ருத்திராட்ச மாலையில் பிளாஸ்டிக் தாலியை கோர்த்து அணிந்திருந்தார் குஷ்பு. பேஷன் என்ற பெயரில் அவர் ருத்திராட்ச மாலையுடன், பிளாஸ்டிக் தாலியை கோர்த்து அணிந்திருந்தது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிலரை முகம் சுழிக்க வைத்தது. இதற்கு முன்பு சினிமா விழா மேடையில் அமைக்கப்பட்டிருந்த அம்மன் சிலை முன்பு நடிகை குஷ்பு செருப்பு அணிந்தபடி கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த விவகாரத்தை இந்து அமைப்புகள் கடுமையாக கண்டித்தன. பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததால் மன்னிப்பு கேட்டு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் குஷ்பு.
இப்போது பேஷன் என்ற பெயரில் அவர் அணிந்திருந்த பிளாஸ்டிக் தாலியும், ருத்ராட்ச மாலையும் புதிய சர்ச்சையை கிளம்பியிருக்கிறது. தமிழ் பெண்கள் கற்பு குறித்து பேட்டியளித்து வில்லங்கத்தில் சிக்கிய குஷ்பு சுப்ரீம்கோர்ட் வரை சென்றதும் நினைவிருக்கலாம்.
|
0 கருத்துகள்:
Post a Comment