியே )

வளைய வருபவன்

ஏட்டு சுரக்காய் கரிக்கு உதவாது என்பது போல ,என் ஏட்டு படிப்பு எதற்கும் உதவவில்லை ,படித்த முடித்த கையேடு வேலைக்காக ,சென்னை ,பெங்களூர் ,கேரளா ,ஹைதரபாத் என்று ஏழு வருடத்தில் அதிக படியாக பயணங்களிலே வாழ்க்கை கழிந்திருக்கிறது ,பலவிதமான வேலைகள் பார்த்திருக்கிறேன் ,அப்படி பார்த்ததிலே மிகவும் கஷ்டமான வேலை செல்போன் டவரில் ஏறி வேலை செய்தது......... என்பதடி டவரின் உச்சியில் ஏறி டிஷ் ஆன்ட்டெனா, GSM மை பிட் செய்வது ,கேபிளை கீழிருந்து மேல் உச்சிக்கு இழுத்து பிறகு மேலிருந்து கீழாக ரூட் செய்து கொண்டு வந்து உஸ்ஸ் அப்பா ............. ட்டவ்சர் கிழிந்துவிடும்(உண்மைலே பல முறை கிழிந்திருக்கிறது )   நல்ல பணிதான்  ஆனால் சரிவர சம்பளம் குடுக்காத காரணத்தினால் தெறித்து ஓடி வந்துவிட்டேன் 

தமிழ் நாடு முழுவதும் சுற்றி இருக்கிறேன் ,இனிமேல்ஊர்  சுற்றியது போதும் என்று நம் மாண்புமிகு மின்சாரத்துறைஅமைச்சர்  ஆற்காட்டாரின்  மறைமுக உதவியோடு பிழைத்து வருகிறேன் ,அதாவுது , யு.பி.எஸ் ,இன்வெர்டர்ஸ் ,பாட்டரி என்று சுயமாக தொழில் செய்து வருகிறேன் ,வேறு சில தொழில்களும் செய்து வருகிறேன் ,வாழ்க்கை வண்டியை தள்ளி வருவது கடினமாக இருந்தாலும் பழகிவிட்டது

வாசிப்பு எனக்கு சிறுவயது முதலே பிடித்தாமானதாய் இருந்தது ,ஆனால் பள்ளி பாடம் புத்தகம் மட்டும் உஉவ்வே................. வெறும் காதல் கதைகள் ,க்ரைம் கதைகள் என்று மட்டும் தான் வாசிப்பை நிறுத்தி வைத்திருந்தேன் ,பிறகு அது சலித்து போய்விட்டது எளிதாக முடிவை யூகிக்கும் அளவிற்கு வாசிப்பானுவபம் வளர்ந்து விட்டது ,பிறகுதான் இலக்கிய தரமான கதைகளை நாடினேன் ,அப்படி படித்ததுதான் கா.நா.சுவின் பொய்த்தேவு ,சோமு என்கிற மனிதனின் வாழ்க்கை பின்னாலே சென்று பார்த்த அனுபவம் கிடைத்தது ,இலக்கிய சூழலில் வெகுவாக கவனிக்க பட்ட நாவல் ,பிறகு
ஜெயகாந்தனின் சிறுகதைகள்
சுஜாதாவின் கதைகள் ,அவர் இறந்த பின்புதான் அதிகமாக அவரை வாசிக்க ஆரம்பித்தேன் ,இப்படியாக முக்கிய தலைவர்களின் வரலாறுகள் படிப்பது ,ஆய்வு நூல்கள் படிப்பது என்று என் வாசிப்பின் திசையை மாற்றி கொண்டேன்

எனது கல்லூரிக்காலத்திலே ப்ளாக் என்று ஒன்று இருப்பதை அறிந்திருக்கிறேன் ,ஆனாலும் தீவிர கவனம் பெறவில்லை ,இரண்டு வருடத்திற்கு முன்பே இப்பொழுதைய பெருந்தலைகளின் பதிவுகளை படித்து வந்தேன் ,இவர்கள் எப்படி இவ்வளவு பிரபலம் ஆனார்கள் என வியந்தேன் ,போன வருடம் மே மாதத்தில் முன்பு வேலை பார்த்த கம்பெனியில்  அக்கௌன்ட் செக்சனில் வேலை பார்த்த பெண் தமிழ்மணத்தை ஓபன் செய்து பார்த்து கொண்டிருந்தார் ,அதை பார்க்க நேர்ந்தது ,இதன் மூலமாக எல்லோரும் பிரபலாக இருக்கிறார்கள் என்று தெரிந்தது

ஆஹா மணி ஓபன் பண்றா  ப்ளாக்க  நாமளும் நாலு பேருக்கு இம்சைய குடுப்போம் ,இப்படியாக எனது வலைப்பதிவு  வரலாறு தொடர்கிறது ,தொடருமா என்றால் சந்தேகமே ?

நேற்று பகலில் வீட்டிற்கு உணவருந்த சென்ற பொழுது வீட்டில் இரு பெரியவர்களை உபசரித்து கொண்டிருந்தார்கள் எங்கள் வீட்டு பெரியவர்கள் ,நான் அவர்களை இதுவரை பார்த்ததில்லை ,என் அப்பத்தா வெகு இயல்பாக உரையாடி கொண்டிருந்தார் .நான் அவர்களிடம் "வாங்க " என்று கூறிவிட்டு உள்ளே சென்று விட்டேன் ,மீண்டும் வெளியில் வந்த பொழுது அவர்கள் கிளம்பி கொண்டிருந்தார்கள் ,அப்பாட போயிட்டாய்ங்க என்று டிவி பார்க்க ஆரம்பித்தேன்

உணவருந்தும் பொழுது அம்மாவிடும்
"வந்தைவிங்க யாரு "
"உன்னைய மாப்பிளை கேட்டு வந்தாங்கடா "
"என்னயாவா"
மீண்டும் "என்னைவா "(ப்பாரா நம்மலகூட மாப்பிள கேட்டு வர்றாய்ங்கலே)
"நீங்க என்ன சொன்னீங்க "
"இப்போதைக்கு பொண்ணு பார்க்கிறமாதிரி இல்லைன்னு உங்க அப்பா சொல்லீட்டாருடா "
அப்பாடி த்தப்பிச்சேண்டா சாமி ,எல்லாம் எங்கப்பத்தா பண்ணுகிற வேலை எனக்கு சீக்கிரம் திருமணம் செய்து விட வேண்டும் ,முயற்ச்சிக்கிறார்

திருமணம் என்பது ஒரு சரியான கமிட்மென்ட் ,திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை வேறு ஒரு திசையில் செல்லும் ,ஆனால் என் பள்ளி நண்பர்கள் ,கல்லூரி நண்பர்கள் நிறைய பேருக்கு திருமணம் ஆகி குழந்தை கூட இருக்கிறது ,அதற்காக இவனுக்கு வயாதகிவிட்டது என்று நினைத்து விடாதீர்கள் , எனக்கு இப்பொழுதான் 26 வயதே நடக்கிறது ,இந்த மே 6 வந்தால்தான் எனக்கே 27 வயதே தொடங்கும் ,இன்னும் ஒன்றை வருடமாவது செல்லும் திருமணம் செய்து கொள்ள 

ஓவர் மொக்கையா இருக்கா............ வேண்டுமென்றால் எனது பள்ளிகாலத்தில்  இறுதியில் நடந்த இரு சம்பவங்கள் கூறுகிறேன் சிரித்து விட்டு போங்க 

  1. அன்று பதினொன்றாம்வகுப்பு என்று நினைக்கிறேன் ,வகுப்பு தொடங்கியது ,முதல் பீரியட் ஆங்கிலம் ,ஆங்கில ஆசிரியர் வந்தார் ,மிகவும் நல்ல ஆசிரியர் படம் நடத்துவதற்கு பதிலாக அதிகமாக கதை சொல்லுவார் ,ரோமியோ ஜூலிஎட்,ஹாம்லெட் , ஈடிபஸ் காம்ப்ளெக்ஸ் குறித்த உலகின் முதல் கிரேக்க நாடக கதை (ஈடிபஸ் காம்ப்ளெக்ஸ் கிட்ட தட்ட அதன் பின்னணியில் பாலுமகேந்திரா படம் எடுப்பதற்காக ஜெயமோகனால் எழுதப்பட்ட "அனல்காற்று ",  நாவல் சமீபத்தில் தான் படித்தேன் ,காமத்தின் மன அதிர்வளைகளுடன் போராடும் ஒருவனின் அவனது பார்வையில் கூறப்படுவதாக இருக்கும் )ஆனால் அன்று என்ன நினைத்தாரோ பாடம் எடுக்க போகிறேன் என்று கூறினார் ,ஆங்கில துனைபாட பாட நூலை வாங்கினார் ,அந்த புத்தகம் முழுவதும் கதைகளாகத்தான் இருக்கும் வில்லியம் ஷேக்ச்பியரின் " Twelth night"
எடுக்க போவதாக அறிவித்து "twelth night" போர்டில் எழுதினார் ,அப்பொழுது கீழே ஆபீசில் இருந்து அழைப்பு வரவே ,அப்படியே நிறுத்தி விட்டு சென்று விட்டார் 
முதல் இரண்டு பெஞ்ச்களில் பெண்கள் அமர்ந்திருப்பர் ,நான் அதற்க்கு பின்னால் அமர்ந்திருப்பேன் ,எழுந்தேன் ,போர்டு அருகே சென்றேன் ,"twelth" அழித்து "first" என்று மாற்றினேன் ,வகுப்பறையே சிரிப்பலையில் ஆழ்ந்தது ,அந்நேரம் பார்த்து மீண்டும் ஆபிசில் இருந்து ஒருவர் வந்தார் ,டெர்ம் பீஸ் கட்டாதவர்களை correspondent அழைப்பதாக கூறினார் ,சில மாணவர்களில் கூட்டமாக சென்றோம் ,அந்த பள்ளியில் குறித்த தேதியில்  பீஸ் கட்டவில்லைஎன்றால் வீட்டிற்கு அனுப்பி விடுவர் ,வீட்டிற்கு சென்று  பணத்தை வாங்கி வரவேண்டும் என்று கூறுவார் ,இதற்காகவே நான் வேண்டுமென்றே காலம் தாழ்த்தியே பீஸ் கட்டுவேன் ,அப்பொழுதானே நன்றாக ஊர் சுற்றலாம் ஹி ஹி ஹி ,ஆனால் நான் சென்றவுடன்  பிரின்சிபால் ரௌண்ட்ஸ் வந்திருக்கிறார் ,எல்லா வகுப்பறையும் அமைதியாக இருக்க இந்த வகுப்பறையில் சத்தம் வருகிறதே என்று எட்டி பார்த்திருக்கிறார். கட் .........அடுத்தநாள் நான் வழக்கம்போல்  பள்ளி சென்றேன் ,வகுப்பறைக்கு சென்றதுதான் தாமதம் ,உன்னை கீழே அழைக்கிறார்கள் என்று செய்தி வந்தது , கீழே சென்றேன் ,பிரின்சிபால் ரூமிற்கு அழைத்து சென்றார்கள் ....correspondent டின் மூத்த மகன்தான் ப்ரின்சிப்பால் ,இளைய மகன் ,அந்த பள்ளியில் தவறு செய்யும் மாணவர்களை அடிப்பதற்காகவே அவர்களின் சொந்தக்காரர் ஒருவர் வந்து போவார் (லிட்டில் லிட்டில் பண்ணியாரம் ,குட்டி குட்டி இடியாப்பம்  என்று குனியவைத்து முதுகிலே தன்னுடைய கர்லாக்கட்டை கைகளினால் அடிப்பார் பாருங்கள் ,மூச்சே நின்றுவிடும் )இவர்கள் நால்வரும் கையில் பிரம்புடன் நின்று கொண்டிருந்தார்கள் ,உள்ளே சென்றதுதான் தாமதம் ,உங்க வீட்டு அடியா ,எங்க வீட்டு அடியா ,மூச்சு தெனற தெனற அடித்துவிட்டு ............கிரௌண்டில் மணலில் முட்டிங்கால் போடவிட்டாகள் .பெண்கள் எல்லோரும் பார்த்து வாய்க்குள்ளே சிரித்து சென்றது இன்னும் வலிக்கிறது 

2. எங்கள் வீட்டில் ஒரு ஆறு தெரு தள்ளி நடந்த சம்பவம் அந்த சிறய தெருவை அடைத்த  மாதிரி சைக்கிளை நிறுத்தி நானும் என் நண்பனும் அமர்ந்து பேசிகொண்டிருந்தோம் ,நண்பனின் 'ஆள் ' சற்று நேரத்தில் இந்த பாதை வழியாக வருவார் ,வந்து சென்றவுடன் போகலாம் என்று கூறினான் ,இயல்பிலே எனக்கு உதவி மனப்பான்மை அதிகம் (உண்மை காரணம் :நண்பனின் 'ஆள் ' லின் தோழி )திடீரென்று அந்த இடத்தில் இருவர் பிரசனமானார்கள் .இருவரும் கைகளில் லத்தி போல் உருண்டையாக ,நீளமாக ,குச்சி வைத்திருந்தார்கள் ,வந்தசோறில் , என் நண்பனின் தோள்பட்டையில் ஒரு அடி வைத்திருந்தார்கள் ,"ஏண்டா சந்த அடைச்சு போட்ட மாதிரி சைக்கிள நிறுத்தி டாப் அடிக்கிறீங்களா ம்ம்ம் " இன்னொருவர்" சைக்கிள எடுங்கடா " ஆஹா போலிசு மப்ப்ட்டீள வந்திருக்காய்ங்க மீண்டும் என் நண்பனின் முதுகில் அடிவைத்து ,பிறகு என்னை கவனிக்க வந்தனர் ,நான் என் நண்பனை பார்த்தேன் அவன் அதற்குள் சைக்கிளை எடுத்து காத தூரம் சென்று விட்டான் (ஐயையோ சிங்கம் தனியா சிக்கிடிச்சே அசிங்கமா போய்டுமே என்று அந்த தெருவாசிகள் நினைத்திருப்பார்கள் )அந்த இருவரும் மாற்றி மாற்றி முட்டிங்காலிலே அடிக்கிறார்கள் ,நான் சற்று முன்நகர்ந்தால் முதுகில் அடிக்க ஏதுவாகி  விடும் என்ற  காரணத்தினால் அந்த இடத்திலே பரதநாட்டியம் ,கதக்களி ,குச்சுபுடி என கலவையாக நடனமாடி கொண்டிருக்கிறேன் அந்த இடத்தில ,தெரு முழுக்க கூட்டம் கூட்டமாக வேடிக்கை பார்த்தனர் ,அதில் நண்பனின் 'ஆள் ' 'ஆளின் ' தோழி , 
அப்படியே அடியை வாங்கி கொண்டு சற்று நகர்ந்து நகர்ந்து ,சைக்கிளில் ஏறி விரட்டி சென்றேன் ,சிறிது தூரத்தில் என் நண்பா இஈஈஈ இளித்தவாறு நின்று கொண்டிருந்தான் 'டேய் உன் கூட வரப்பெல்லாம் யாருக்கிட்டையாவுது அடிவாங்கி குடிக்கிரியடா ,அப்பிடி நா என்னடா துரோகம் செஞ்சேன் " இன்னைக்கு மிஸ்சா ஆய்டுச்சு நாளைக்கு வருவோம் ," என்றான் ,என்னது நாளைக்கு வேறையா "அடப்பாவி முட்டிங்காலுக்கு கீழ விண்ணு விண்ணுனு தெரிக்குதுடா ,இதுல நாளைக்கு வேறையா......... டே அப்படியே ஓடி போய்டு கல் எடுத்து மண்டைய ஒடேச்சே புடுவேன்  " 
பிறகென்ன........... வலியோடு சைக்கிளை ஒட்டி சென்றேன் .ம்ம்ம் இப்பொழுது அந்த தெருப்பக்கம் செல்வதில்லை 

தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில மான்போல வந்தவன யார் அடிச்சாரோ யார் அடிச்சாரோ யார் அடிச்சாரோ யார் அடிச்சாரோ ...............................................................ரோ

                                               

Read More

13.1.11

எனது சைக்கிளும் டாக்டர் விஜய்யும்

                             கி.பி 1996  ஆம் வருடம் .உலக சரித்திரத்தில்  ஒரு பொன் நாள் .பள்ளிகளில் ஆண்டு பரிட்ச்சை முடிந்து  விளையாடி கொண்டிருந்த எனக்கு ஒரு சோதனை நண்பன் வடிவில் வந்தது .

டே இவனுக்கு சைக்கிள் இன்னும் ஓட்டத்தெரியாதுடா இதுல இவரு ஏழாப்பு வேற போக போறாரு

வெங்குண்டேன் வேங்கையாய் . முடிவெடுத்தேன் 

அச்சோதனைகளில் வரும் வேதனைகளை துச்சமென கருதி சாதனைகளாக்க சபதமிட்டேன்

இன்னும் இரண்டே நாட்களில் சைக்கிள் ஒட்டி காட்டுவேன்  என்று

முயற்சி திருவினையாக்கும் என்ற அய்யன் திருவள்ளுவரின்  குறளுக்கிணங்க முயற்சியை  மூச்சாய் சுவாசித்தேன்

பிறந்த குழந்தையை அந்த சைக்கிளில்  உட்க்கார வைத்தால்  கால் தரையை தொடும் . மூன்றாம் வகுப்பு படித்த என் தம்பியை அழைத்து

டே கெட்டியா  புடுச்சுக்கோடா அண்ணே கீழ விலுந்துடுவேண்டா

இரண்டே நாளில் ஓட்டி காட்டினேன் . அந்த இரண்டு நாட்களில் எனக்குதான் எவ்வளவு சோதனைகள் அப்பப்பா 

சைக்கிலோடு தெருவோர  சாக்கடையில் விழுந்தேன் .மூழ்கினேன்

அவசரத்தில் முன் பிரேக்கை பிடித்து முன் மண்டையில் காயம் ஆக்கி கொண்டேன்

இந்தளவிற்கு சோதனைகளை சந்தித்த நான் .என் தந்தையிடம் அழுது புலம்பி

இனிமேல் ஸ்கூலுக்கு சைக்கிள் தான் போவேன்

வாங்கி குடுத்தார் .கேப்டன் சைக்கிள் ( அவரு சைக்கிள் இல்லைங்க இது சைக்கிள் கம்பெனி பேரு )

 பாவையர்கள்  கூட்டமாக நடந்து வரும் போது அந்த கூட்டத்திற்குள் மணி அடித்த வாரு
சென்று அவர்களை விலக்குவேன்

எதுத்தார் போல் வரும் பெண்ணின் சைக்கிளை   இடிப்பது போல் சென்று விலகி மிரட்டுவேன்

அப்படித்தான் ஒரு நாள் ஒரு பெண்ணை சைக்கிளில் துரத்தி சென்ற பொழுது அங்கே சிறுகல் வில்லனாக முளைத்து எனது சைக்கிள் டயரை இடறி விட .அது அப்படியே  ஓரமாக நின்ற ஒரு பெண்மணியை மோத நான் ரோட்டில் விழ விட்டிற்குள் இருந்து  ஒருவர்  கட்டை எடுத்து கொண்டு என்னை அடிக்க ஓடிவர

' தல 'யின் படமான தீனா படத்தை முதல் காட்சி பார்ப்பதற்காக சென்ற பொழுது .பெட்டி வர சிறிது தாமதம் ஆகும் என தெரியவர .தியேட்டரில் உள்ள கண்ணாடியை உடைப்பதற்கு ஐந்து கல்கள் பறந்தன .அதில் ஒன்று   நான் விட்டெறிந்த கல் .ஆனால் ஒரு கல்லோ பாதுகாப்பிற்காக வந்த போலிசின் மண்டையை உடைத்தது . இவை எல்லாவற்றையையும் மேன் மாடத்திலிருந்து பார்த்து கொண்டிருந்த தியேட்டர் ஊழியர் ஒருவர் என்னை நோக்கி கை காட்ட .வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாய் சைக்கிளில் சீறி தப்பித்தேன் (சிக்கிருந்தா செதச்சிருப்பாய்ங்களே )

அப்படி பட்ட வரலாற்று சிறப்பு மிக்க எனது சைக்கிள் .சரியாக 2001  நவம்பர் 15  ஆம் தேதி தியட்டேருக்கு வெளியில் நிறுத்தி விட்டு உள்ளே சென்று டிக்கெட் எடுத்து விட்டு வந்து பார்க்கிறேன்

சைக்கிள் நின்று கொண்டிருந்தது

ஆனால் . என் சைக்கிள் மாதிரியே உள்ள வேறொரு சைக்கிள் . என் சைக்கிள் சாவியை போட்டு பார்த்தேன் .சேர்ந்தது . எவரோ மாற்றி எடுத்து சென்று விட்டார் போல என்று காத்திருந்தேன் .சரி வேறு பக்கம் சென்று தேடி  பார்ப்போம் என்று போனேன் .தேடினேன் .கிடைக்கவில்லை .மீண்டும் அதே இடத்திற்கு வந்தேன்

அந்த சைக்கிளையும்  காணவில்லை .பிறகென்ன செய்ய டிக்கெட் எடுத்த மொக்க படத்திற்கே சென்றேன்

அந்த படம்  இளைய தளபதி நடித்த ஷாஜகான் .சைக்கிள் தொலைந்து போன தலைவலியை விட படம் பார்த்த தலைவலி அதிகமாக இருந்தது

சைக்கிள் போச்சே

Read More

2.1.11

காதலும் கல்யாணமும்

            காதல் என்றால் என்ன ? ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஏற்படும்  ஒரு விதமான ஈர்ப்பு நாளிடைவில் அது ஒரு அன்பாக மாறுகிறது .அதற்கு காதல் என பெயரிடப்படுகிறது .
            கல்யாணம் என்றால் என்ன ? ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் ஒரு சமுதாய பந்தம்  .ஒரு புது வாழ்க்கை தொடக்கம்
           "யோவ் இதல்லாம் எங்களுக்கு தெரியாதா ? இதையெல்லாம் ஒரு ஒன்னாம் கிளாஸ் பைய்யன கூப்ட்டு கேட்டா கூட சொல்வானையா " என்று நீங்கள் நினைப்பது புரிகிறது
ஆனா  எனக்கு தெரிந்தவைகளைதானே எழுத முடியும் .ஏனென்றால் நானே ஒன்னாம் கிளாஸ் பைய்யந்தானே ( கொஞ்சம் ஓவர் மொக்கையா  போகுதோ )

 சரி மேட்டருக்கு வருவோம் (  கற்பனை குதிரையை அடக்குங்கள் )

             என்  நண்பர் ஒருவர் சுமார் பத்துவருடங்களாக தெரியும் ..ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிகிறார் . அது போக ஒரு கம்ப்யூட்டர் செனட்டர் வைத்திருக்கிறார். அதுவும் இது ப்ராஜெக்ட் சீசன் .
கல்லூரிகளில் ப்ராஜெக்ட் என்ன லெவெலில் இருக்கிறது என்று பார்க்கபோவதாக கூறி மட்டம் போட்டு ஊர் சுற்றுவதற்குதான்  ப்ராஜெக்ட் கண்டுபிடித்திருப்பார்கள் போல . நல்ல தொழில்  . அந்த நண்பர் ஒரு பெண்ணை காதலிக்கிறார் .அந்த பெண்ணும் தான். ஆனால் பெண் கிறிஸ்த்துவ மதத்தை சேர்ந்தவர்  .நம் நண்பர்  இந்து மதத்தை சேர்ந்தவர் .விண்ணைத்தாண்டி வருவாயா போல் உள்ளதா . என்ன ஒன்று இங்கு   இந்த காதலுக்கு நம் நண்பரின் தந்தைதான் போர்க்கொடி உயர்த்துகிறார் .
             ஒரு 26  வயதான ஒரு வாலிபன் .நல்ல பணியில் இருக்கிறார் .அது போக சுயமாக தொழில் செய்கிறார் .அந்த கம்ப்யூட்டர் சென்டரில் நான்கு பேர் பணிபுரிகிறார்கள் .அவர்களுக்கு மாத சம்பளம் மட்டுமே 24000 /- ரு செலவாகிறது .ஆனால்  அவருடைய வாழ்க்கையை தீர்மானிக்க அவருக்கு அதிகாரம் வழங்க படவில்லை . எளிதாக வீட்டை விட்டு வெளியில் வந்து அவர்களால் கல்யாணம் செய்து கொள்ள முடியும் . ஆனால் அந்த பெண் ஒத்து கொள்ளவில்லை .
            சென்னை திருவெற்றியூரில் உள்ள எனது உறவினர் பெண் .எனக்கு முறை பெண்ணும் கூட .அந்த பெண் சிறுவதில் இருந்தே அவர் வீட்டு அருகினில் இருந்த பையனை காதலித்திருக்கிறார் .அந்தபைய்யன்  பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்ப்பது தெரிந்து  வீடேறி பெண் கேட்டிருக்கிறார் . மறுக்கபட்டிருக்கிறது வெவ்வேறு ஜாதி என்பதால் .அந்த பெண்ணின் பெரியப்பா என் தந்தையிடம்  நடந்தை எடுத்து கூறி எனக்கு மணமுடித்து வைத்துவிடலாம் என்று பார்த்திருக்கிறார் ." அவுங்கம்மா சாப்பாடு  ஊட்டி விட்டாதான் ஒழுங்காவே சாப்பிடுவான் அவனுக்கு போய் கல்யாணமா " என்று நாசூக்காய் தவிர்த்துவிட்டார் என் தந்தை  .இப்பொழுது அந்த பெண்ணை அவர்களது சொந்த ஊரில் வைத்து  அந்த காதலை பிரிக்கும் முயற்சி நடந்து கொண்டிருப்பதாக கேள்வி .
          இன்னொருநண்பர் அவரது  இனத்திலே உள்ள பெண்ணைத்தான் காதலிக்கிறார் .அந்த பெண்ணும் தான் . ஆனால் இந்த காதலில்  நண்பருடைய சம்பளம் தடையாக உள்ளது .அந்த பெண்ணிற்கு பார்த்த மாப்பிள்ளையை  விட நண்பர் குறைவாக சம்பளம் வாங்குகிறார்

         காலங்கள் உருண்டோடினாலும் காதலுக்கு எதிர்ப்பு அவ்வாறே உள்ளது .ஒரு வேளை பெற்றோர் ஆனபின் நானும் இவ்வாறு நடந்து கொண்டாலும் ஆச்சிரிய படுவதற்க்கில்லை . மதம், ஜாதி , பணம் முறையே இதை காரணம் காட்டி தங்களின் கௌரவத்தை சமுதாயத்தில் நிலைநிறுத்தி  கொள்கிறார்கள் பெற்றோர்கள் . அந்த கௌரவத்திற்காக தன் மகனையோ மகளையோ பலி கொடுக்க தயாராக இருக்கிறார்கள்
இந்த மாதிரி காதலும் எதிர் காலத்தில் கள்ள காதலாக மாற வாய்ப்பிருக்கிறது .

 சரி இதையெல்லாம் விடு உன் காதலை பற்றி கூறு என்கிறீர்களா . எனக்கு காதல் பிரச்சனையில்லை காதலிகள் தான் பிரச்சனை. எல்லாம் ஒரு தலை ராகம் .என்ன செய்வது .இது குறித்து கடவுளிடம் அளாவுகையில் " உனக்கு வேறு பல சோதனைகள் உள்ளது இந்த  சோதனைகள் உனக்கு எந்த  ஜென்மத்திலும் நடக்க வாய்பேயில்லை " என்று கூறிவிட்டார்
Read More

18.12.10

நண்பேன்டா

             ஏரியா டீக்கடையில் நானும் என் நண்பன் விஜய்யும் தேநீர் பருகிகொண்டிருந்தோம்.

" டே நவீன் வர்றாண்டா " விஜய்

"வாடா மச்சான்  ஒரு  தம்மு சொல்றா " நான்

"டே வாங்க டா சரக்கே வாங்கித்தரேன் " நவீன்
நேரம் காலை 10 மணி .வெயில் சுள்ளென்று அடிக்க ஆரம்பித்தது

"என்னடா செழும்பா இருக்க  போல " நான்

" உங்கப்பாரு பைய்ல அதிகமா அடிச்சிட்டியோ " விஜய்

" இல்லடா எக்ஸாம் பீஸ்னு எக்ஸ்ட்ராவா மீட்று போட்டேன் " நவீன்
ஒயின் ஷாப்பிற்குள் நுழைந்தோம்


" என்ன பீர் சொல்லலாம் " நவீன்

" அதுக்கு பதிலா மு ................... குடிக்கலாம் , எதுவாது ஹாட் சொல்லு " நான்

" அவ்வளவு காசு இல்லடா " நவீன்

" அவ்வளவு காசு இல்லைனா என்ன வெளக்கனைக்குடா  எங்கள தள்ளீட்டு வந்த " நான்

" சரி விடுறா இதையே அடிச்சுட்டு போவோம் " விஜய்
ஆளாளுக்கு ஒவ்வொரு பீர் வந்தது . அடிக்க ஆரம்பித்தோம்

" டே மணி பக்கத்து டேபிளுக்கு அடியில பாரு ஒரு குவாட்டர் இருக்கு " விஜய்

" மணி எவனையும் ஆளக்காணோம் எடுத்து சீக்கிரம் பாகெட்டுக்குல வச்சுக்க வெளிய போய் அடிச்சுக்குவோம் " நவீன்

அதே போல் செய்தேன்

பீர் அடித்து முடிக்கும் தருவாயில் பக்கத்து டேபிளுக்கு ஒரு வந்தான் ,நல்ல கட்டுமஸ்தான உடம்பு ,டேபிளுக்கு அடியில் கையை அலைத்தான்.
" தம்பிகளா இங்க ஒரு குவாட்டர் இருந்துச்சு பாத்தீங்களா "

" அண்ணே இவன் தானே பாக்கெட்ல எடுத்துவச்சான் " நவீன்

கைநடுக்கத்துடன் அவனிடம் எடுத்து குடுத்தேன்

" காக்கா தூக்கிட்டு போயிடுமேன்னு தாண்ணே பாக்கெட்ல எடுத்துவச்சேன் "
" காக்கா தூக்கிட்டு போறதுக்கு இதென்ன வடையா குட்றா முதல  நானே என் பொண்டாட்டி பக்கத்து வீட்டுகாறேன் கூட ஓடி போய்ட்டாளேனு கடுப்புல இருக்கேன் "

வெளியில் வந்தோம்
" ஏண்டா நாக்க தொங்க வந்தேன் பாரு என் புத்திய செருப்பாலே அடிக்கனும்டா" நான்

" சரி வாடா கோவிச்சுக்காதடா அந்தாள பாத்தேலஅதான்  பயத்துல உண்மைய உளறிட்டேன் "நவீன்

"வாட போறவரைக்கும் என்னால வீட்டுக்கு போகமுடியாது வா வேற எங்கியாவது போவோம் " நான்

 "சரி வாங்க என் ஆளு இப்ப டியுசன் விட்டு வர்ற நேரம்தான் அங்க போவோம் " நவீன்


" என்னது ஆளா யாருடா " நான்

" வாங்கடா காட்டுறேன் " நவீன்

" நா வல்லப்பா நா வீட்டுக்கு போறேன் " விஜய்

" டே அவன் கெடக்காண்டா வாடா நம்ம போவோம் " நவீன்
சந்து சந்தாக கூட்டிசென்றான் , ஒரு மரநிழலில் நின்றோம்

" டே என்னடா அரை மணிநேரமா நிக்கிறோம் ஆளையே காணோம் " நான்

" இந்த இப்ப வந்துடுவாடா " நவீன்
வந்தாள் லேடி பேர்ட் சைக்கிளில். எங்கள் இருவரையும்  கடந்து சென்றாள் ,மெலிதான ஒரு புன்னகை சிந்துனமாதிரியும் சிந்தாதமாதிரியும் இருந்தது

" எப்படி  இருக்கு " நவீன்

" பாத்தாச்சுல வா வீட்டுக்கு போவம் "

நண்பனின் வீடு வந்தது "சரி சாய்ங்காலம்  பாப்போம் " நவீன்

என் வீட்டை நோக்கி நடந்தேன் , அந்த மரநிழலை தாண்டி சென்றுகொண்டிருந்தேன்
ஒருவர் என்னை  கை மறைத்து  அழைத்தார்
" தம்பி கொஞ்சம் வாங்களேன் ஒரு கையி கொறையுது ,ஒன்னு தூக்கணும் "

" என்னது தூக்கணும் " நான்

" பீரோ "

" அப்படியா சரி வாங்க போவோம் " நான்
அந்த வீடு வந்தது வீட்டிற்கு வெளியில் நாலைந்து ஆண்களும் இரண்டு பெண்களும் நின்றுகொண்டிருந்தார்கள் .
" என்னனே அதான் இவ்வளவு பேரு இருக்கீங்களே அப்பறமெதுக்கு என்னைய கூப்பிட்டீங்க " நான்

" இரு தம்பி "

" அண்ணே  இவன்தானாம்னே "நின்றுகொண்டிருந்தா ஆண்களில் ஒருவன் கூறினான்

" ஏன்டா ரோட்ல தனியா போற பொண்ண கைய வா  புடுச்சா இழுக்கிற " என் அழைத்து வந்தவர் கூறினார்

அதன் பின்
தாம் தூம் தாம் தூம் தாம் தூம் தாம் தூம் 
தாம் தூம் தாம் தூம் தாம் தூம் தாம் தூம்
தாம் தூம் தாம் தூம் தாம் தூம் தாம் தூம் 

தாம் தூம் தாம் தூம் தாம் தூம் தாம் தூம்
தாம் தூம் தாம் தூம் தாம் தூம் தாம் தூம்

கூட்டம் விலகியது அந்த லேடி பேர்ட் பெண் தெரிந்தாள்

" எந்திருச்சு ஓட்ரா அடுத்து உன்ன இந்த ஏரியா வுல பாத்தேன் " எழுதமுடியாத கெட்டவார்த்தையாக  கூறினார் .

அடிச்ச போதைஎல்லாம் எறங்கி போச்சே ஐயையோ ஒத்த கால் செருப்ப வேற காணோம்
நடந்து கொண்டே திரும்பிப்பார்த்தேன் ,ஜன்னலில் அவள் தெரிந்தாள்
அடிப்பாவி நா வாட்டுக்க ஓரமாத்தானடி நின்னுட்ருந்தேன்

அடுத்தநாள் நண்பன் நவீன் வீட்டிற்கு வந்தான்

" டே எனக்கே இப்பதான் டா மேட்டர் தெரியும் விஜயை இப்பதாண்ட வழியில பார்த்தேன்
அடி ரொம்ப ஓவராடா "  நவீன்

" பரவால்லடா நீயும் வந்திரு தேனா அடி பிரிச்சிருப்பாயிங்க ஏதோ  என்னோட போச்சுல விடு

" டே சாரிடா சரி வா சரக்கடிக்க  போவம் ,அடிச்சா கொஞ்சம் வலி  தெரியாது " நவீன்

" ஆமாடா ரொம்ப ஒடம்பு வலிக்குது   " சந்தோசத்துடன் எழுந்தேன்
அதே ஒயின் ஷாப்

" அப்பறம் மாப்ள என்ன சொல்ல " நவீன்


" ஏதாவுது சொல்றா " நான்
அடித்தோம் முடித்தோம்
வெளியில் வந்தோம்

" மச்சான் பக்கத்துல போலீஸ் குவாட்டர்ஸ் இருக்குல அங்க வரைக்கும் போயிட்டு வந்துடுவோம் "  நவீன்

" ஏன்டா தெரிஞ்ச போலீஸ் எவனும் இருக்காங்களா கம்ப்ளைன் லாம் ஒன்னும் குடுக்கவேண்டாம்டா " நான்


" டே கம்ப்ளைன் குடுக்க இல்லடா "

" அப்பறம் "    நான்

" அங்க புதுசா ஒரு பிகர இப்போ தான் ரூட்டு விட்ருகேன் ,கொஞ்சம் கூட மட்டும் வாடா " நவீன்

" என்னாது "
Read More

23.11.10

அலோபதி மருத்துவர்களும் மருந்து கம்பனிகளின் வன்முறைகளும்


             மருத்துவம் அதன் முறைகளும் எப்போது தோன்றியது ? ஆதிகாலத்தில் மனிதனுக்கு ஏற்பட்ட  பய உணர்வின் காரணமாக மருத்துவம் தோன்றி இருக்கலாம் .
இன்று ஆலோபதி மருத்துவத்துறை மிக பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது .மருத்துவர்களை கடவுளாக எண்ணுகிறோம் .ஆனால் மருத்துவத்துறை இன்றைக்கு மனிதனை மனிதத்தோடு அணுகி அவனது நோய்களுக்கு தீர்வளிக்கிறதா என்றால் சத்தியமாக இல்லை .இது ஒரு கடுமையான விமர்சனம் . இந்த விமர்சனம்  நல்ல மருத்துவர்களை பற்றி அல்ல
.
சுஜாதாவின் நகரம் சிறுகதையில் மருத்துவர்களை பற்றியும் குறிப்பாக அரசாங்க மருத்துவமனையை  பற்றியும்  எழுதிருப்பார் .அந்த கதையை படிப்பவர்கள் கண்டிப்பாக  கடைசியில் ஒரு சொட்டு கண்ணீர் விடுவார்கள் . இன்றைக்கு மருத்துவர்களை பற்றி  ஜோக்ஸ் எழுத  ஒரு கூட்டமே உள்ளது
.
சமீபத்தில் எனக்கு இருமருத்துவர்களிடம் நேர்ந்த அனுபவம்

முதலாவது . தீபாவளிக்கு இருதினங்களுக்கு முன் கொஞ்சம் கடுமையான காய்ச்சலாக இருந்தது . அருகினில் இருக்கும் டாக்டர் தேடிபார்த்தேன் ஒருவரும் இல்லை .காலையில் முழுவதும் அரசாங்க மருத்துவ மனையில் வேலை  .மாலை சேவை என்ற பேரில் அப்பாவி மக்களிடம் பணம் வசூலித்தல் . அதுவரைக்கும் பொறுக்க முடியாது என்று இரண்டு  பெரசிடாமால் வாங்கி சாப்பிட்டேன் . கொஞ்சம் தெளிவாக இருந்தது .
மாலையில் ஓர அளவிற்கு சரியாகிவிட்டது .இருந்தாலும் டாக்டரிடம் சென்றேன் .
என்னுடைய சுற்று வந்தது போனேன் .மிக சரியாக சொல்லவேண்டுமென்றால் உள்ளே இரண்டே நிமிடம் இருந்திருப்பேன் உள்ளே போனவுடன்.என் உடம்பிற்கு என்ன செய்கிறது கேட்டார் கூறுவதற்குள் செதாஸ் ச்கோப்பை நெஞ்சிலும் முதுகிலும் வைத்துபாத்தார் .பின்பு வாய்க்குள் லைட் அடித்துபார்த்தார் .நர்சை அழைத்தார் .கேலினோவோ   பிளினோவோ  என்றார் .அந்த நர்ஸ் என்னை அடுத்த ரூமிற்கு வரச்சொன்னார் .
நானும் ஆவலுடன் சென்றேன். குப்பற அடித்து படுக்க சொன்னார் .நறுக்கென்று ஒரு சைடில் குத்து குத்தினார் .(டாக்டர் தீபாவளிக்கு போனஸ் குடுக்கவில்லையா என்று கேட்கலாமா என்று நினைத்தேன் )இன்னொரு சைடிலும் போடணும் என்றார் (நல்ல வேளை கேட்ருந்தா என்ன ஆகிருக்கும்)
எனக்கு இங்கே ஒரு சிறு சந்தேகம் .கிளினிக் ,சின்ன மருத்துவ மனைகளில் , வேளை பார்க்கும் நர்சுகள் முறையாக நர்சிங் படித்தவர்கள் இல்லை .அப்படி முறையாக படித்தவர்களை வேலைக்கு  வைத்தால் அவர்களுக்கு சம்பளம் அதிகமாக கொடுக்கவேண்டும் .அதனால் 10 ம் வகுப்போ அல்லது 12  ம் வகுப்போ படித்த ஏழை பெண்களை வேலைக்கு அமர்த்தி அவர்களுக்கு நர்சிங் வேலைகளை மேம்போக்காக சொல்லி கொடுத்து 1000 மோ ,2000 மோ சம்பளம்  நிர்ணைத்து வைத்துகொள்கிறார்கள்.அவர்களும் நோயாளிகளை மேலும் நோயாளிகளாக்கி நர்சிங் படிப்பை படிக்காமலே நர்சிங் தொழிலை கற்று கொள்கிறார்கள் . இது உண்மையா ?

இந்த மருத்துவசிகிச்சைக்கு பீஸ் 200 ருபாய் .இவர்களிடமே மருந்து வாங்க வேண்டும் அதற்க்கு 250  ரூபாய்  .இந்த மருத்துவரிடம் சென்றால் நோய்க்கு  உடனடியாக தீர்வு கிடைக்கும் .அப்படி தீர்வு கிடைத்தால் அவர்கள் நல்ல மருத்துவர்கள் .மக்களின் அறியாமைக்கு ஒரு வழிசொல்லுங்கள் மருத்துவர்களே .அதென்ன உடனடி தீர்வு?

இரண்டாவது  சுமார் ஒரு மூன்று மாதங்களுக்கு முன் ENT ஸ்பெசலிஸ்ட் டாக்டர் பார்க்கநேர்ந்தது .தலைகுத்தலாகவும்  இட காதில் வலி  இருந்தது எனக்கு பொதுவாக இப்படி தலைகுத்தியது கிடையாது (ஏனென்றால் விஜய் படம் பார்ப்பதில்லை) .சரி டாக்டரிடம் சென்று பாப்போம். போனேன் (போகாமலே இருந்திருக்கலாம் ) .
உள்ளே சென்று என்ன பிரெச்சனை  என்று கூறினேன் .பரி சோதித்துப்பார்த்தார்.காதிற்குள் ஒரு கருவியை விட்டார் அது பக்கத்தில் உள்ள டிவி ஸ்க்ரீனில் காதிற்குள் என்ன உள்ளது என்பதை படமாக காட்டியது.ஒன்னும் பிரெச்சனை இல்லை நான் கொடுக்கும் மருந்தினை சாப்பிடுங்கள் சரியாகிவிடும் என்றார் .reception  ல்
பீஸ் கொடுக்க சொன்னார் .அங்கே சென்றால் மருந்து நீங்கள் இங்கே தான் வாங்க வேண்டும் என்றார்கள். மொத்தம் 800 ரூபாய் கொடுக்க சொன்னார்கள் (ஐயையோ காது வலிபோய் நெஞ்சு வலி வந்துடுச்சே )அதையும் அழுதேன் . 
கடும் மன உளைச்சலாக  இருந்தது

சில நாட்கள்  கழித்து நண்பர் ஒரு வரை சந்தித்தேன் .அவர் மும்பையில்  உள்ள மருந்து கம்பெனிக்கு இங்கே வேலை பார்த்துகொண்டிருந்தார் .அவரிடம் நடந்ததை கூறினேன் .
பொது வாக மருந்து கம்பனிக்களுக்கும் மருத்துவர் களுக்கும் ஒரு உடன் பாடு உண்டு .மருந்து கம்பனிகள் என்ன மருந்து தயாரிக்கிறதோ அதைதான் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு கொடுக்க வேண்டும் .அதற்கு மருத்துவர்கள் தனியாக கவனிக்க படுவார்கள் .
அதாவுது வீரியம் உள்ள மருந்தை தயாரித்து கொடுத்தால் நோயாளிகள் விரைவாக குணமாகிவிடுவார்கள் .அதனால் மருந்து விற்பனை பாதிக்கப்படுமாம்.ஆகவே மருந்து கம்பனிகள் எப்போதும் தரம் சற்று குறைவாக உள்ள  மருந்தை தான் தயாரிக்குமாம்
பின்பு ஒரு செய்தி கூறினார் .மிரண்டு போனேன்
எந்த ஊரிலாவுது மருந்து விற்பனை சரியாக இல்லையென்றால் . அங்கே மிக பெரிய கம்பனிகள்(அதாவுது அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற கம்பனிகள் ) காற்று மூலமாக கிருமியை பரப்பி விடுமாம் .பிறகு பன்னிகள் மீதும் பறவைகள் மீதும் பலியை போட்டுவிடுமாம் கேட்பதர்க்கு  கொஞ்சம் அதிர்ச்சியான செய்தியாக தான் இருந்தது . இது ஒரு மருந்து  கம்பனியில் வேலை பார்ப்பவர் கூறியது.
இதுவும் ஒரு வகையில் வன்முறைதானே.
Read More

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena