வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

24.10.11

கஞ்சா- சில குறிப்புகள்

                                                                                   

                     ஒரு மதிய வெயிலில் யாகப்பா நகரின் கடைசியில் உள்ள அம்மன் டீ ஸ்டால் என்ற பெயர்ப்பலகை  தாங்கிய தேநீர் கடையில் சிகுரெட்டை பற்றவைத்து முதல் புகையை வெளியில் விட்டு கொண்டே காளிமுத்து " ஒரு தடவ டோப்பு அடிச்சு பாப்போமா " என்றான் .ரஞ்சித் சோமுவை பார்த்தான் .சோமுவிற்கு ஒரு பக்கம் பயமாக இருந்தாலும் அடித்துதான் பார்ப்போமே என்று ஆவலும் எழுந்தது .சரி என்று தலை ஆட்டினான்.மேலும் காளிமுத்து  தான் படிக்கும் கல்லூரியில் சீனியர் மாணவர்கள் அடிப்பதை பார்த்திருக்கின்றேன் என்றும் அதை எப்படி பக்குவமாக சிகுரெட்டில் ஏற்ற வேண்டும் என்று தனக்கு தெரியும் என்று கூறினான் . வண்டியூர் சவுராஷ்டிரா புறம் நிறுத்தத்தில் இருந்து உள்ளே செல்லும் அனுமார் கோவில் வழியாக  ஆத்து மண்டபத்தை அடைந்தால் .அங்கே கைலியை கட்டிக்கொண்டு கவட்டை கால்களுக்குள் ஒரு மஞ்ச பையை வைத்து கொண்டு ஒருவன்  சுற்றிகொண்டிருப்பான் .அவனிடம் கஞ்சா கிடைக்கும் என்று கூறினான் காளிமுத்து .மூவரும் அங்கே செல்வதென தீர்மானிக்க பட்டது .காளிமுத்து சோமுவை சைக்கிளில் ஏற்றி கொண்டான் .ரஞ்சித் தனியாக சைக்கிளில்  வந்தான் .

சைக்கிள் ஓட்டியபடி   பேசிக்கொண்டே வந்தான் காளிமுத்து .கஞ்சா  என்பது பல மருத்துவ குணங்களை கொண்டது .அது மருந்து தயாரிப்பதற்கு பயன்படுகிறது என்றும் .  தான் படிக்கும் படிக்கும் கல்லூரியில் சீனியர் மாணவர்கள் சில பேர் டோப்பு    அடித்துவிட்டுதான் செமஸ்டருக்கு படிப்பார்கள் என்றும் .அப்படி செய்வதால் படித்தது எல்லாம் நன்றாக நினைவில் இருக்கும் என்றான் காளிமுத்து .ரஞ்சித்தும் அதை அமோதிப்பது போல் .தானும் இதை குறித்து பள்ளி பருவத்திலே கேள்வி பட்டிருக்கின்றேன் எனவும் 'யோசிக்கவே வேண்டாம்டா நாமா வாட்டுக்க சர சரன்னு எழுதி தள்ளலாம் ' என்றான்.

வைகைஆற்றில் ஏதோ மேம்போக்காக தண்ணீர் ஓடிகொண்டிருந்தது .முட்புதர்கள் ,பாறைகள் ,காயிந்து போன மனித மலங்களை தாண்டி என தாண்டி ,குதித்து சென்றனர் .ஆத்து மண்டப்பத்தருகே உள்ள கேணியில் சில பேர் தண்ணீர் எடுத்து துணிகளை துவைத்து கொண்டிருந்தனர் .சில பேர் துவைத்த துணிகளை காயவைத்து வைத்துகொண்டிருந்தனர்.முழங்கால் அளவுள்ள தண்ணீரில் சில பெண்மணிகளும் சிறு பையன்களும் குளித்து கொண்டிருந்தனர் .காளிமுத்து அவர்கள் இருவரையும் அழைத்து சென்றான் .முன்னமே வந்தது போல் யாரிடமும் விசாரிக்காமல் சென்றான் .
.'சோமு சீக்கிரம் இங்கிட்டு பாரு ... இங்கிட்டு இங்கிட்டு வேகமா பாருடா 'பல்லை கடித்து கொண்டு கூறினான் ரஞ்சித் ..சோமு  அந்த பக்கம் இந்த பக்கம் என திரும்பி கடைசியில் ரஞ்சித் கூறிய திசையில் பார்த்ததில் ஒரு பெண்மணி மார்புக்கு மேல் பாவடையை கட்டி கொண்டிருந்தாள் .
'போடா வெட்டிப்........சொன்னநோடனே பாத்திருக்கணும் செம சீனு ...நல்லாப் .........'ரஞ்சித் .
டே சும்மா வாங்கடா கூ.......... ளா கட்டி வச்சு தோல உருச்சுடுவாய்ங்க' என்றான் காளிமுத்து .

காளிமுத்து வீட்டிலிருந்து கானம் என்ற இடம் பக்கம் .அங்கே சென்று அடிக்கலாம் என்று தீர்மானித்தார்கள் .கானம் என்பது பாண்டி கோவில் கம்மாயிலிருந்து பிரிந்து வரும் ஒரு சிறிய நீரோடை .சுற்றிலும் கரும்புவயல்கள் நிறைந்தது .வரும்பொழுதே மூன்று கத்திரி சிகுரெட் வாங்கினார்கள் .சோமு " பில்ட்டர்ல ஏத்தி அடிச்சா என்ன " என்றான் .
காளிமுத்து "பஞ்சு இல்லாத சிகுரெட்டுல ஏத்தி அடிச்சாந்தாண்டா சும்மா ஜிவ்வுன்னு தூக்குமாம் .ராகுல் டாப்புலஅன்னைக்கு பேசிகிட்டு இருந்தாய்ங்க " .அதே போன்று டோப்பு அடிப்பதற்கு இன்னும் சில கட்டளைகள் உள்ளதென்றும் கூறினான்

1 ) சாதாரண சிகுரெட்டை அடிப்பது போல் இல்லாமால் ,ஒவ்வொரு முறையும்  உள்ளே கட்ட'படும் புகையானது மேலும் மேலும் நன்றாக கட்ட படவேண்டும்


2 ) ஒவ்வொரு இழுப்புக்கும் சிகுரேட்டின் சாம்பலை தட்டுவது போல் தட்ட கூடாது ,கூடுமானவரை சாம்பலை தட்டாமல் அடித்தல் நலம்


3 )  அதிமுக்கியமாக புகை வாய் வழியாக விடாமல் மூக்கின் வழியாக விட வேண்டும்


இவையெல்லாம் கஞ்சா போதை வெகு நேரம் நிற்ப்பதற்கு உதவியாக இருக்கும் என்று கூறினான் .மூன்று சிகுரெட்டில் இருந்த புகையிலை உருட்டி உருட்டி எடுக்க பட்டது .காளிமுத்து வெள்ளை காகிதத்தில் இருந்த பொட்டனமாக மடிக்க பட்டிருந்த கஞ்சாவை பிரித்து அதில் உள்ள சிறு சிறு கொட்டைகளை எடுத்தான் .அவ்வாறு எடுக்க வில்லை என்றால் அடிக்கும் போது டுப்பு டுப்பு என்று வெடிக்கலாம் என்றான் .கையை குழி கிண்ணம் போல் குவித்து அதில் சிறிது கஞ்சாவையும் சிகுரெட்டில் இருந்து எடுத்த புகையிலையை அவற்றோடு கலந்து சிறிது நேரம் கசக்கி மூன்று சிகுரெட்டிலும் ஏற்றினான்

.ரஞ்சித் கண் சொருகி கிடந்தான் . சோமுவிற்கு சிரிப்பாக வந்தது .சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் வந்தது .இருந்து விட்டு வந்து " டே காளி வர்றதுக்கு ரெம்ப நேரம் ஆச்சுடா " ரஞ்சித் 'உம்' என்றான் விழுந்து விழுந்து சிரித்தான் .
காளிமுத்து  உருண்டு பெரண்டு சிரித்து கொண்டிருந்தான் .எங்க நானும் போயி இருந்து பாக்கிறேன் என்று எழுந்தான் ரஞ்சித் .போய்விட்டு வந்து .'யே எனக்கு சுத்தமா வரலடா "
" இதுமட்டும் இல்லடா ஓவரா கொடி' ஏத்துற பழக்கம் இருக்குரவைங்களுக்கு   சீக்கிரமே வந்துடும்ல அவிங்கலாம் இத அடிச்சிட்டு செஞ்சாய்ங்கன்னா ரொம்ப நேரம் செய்யலாமா " என்றான் காளிமுத்து
 மூவரும் தள்ளாடிய படியே நடக்க ஆரம்பித்தார்கள்
" ஈ என்னடா நடக்க நடக்க வீடுகளாம் தள்ளீக்கிட்டே போகுது " சோமு
" யே ஆமா டா ஒத்த கைய தூக்கினா பத்து கையா வருதுடா " ரஞ்சித்
" நாக்கு காஞ்சு போச்சுடா .வாயா மூடி தெறந்தா பசமாதிரி ஒட்டிக்கிதுடா " சோமு
" ஆமா எனக்கும் தண்ணி தவிக்குது " ரஞ்சித்
" யே சோமு உன் கன்னுதாண்டி செமையா செவந்து போயிருக்கு பாத்துக்க வீட்டுல போயி மாட்டிக்காத "
" எங்க வீட்டுலையும் போனா கண்டுபுடுச்சுடுவாய்ங்கடா "

பேசிக்கொண்டே வந்ததில் காளிமுத்து வீட்டை அடைந்திருந்தார்கள் " ஏ அப்பிடியே சத்தம் போடமா வாங்கடா நைசா மொட்ட மாடிக்கு போய்டுவோம் " காளிமுத்து .மாடிமுழுவதும் வெயில் விரவி கிடந்தது .தரையெல்லாம் அனல் அடித்தது .மூவரும் போதையில் அப்படியே படுத்து உருண்டார்கள் .ரஞ்சித் புலம்பி கொண்டே இருந்தான் " நாமலாம் இப்ப வானத்துல பறந்துகிட்டு இருக்கோம் .இன்னும் கொஞ்ச நேரத்துல அந்த கிரகத்தை அடஞ்சுடுவோம் ." சோமுவிற்கு போதை இன்னும் கூடுவது போல் இருந்தது .காளிமுத்து அடித்து போட்டது போல் கிடந்தான்.சாயிங்காலாமாக சிறிது போதை தெளிந்தாற்போல் இருந்தது அவர்களுக்கு .
" இன்னமும் கிர்ருனுதாண்டா இருக்கு " ரஞ்சித்
.அடுத்த நாள் காலை சோமுவிற்கு உடம்பெல்லாம் அரிப்பு எடுத்தது .சொரிய சொரிய தடிப்பு தடிப்பாக வந்தது .ரஞ்சித் வீட்டிற்கு சென்றான் .
" யே என்னடா ஒடம்புபூராம் இப்படி இருக்கு .ஏதோ சீக்குடி ஒழுங்கா டாக்டர் கிட்ட போயிடு "
டாக்டரை  பார்த்து விட்டு வருகையில் " நேத்து டோப்ப அடிச்சிட்டு மொட்ட மாடிலாம் படுத்து கெடந்தோம்லையா அதான் சூடு ஏறிப்போச்சு ,கஞ்சா சூட்ட கெளப்பி விட்டுடும்போல "
அப்போது காளிமுத்து வந்தான் ." எங்கடா போயிட்டு வர்றீங்க ரெண்டு பேரும்  " சோமுவை பார்த்து " என்னடா நேத்து எப்படி இருந்துச்சு "
இன்னைக்கும் போவமா "
" ஏ நா வல்லட சாமி அது என்ன மரண போதையா இருக்கு , தண்ணி  அடிக்கனும்னா கூட சொல்லு நா வரேன் ."
" ஏ சோமு அவன் கெடக்கான் பேன்ட குண்டி ... நீ வாடா நம்ம போவம் "
" ஏ சோமு வேணாம்டா அவன் கூட போகாத இப்பதான் டாக்டர் கிட்ட போயிட்டு வந்திருக்க "
சோமு காளிமுத்துவிடம் சரி என்று தலையாட்டினான் .அவனது சைக்கிளில் ஏறி அமர்ந்தான் .விதி வரும் காலத்தில் ஒரு சிறந்த கஞ்சா குடிக்கியை உருவாக்குவதற்க்கான சூழலை அமைக்க முனைந்தது.


.

12 கருத்துகள்:

தமிழ்வாசி பிரகாஷ் said...

சிறுகதை அருமை...

Cable சங்கர் said...

சிறுகதைக்கான விஷயத்தில் ஏதோ ஒன்று குறைகிறது. பட் குட் ட்ரை.

rajamelaiyur said...

நல்ல கதை நண்பா

rajamelaiyur said...

தீபாவளி வாழ்த்துகள்


இன்று என் வலையில்

விஜய் Vs சூர்யா : ஜெய்க்கபோவது யார்?

கோகுல் said...

நல்ல எழுத்து நடை,வார்தைப்பிரயோகங்கள் நல்லாருக்கு.

அஞ்சா சிங்கம் said...

எப்பா இது என்ன அனுபவகதையா?

நீ கண்ணாடி போட்டு கண்ணை மறைச்சிருக்கும் போதே லைட்டா சந்தேகம் வந்தது ............

Sivakumar said...

//கூடுமானவரை சாம்பலை தட்டாமல் அடித்தல் நலம்//

மிகவும் தேவையான ஹெல்த் டிப்ஸ்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

உங்கள் அனுபவம் அருமை....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கஞ்சா அடித்துவிட்டு அப்படியே மயிலாத்தா வீட்டுக்குப் போனதை சென்சார் செய்தது ரொம்பச் சரி....!

MANO நாஞ்சில் மனோ said...

நல்லா இருக்குடே மக்கா.....!!!!

சம்பத்குமார் said...

வணக்கம் நண்பரே

இது எனது முதல் வருகை..

நல்லதொரு சிறுகதை

அருமையாய் எழுதியுள்ளீர்கள்

நன்றி
சம்பத்குமார்.

Unknown said...

செமையா இருக்கு மணி கலக்கிறேய்யா! ஒவ்வொரு கதைலயும் புதுசா ஒரு கோட் வேர்ட் சொல்றீங்க பாஸ்!

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena